புத்தாண்டு..

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
இந்த ஆண்டில் உங்கள் அனைவருக்கும் மன-மகிழ்ச்சி பெருகட்டும்..

கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க.. வருடம் என்று ஒன்று இல்லை என்றால் ? கஷ்டம்தான்.. எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வேண்டும்தான? அதான்.. காலத்தை கணக்கு பண்ணுறதுக்கு 'வருட' முறை வந்திச்சு.


 பூமி சூரியனை சுற்றி வரும் பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளமாக வைத்துக் கொண்டு.. அது, அடுத்த முறை அதே இடத்திற்கு வந்தால், ஒரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு ஆரம்பமாகிறது. இவ்வாறு காலத்தை கணக்கிடுவதால், கால நிலைகளை மனதில் நிறுத்தி, அதற்கேற்றவாறு நாம் வாழ வழிமுறைகளை செய்து வருகிறோம்.  இந்தக் கணக்கு இல்லையென்றால், பருவநிலை எதிர்பாராமல் வந்து செல்லும், மக்களுக்கு கஷ்டத்தை தரும். (இப்ப மட்டும் என்ன வாழுதாம்.. ?)

அந்த வகையில் உலக அளவில் பொதுவான ஆண்டு முறையாக கிருகோரியன் (gregorian)  முறையில் 2010ம்  ஆண்டு முடிந்து, 2011 ம் ஆண்டு வருவதை நாம் அனைவரும் ஆவலோடு வரவேற்று.. உறவினர் மற்றும் நண்பர்களுக்குள்  தத்தம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள், முதாலவது நாளான ஜனவரி ஒன்றில்.

இந்தியாவில் பலவித நாட்குறிப்பு முறை இருப்பதனால், பல புத்தாண்டு நாட்கள்  கொண்டாடப் பட்டு வருகிறது. அவற்றுள் எனக்குத் தெரிந்த சிலவற்றை பட்டியல் இடுகிறேன் உங்கள் பார்வைக்காக..

வேறு பல புத்தாண்டு தினங்கள் (இந்தியாவில்) : 

போக பிகு : இதுதான் அசாமியர்களின் புத்தாண்டோட பேரு. இது ஒரு அரசு விழாவாகும். பாரம்பரிய உடைகளை அணிவர் ஆண்களும் பெண்களும். பெரும்பாலும் ஏப்ரல் மத்தில (13 , 14 15 தேதிகள்) வரும். 'பிகு' முறை நடனங்கள் ஆடியும், 'ஹுசுரிஸ்' எனப்படும் கீதங்களைப் பாடியும் கொண்டாடுவார்கள். சில நாட்கள் வரை இந்த கொண்டாட்டங்கள் தொடரும்.

நபோ வர்ஷோ : இது வங்காள மக்கள் கொண்டாடும் புத்தாண்டு தினமாகும். வீடுகளை புத்தம் புதிய மலர்களால் அலங்கரித்தும், வண்ண அரிசிகளை வைத்து கோலங்கள் இடுவார்கள். இதனை 'அல்பன' என அழைப்பார்கள்.  பெண்கள் சிவப்பு மற்றும் வெள்ளை சேலைகளை அணிவர், ஆண்கள் வேஷ்டி குர்தா அணிவார்கள். பெரும்பாலும் இதுவும் ஏப்ரில் 13 , 14 ,  15 தினங்களுக்குள் வரும். வருடத்தின் முதல் மாதம் பைகாசி (வைகாசி) எனவே, இந்த தினத்தை பைசாகி எனவும் சொல்லுவர்.

பெஸ்து வரஸ் :  இது குஜராத்திய புது வருட தினம் ஆகும். தீபாவளிக்கு அடுத்த அல்லது இரண்டாம் நாள் வரும். புத்தாடை உடுத்தி, 'கோவர்த்தன் பூஜா' என்னும் பாரம்பரிய வழி பாட்டு முறைப்படி , கோவர்த்தன பர்வதத்தினை நினைத்து வழி பட்டு. உற்றார் உறவினர் இல்லங்களுக்குச் சென்று இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள்.  தீபாவளிமுதல் அடுத்து வரும் ஐந்தாறு தினங்கள் வரை கொண்டாட்டம்தான். பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு விடுமுறைதான். வணிக வழக்குகளும் இருக்காதுதான். புதிய காரியம் எதனையும் அதற்குப் பின்னரே ஆரம்பம் செய்வார்கள். தீபாவளியை விட, புத்தாண்டை பட்டாசு, வானவேடிக்கைகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

யுகாதி : யுகத்தின் (வருடம்) ஆதி (ஆரம்பம்) என்கிற அர்த்தத்தில் இந்த நாள் மார்ச் 13 முதல்,  ஏப்ரல் 15 க்குள், அமாவாசையை ஒட்டி வரும். இதனை ஆந்திர மாநில தெலுகு பேசும் மக்கள் கொண்டாடுகின்றனர். வீடுகளை சுத்தம் செய்து, மாவிலை, தென்னை இலை தோரணம் கட்டி, காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை உடுத்தி, இறைவனுக்கு படையலிட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி கொண்டாடுவார்கள். 'யுகாதிப் பச்சடி' எனப்படும் பல்சுவை பச்சடி இன்றைய சிறப்பு உணவு பதார்த்தமாகும்.

விஷு :  இந்த பெயரில் கேரளா மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினத்தில் காலையில் எழுந்தவுடன் கண்ணில் படும் பொருட்கள் மிகவும் நல்லதாக இருக்க வேண்டும் என்பதனாலேயே, அருகில் ஓலைச் சுவடி, தங்க ஆபரணங்கள், வெள்ளைத் துணி, பச்சை அரிசி, மஞ்சள் வெள்ளரி, வெற்றிலை, கொன்ன மலர்கள், பாதியாக வெட்டப்பட்ட பலாப் பழம், புனித கிரந்தங்கள் மற்றும் தேங்காய் ஆகியவற்றினை வெய்த்திருப்பார்கள்  எனக் கேள்வி பட்டேன். காலையில் புனித நீராடி, 'கொடி வஸ்திரம்' அணிந்து பாரம்பரிய ஆட்டம் பாட்டத்துடன், இனிப்பான அன்னமுண்டு கொண்டாடுவார்கள்.

பைசாகி : சீக்கய குருமாரின் அறிவுரைப் படி, ஜாதிகளை ஒழித்து 'கால்ச பந்த்' எனப் பெயரிட்டு நிறுவிய நாளையே, அவர்கள் புத்தாண்டு தினமாக 'பைசாகி' எனப் பெயரிட்டு கொண்டாடுகின்றனர். இது அவர்களின் அறுவடை திருநாளும் ஆகும். ஆண்களும் பெண்களும் ' ஜட்டா ஆயி பைசாகி' (வந்து விட்டாள் பைசாகி ) எனப் ஆடிப் பாடி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

தீபாவளி : ராஜஸ்தானில் இருக்கும் மார்வாடிகள், தீபாவளி தினத்தையே புத்தாண்டு நாளாக கொண்டாடுவார்கள். இந்த தினத்தில் புதிய செயல்கள் ஆரம்பித்தால் அவை வெற்றி கரமாக முடியும் என்ற நம்ம்பிக்கை கொண்டவர்கள். 

குடி பாட்வா : 'பாட்வா' அப்படீன்னா ஒரு அறுவடை பருவம் முடிந்து அடுத்த பருவம் ஆரம்பம் என்பதாகும்.  இதுவும் பெரும்பாலும் 'யுகாதி' யுடன் சேர்ந்து வரும். மராட்டியர்கள் கொண்டாடுவதாகும். பிரம்மா புராணத்தின் படி, இந்த நாளில், அண்டம், பிரம்மாவினால் தோற்றுவிக்கப் பட்டது. ராமன், ராவணனை போரில் வென்று வெற்றிச் சக்கரவத்தியாக ஊர் திரும்பிய நாளாகவும் அவர்கள் கொண்டாடுகிறார்கள். பிரம்மாவின் கொடியானது, மகிழ்ச்சியையும், வெற்றியையும் குறிப்பதானால், எல்லா வீடுகளிலும் அந்தக் கொடியினை ஏற்றி பிரம்மாவை சிறப்பிக்கிறார்கள்.

தமிழ்ப் புத்தாண்டு தினம் : இதப் பத்தி நா சொல்லி உங்களுக்கு தெரியுறதுக்கு ஒண்ணுமே இல்லை. நாமலாம் ரொம்பவே அதிர்ஷ்டம் செஞ்சவங்க.. நமக்குத்தான் வருஷத்துல ரெண்டு தடவை வருமே இந்த நாளு.. ஒண்ணு அரசுக்காக.. மத்தது நமக்காக..

----------  அப்புறம் முக்கியமா.... (நான் பார்த்து, படித்து, ரசித்தவை)
இதல்லாம் தவிர உலக அளவில் பலவிதப் புத்தாண்டு தினம் ஏதேதுன்னு தெரிஞ்சிக்கணும்னா,  கீழ்க்கண்ட சுட்டிகளைப் பார்த்து படித்துக் கொள்ளுங்கள்.

பலவித மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த சுட்டிய சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.

ஆங்... கேக்க மறந்துட்டேன்.. 'நியு இயர் ரெசலுஷன்'  எடுத்தாச்சா ? அத எப்படியாவது காப்பாத்துங்க....  'நாணயம் மாறலாம், ஆனால், நா(வின்)-நயம் மாறக்கூடாது '.... .அப்படீனா ('நியு இயர் ரெசலுஷன்') என்னவா ? படிங்க இந்த வலைமனை மேட்டர..  அப்பவாவது புரியுதான்னு பாக்கலாம். தமாஷான 'நியு இயர் ரெசலுஷன்' வேணும்னா இங்க போயிப் பாருங்க..





டிஸ்கி : 'அப்புறம் முக்கியமா'   -- சுட்டி தரும் பழக்கம், வலைச்சரம் எழுதும்போது வந்தது(நல்லாத்தான் இருக்கு).. இன்னும் என்னை விட்டு போகலை.. அதான்.. அட்ஜஸ்ட் ப்ளீஸ்..
------------------------------------------------

நா ரொம்ப பிசி..


அருமை நண்பர்களே..
இந்த மாதம், எனது வலைப்பூவில், நான் பெரியதாக ஒன்றும், எழுதமுடியவில்லை. சென்ற வாரம் தொடர்ந்து ஏழு நாட்கள் நான்  எழுதினேன் 'வலைச்சரம்' என்ற அறிமுகப் படுத்தும் வலைப்பூவில். ( இது எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தந்தது., நீங்க தான் பாவம், அறுத்தெடுத்துட்டேன்... )

அதன் பின்னர், எனது இல்லத்திற்கு வந்திருக்கும் எனது தாய் தந்தை சகோதர குடும்ப அன்பினர்களோடு இந்த வாரம் நல்லா பொழுது போக்காக ஊர் சுற்றுவதில் செல்கிறது. 
(வலைப்பூவிற்கு ஒரு வார காலம் விடுப்பு.. ஒங்களுக்குலாம் ஜாலி தான ?)


அடுத்த வாரம், அலுவலகப் பணி சம்பந்தமாக ஒரு சம்மேளனத்தில் (திடப் பொருள் இயற்பியல் தேசிய மாநாடு) பங்கேற்பதற்காக வெளியூர் செல்வதால், வலை மனைக்கு இன்னும் ஒரு வார காலம் விடுப்பு விட வேண்டியதாகிறது. (பீ ஹாப்பி, என்ஜாய். என்னால் ஏதும்  தொல்லை இப்போதைக்கு இல்லை.. ) அட.. இன்னும் யாருமே வரலை.. ஹால் காலியாத்தான் இருக்கு. இருந்தாலும் பாருங்க.. எனக்கு பிளைட்டுக்கு நேரமாச்சு (ஹி.. ஹி இன்னும் 29 மணி நேரம்தான் இருக்கு..)

ஆனா போறதுக்கு முன்னால ஒங்களுக்கிட்ட ரெண்டு பாஷலயாவது.. ரெண்டு வார்த்தையாவது சொல்லியே ஆகணும்...
 .............................
 .............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
............................. 

போயிட்டு வரேன்.. 
See You ...


வலைச்சரத்தில் எனது ஏழாவது நாள்

வெற்றி முரசு கொட்ட, எனது ஏழாம் நாள் ஆட்டம் வலைச்சரத்தில் இன்றைய பணி துவங்கியது. கடந்த ஆறு நாட்களாக நீங்கள் தந்த ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிகுந்த நன்றிகள். இன்று கவிதைகள் பக்கங்களுடன் துவங்கி.. சில கவிஞர்களை அறிமுகம் செய்திருக்கிறேன். அதன் பின்னர் 'வலைமனையில்' எழுதுவதால் சக வலைப் பதிவர்களில் இவர்களுக்கு விளைந்த நன்மைகள் பற்றி அவர்களே சொல்லும் பதிவுகளை மேற்கோள் காட்டி எழுதியுள்ளேன். அதன் பிறகு, கணணி மென்பொருள் ஒன்றின் பலதரப்பட்ட பயன்களை விளக்கத்துடன் சொல்லும் பதிவு பற்றி எழுதியுள்ளேன்.

இந்த இடுகைக்கு சென்று படித்துப் பயன் பெறுங்கள். வழக்கம் போல உங்கள் கருத்துக்களையும் இங்கும், அங்கும் வாரி வழங்கி இந்தப் பதிவினை சிறப்புறச் செய்யுங்கள்.

மீண்டும் நன்றிகள்.

வலைச்சரம் ஆறாம் நாள்


 





 


அன்பு நண்பர்களே.. உங்கள் பேராதரவோடு, வலைச்சர ஆறாம் நாள் நிகழ்ச்சிக்கு உங்களை அழைக்கிறேன்.

பலர் சொல்லுவது "நீங்கள் அறிமுகப் படுத்திவர்களில் பலர் எனக்குப் புதியவர்" என்று.
கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே ஓட்டத்தில் / வகையில், இன்றும் நாளையும் செல்வேனென நம்புகிறேன்.

இன்றைய அறிமுகத்தில், முதல் வகையில் மூன்று விதமான ஆற்றல்களைப் பற்றியும், பிறகு இயற்கை மூலிகை மருத்துவப் பயன்கள் பற்றிய பதிவுகளையும், இறுதியாக சிறப்பு வரிசையில், பின்னூட்டாளர்களுக்கு பிடிக்கும் வகையிலும் அறிமுகம் செய்துள்ளேன். சென்று படித்து உங்கள் கருத்துக்களை இங்கும், அங்கும் சொல்லவும்.

மறக்காமல் ஓட்டும் அளிக்கவும்.  வழக்கமான நன்றிகள்..

வெற்றிகரமான ஐந்தாம் நாள், வலைச்சரத்தில்

இன்றைய தினம், ஸ்ரீ. வைகுண்ட ஏகாதசி.... இதனைப் பற்றி சற்று விரிவாக, வலைபதிவு வல்லவர் (!) அண்ணன், பெ.சோ.வி அவர்கள் இங்கு சொல்லி இருக்கிறார். விரதமிருக்க சிறப்பான நாளாகும். அதாவது வயிற்றை சுத்தமாக வைத்து, ஜீரண படுத்தும் அவையங்களுக்கு ஓய்வு தரும் நாளாகும். ஒய்வு, மூளைக்கு அல்லவே.


 

 நமது எண்ணங்கள், அவற்றினை, செயற்படுத்தும் மூளைக்கு ஓய்வு தரவேண்டியதில்லை. எனவேதான், யோசிக்கும் திறன் கொண்ட மூளைக்கு வேலை தரும் கணக்குகள், கதைகளும் அடங்கிய வலைப் பதிவுகளை , ஐந்தாம் நாள் அறிமுகமாக வலைச்சரத்தில் எழுதியுள்ளேன். இன்றைய தினம் இரவு முழுவது தூங்காமல் 'பரமபதம்' (snake & lader) விளையாடுவது நன்மை தரும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளையின் விளையாட்டு நிகழ்ச்சிகளை விளக்கும் பதிவையும், வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

படித்துவிட்டு, இங்கும், வலைச்சரத்திலும் உங்கள் கருத்துக்களை சொல்லவும்.

நன்றி..

வலைச்சரத்துல எனது நான்காம் நாள் :

ஓரளவுக்கு செட் ஆகிடிச்சு.. வலைச்சரத்துல எப்படி எழுதுறதுன்னு. இன்னிக்கு, ஜாலியா , உங்களுக்கு பிடிச்ச  மேட்டரப் பத்தி பேசப் போறேன்.. மொதல்ல தின் பண்டங்கள் சம்பந்தப் பட்ட வலைப் பதிவுகள முதல்ல அறிமும் செஞ்சிருக்கேன்.

அப்புறம், வாய்விட்டு சிக்கு, கொஞ்சம் 'மொக்கை'ப் பதிவுகள சொல்லி இருக்கேன்.

அப்புறமா, மறுபடியும் சாப்பாடு சம்பந்தமா வருது.. போயி படிச்சிட்டு கருத்துக்களை சொல்லுங்க.. தொடர்ந்து ஒங்க ஆதரவு கண்டிப்பா எனக்குத் தேவை.. ரைட்டா ?
வலைச்சரம்

வலைச்சரத்தில் மூன்றாம் நாள் :


நண்பர்களே.. 'வலைச்சரத்தில்', எனது எழுதும் முறையை ரசித்து பின்னூட்டமிட்டு ஊக்கமளிக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தினம், மூன்றாம் நாள் ஆட்டத்தில், எனக்குப் பிடித்த புதிர்களைப் பகிர்ந்துள்ளேன். தொடர்ந்து, அலைபேசி, தொலைபேசி போன்றவற்றை பற்றி சக பதிவர்கள் எழுதிய பதிவுகளை குறிப்பிட்டுள்ளேன்.

அதன் பின்னர், ஒரு வித்தியாசமானவரை அறிமுகம் செய்துள்ளேன். அவர் பின்னூட்டமிட்டே பிரபலம் ஆனவர். அவர் 'எழுதினாரு'(வேற பிலாகுல), ஆனால் எழுதலை(தன்னோட பிலாகுல)....  புரிஞ்சிடிச்சா.. பிலாகிண்டமிலுக்கு போயி சரிதானா பாத்துட்டு வாங்க..
                                                          --- உங்கள் மாதவன். 

வலைச்சரத்தில் இரண்டாம் நாள் ஆட்டம்.

நண்பர்களே, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில்,
அறிமுகம் செய்யப் படுபவை..
  1. 'வாழ்க்கையில்' நமக்குத் தேவையான சிலவற்றையும்,
  2. புஸ்தகம் படிப்பது / எழுதுவது பற்றியும்
  3. கதை சொல்லுபவர் பற்றியும்

விவரங்களுக்கு வலைச்சரத்திற்கு வாருங்கள்... ஆதரவு தாருங்கள்..  நன்றி !

'வலைச்சரத்தில்', எனது முதல் நாள் பணி -

'வலைச்சரத்தில்' நான். 

வலைச்சர ஆசிரியராக இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு, பொறுப்பேற்று எழுத ஆரம்பித்தேன்.


முதலில், எனது வலைப்பூவை எனக்கே உரிய பாணியில் (அதான் வள.. வள ) அறிமுகம் செய்துள்ளேன்.

பிறகு, நான்படித்த இரண்டு வித்தியாசமான ( மொக்கத்தான், ஆனா மொக்கை இல்லை) பதிவுகளை, அறிமுகம் செய்துள்ளேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை அங்கும், இங்கும் (அட சி & பி தான்) சொல்லவும்.

நன்றி.

எ(ங்)ண்கள் கும்மி

நம்பருலாம் மட்டும் இல்லேன்னா வாழ்க்கையே இல்லை.. எதுவுமே ஒரு 'கணக்குதான்'.
நம்பருலாம், நம்பர்களா சேர்ந்து வந்தாலே தான 'மதிப்புதான்' பாருங்களேன், அதுங்க சேர்ந்து வந்து அடிக்கற 'கும்மி'...

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

----------------------------------------------------

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111



-----------------------------------------------

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888




நல்லா இருக்கு இல்லை ? அட இதெல்லாம் ஒங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?
ஐ யாம் வேரி சாரி.. ஒரு வாரமா நா ரொம்ப பிசி, அதாம் டச்சு விட்டு போகக் கூடாதுன்னு, ஃபிரண்டு அனுப்பிய இ-மெயில மேட்டர இங்க பதிவிட்டேன்.

ஆங் சொல்ல மறந்திட்டேன்.. வர திங்கக் கிழமைலேருந்து (13 டிசெம்பர் முதல் 19 டிசெம்பர் வரை) நான், வலைச்சரத்துல ஆசிரியர் பொறுப்பேற்று, எழுதப் போறேன், வந்து படிச்சிப் பாத்துட்டு ஒங்களோட கருத்துக்களை கண்டிப்பா சொல்லணும் .. சரியா ?

டிவி நிகழ்ச்சிகள் ஒப்பீடல் - இன்றைய, நேற்றைய ( 85 - 90 க்களில் -- DD ) நாட்களில்.

1985 என நினைக்கிறேன்... படித்துகொண்டிருக்கும் வயது பள்ளி நாட்களில் வெயில் விடுமுறையை கழிக்க சென்னைக்கு சென்ற பொது, டிடி யில் முதன் முதலில் தொலைகாட்சி நிகழ்சிககளை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாலை ஐந்தரை மணிக்குத்தான் தொலைகாட்சி நிகழ்சிகள் ஆரம்பமாகும். (90 களில் புதியதாக முளைத்த தனியார் தொலைக்காட்ச்சி கூட மாலை ஆறு மணிமுதல் மட்டுமே ஒ(லி)ளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது).

வார நாட்களில் மாலை 6 முதல் இரவு 9 வரை மட்டு தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். பிறகு தெரியாத பாஷை. .(அன்று தெரியாது. இன்று எழுத, படிக்க, பேச, புரிந்துகொள்ளக் கூட தெரியும்). இடையிடைய ஆங்கில நிகழ்சிகளும் உண்டு. சனிக்கிழமை மாலை ஹிந்தி திரைப்படம்.. ஹிந்தி தெரியாததால் பார்க்க மாட்டேன். ஞாயிறு முழுவதும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள்.. பார்க்கக் கூடிவையாக இருக்கும். இவ்வாறு நான் ரசித்த நிகழ்ச்சிகளுள் சில..


அன்று

வண்ணக்கோலங்கள் - காமெடி நாடகத் தொடர். (எஸ்.வி. சேகர், குட்டிபத்மினி) ஞாயிறு காலை. இதில் வரும் கணக்கு வாத்தியாரின் கணக்குகள் விடையளிக்கமுடியாமல் திணறும் பாத்திரங்கள், நமக்கு சிரிப்பை வரவழைக்கும்.

பிளைட் நம்பர் 176 : மௌலியின் நகைச்சுவை தொடர். பெரியதாக கதை சரியாம ஞாபகம் இலை.. ஆனாலும் அப்போது சிரித்துப் பார்த்த நிகழ்சிகளுள் ஒன்று.

சோவின் வந்தேமாதரம்.. மற்றும் ஒரு சில நாடகத் தொடர்கள்.. நன்றாக இருந்தது.. ஒரு சில காத்தாடி ராமமூர்த்தி, கிரேசி மோகன் நாடகங்களும் நன்றாக இருக்கும்..

செவ்வாய் தோறும் வரும் ஒரு மணிநேரம் (இடைவெளி இல்லாது) வரும் நாடகம் வித்தியாசமாக இருக்கும். மௌலி, பிரசன்னா நாடகங்கள் பார்க்கும்படி இருக்கும். அதுபோல வெள்ளிதோறும் வரும் 'ஒலியும் ஒளியும்' காண்பதற்கு நன்றாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறைதான் என்பதால அந்தந்த நாட்களுக்கு காத்திருந்து ஆர்வத்தோடு பார்ப்போம்.

எப்படா சண்டே வரும்னு வெயிட் பண்ணி மாலையில் தமிழ்ப் படம் (பழைய பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தாலும்) விரும்பி பாப்போம்..

தமிழ்ல, ஆங்கிலத்துல (DD-நேஷனல்) வாரத்துக்க் ஒரு குவிஸ் புரோக்குராமாவது இருக்கும்.. அறிவ வளத்துக்க படிக்கற (!) பசங்களுக்கு ரொம்ப யூஸா இருக்கும்.

மேற்கூறியவை அனைத்தும் DD தமிழ்த் தொலைக்காட்சியில் கண்டது. எந்த ஒரு தொடரும் 13 எபிசோடுகளுக்கு மேலே சென்று நமது கழுத்தை அறுத்ததில்லை..

இன்று
காமெடிங்கற பேருல ரெட்டை அர்த்த வசனங்கள் பார்க்கவே அருவருப்பு வருவதால் பார்ப்பதில்லை. உதாரணம் : மீண்டும் மீண்டும் சிரிப்பு, சூப்பர் 10 .

அசத்தப் போவது யாரு : ஒரு சில சமயத்துல செயற்கையா இருந்தாலும், பெரும்பாலும் இந்த நிகழ்ச்சி பரவாயில்லை...( ரிலேடிவ்லி பெட்டர்).

இப்பலாம் சினிமா, ஒலியும் ஒளியும் பாக்க தனி சேனலே அதுவும் நாலஞ்சு இருக்குறதுனால பாக்க இஷ்டமே வர்றதில்லைய்.. அளவுக்கு மிஞ்சினா எதுவுமே விஷம் தான் .

நாடகம்லாம் இப்ப போடுறதே இல்லை.. எல்லாமே மெகாத்தொடர்தான்.. எப்பப் பாத்தாலும் புரியும்... கதை அவ்ளோ ஸ்லோ.. நம்ம டயத்த வேஸ்டு பண்ணவேணாம்.. கடைசி பார்ட் (அப்படி ஒன்று இருந்தால்) பாத்தாலே பொதும்..

மனசுக்கு இதமா இன்னிசை (க்ளாசிகல் கர்நாடிக் மியூசிக்) ஒரு சில சமயத்துல ஒண்ணு ரெண்டு சானலுல வருது.. அதுலாம் நல்ல இருக்கு. எனக்கு பிடிக்கும்...

மாநில அளவுல வர்ற தனியார் சேனலுல குவிஸ் புரோகிராம் வந்து நா பாத்ததே இல்லை.. தேவையில்லாம 'தங்க வேட்டை', அதாவது பரவாயில்லை.. ரெண்டு மூணு கேள்விய கேப்பாங்க.. இப்பா வருது பாருங்க(சாரி.. சாரி.. பாக்காதீங்க), உங்க தெறமைக்கு சவாலே கெடையாது.. ஜஸ்ட் உங்க 'லக்க' மட்டும் டெஸ்டு பண்ணுவாங்க.. என்னமோ பொட்டி பொட்டியா வெச்சி ஒண்ணு ஒண்ணா, சொல்லச் சொல்ல தொறந்து காமிப்பாங்க.... என்னதாம் மேட்டரோ.. நல்லா காசு சம்பாதிக்குறாங்க போட்டிய நடத்துறவங்க..


விளையாட்டு நிகழ்சிகள் :
அன்று
All the way for Four - கிரிக்கெட் பற்றிய நிகழ்ச்சி.. ஸ்ரீகாந்த் வழங்கியவை. சக கிரிக்கேட்டரை, 'அவன், இவன்'(அவர்களுக்கு தமிழ் தெரியாது என்ற நினைப்போ என்னவோ..?) என அழைத்து கலக்குவது நமக்கு சிரிப்பைத் தூண்டும்.. 1987 ல் உலகக் கோப்பை கிரிக்கெட் பார்த்து கிரிக்கெட்டின் மீது ஒரு ஈடுபாடு வந்தது.
டி.வியில் எந்த பழைய கிரிக்கெட் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் வந்தால் தவறாது பார்த்த சமயம்.. ஒரு சில பழைய ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றதை இந்த நிகழ்ச்சியில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.

Granslam டென்னிஸ் - வருடத்துக்கொரு முறை வரும் கிராண்ட்ஸ்லாம் ஆட்டங்கள் காலிறுதி ஆட்டங்கள் முதல் பார்ப்பதற்கு ஆர்வம்..

இன்று :
எப்ப வேணும்னாலும் ஏதாவது ஒரு சானலுல கிரிக்கெட்.. அலுத்துப் போச்சு.. முக்கியமா எதிலுமே பணம்.. பணம்தான் அப்படீன்னு தெரிஞ்சதுக்கப்புறம் :
----------- "இந்தாட்டத்துக்கு நா வல்லப்பா"...

டென்னிஸ் கூட இப்பலாம் பாக்குறதில்லை.. ஏனோ தெரியல இன்ட்ரெஸ்டு போச்சு..

டிஸ்கி : நா எதையும் புதுசா சொல்லலை, என்னவோ மனசுல பட்டதை பதிவிட்டேன்.

பெற்ற இன்பம், பெருக வையகம்..

இனிதான சனிக்கிழமை....
பல விஷயங்களில் மகிழ்ச்சியாக இருந்தேன் இந்த சனிக் கிழமையில் (டிசம்பர் 4 , 2010 )..

மகிழ்ச்சி 1 :
2009-10 க் காண நிதியாண்டில் கூடுதலாக பிடிக்கப்பட்ட 'வருமான வரி', எனக்கு திரும்பக் கெடைச்சுது இன்றைய தினம். இதுல என்ன பெரிய சந்தோஷம்னு கேக்குறீங்களா..? நம்ம நாட்டுல நல்ல விஷயங்களை முனைப்பாக செய்யுறாங்க. அதப் பாராட்டனும்தான ?

முன்பெல்லாம், வருமான வரித்துறை, 'திரும்பத் தரவேண்டிய' தொகைக்கு காசோலை அனுப்புவார்கள். சாதாரணமாக ஒருவர் தரும் காசோலை, அதில் குறிப்பிடப்பட்ட நாள்முதல், ஆறு மாதங்கள் வரை செல்லுபடியாகும். ஆனால் அரசாங்கம் தரும் 'வருமான வரித் திருப்பம்' (IncomeTax Refund) காசோலை மூன்று மாதங்கள் வரைதான் செல்லுபடியாகும். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் எனக்கு அப்படி ஒரு காசோலை கிடைத்தது, இடப்பட்ட தேதியிலிருந்து ஒன்றரை மாதங்கள் கழித்து. எனக்கு அதை வங்கியில் உடனடியாக தர வேண்டிய நிர்பந்தம்.. இருப்பது மேலும் ஒன்றரை மாதங்கள்தானே. நான் கொடுத்தாலும்.. பணம் கிடைக்கவில்லை.... ஒரு மாதம் மேலும் ஆகிவிட்டதால், நான் வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தேன். அவர்கள், அந்த காசோலையை சரி பார்ப்பதற்கு வருமானவரித் துறைக்கு ஓரிரண்டு நாட்களுக்குள் அனுப்பியதாகவும்.. அங்கிருந்து மேலும் தகவல் வரவில்லையாதாலால் பணம் எனது கணக்கில் வரவில்லை என்றும் சொன்னார்கள். நான் சம்பந்தப் பட்ட ஐ.டி. அதிகாரிகளை(மண்டல தலைமை அலுவலகம்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது இக்கட்டான நிலையை சொன்னேன் (காசோலை காலம் முடிவுறும் நிலை). அவர்களும் அதனை புரிந்துகொண்டு சரியான நேரத்தில் செயல் பட்டு, எனது கணக்கில் பணம் சேர்பதற்கு ஒப்புதல் அளித்தனர். பணமும் வந்தது. ஏதோ ஒரு சில காரணங்களால் இவ்வாறு தாமதம் ஏற்பட்டதாக பின்னர் தெரிந்து கொண்டேன்.

ஐ.டி. துறையில், எனக்குத் தெரிந்தவரை நன்றாகத்தான் பணி செய்கிறார்கள்.. எனது நண்பர் ஒருவருக்கு வெறும் பதினாறு ரூபாய் வருமானவரியில் அதிகம் பிடித்ததால், ரீபண்டு, முறையாக இருபத்தி ஐந்து ரூபாய் தபால் தலை ஒட்டி (ரிஜிஸ்தர் தபால்) வந்து சேர்ந்தது சில வருடங்களுக்கு முன்னர்.

ஆனால் அந்த மாதிரி கால தாமதம் ஆகிவிடுமென இனி கவலை வேண்டாம்.. ஆமாம்.. தற்பொழுது, 'வருமானவரி ரீபண்டு' ஈ.சி.எஸ் (எலெக்ட்ரானிக் கிளியரன்ஸ் சிஸ்டம்) முறைப்படியும் தரப் படுகிறது. வருமான வரி ரிடர்ன் படிவத்தில் மீதிப் பணத்தை ஈ.சி.எஸ் முறைப் படி திரும்பப் பெரும் ஆப்ஷனையும் டிக் செய்து, உங்களது வங்கிக் கணக்கு எண்ணையும் எழுத வேண்டும். என்னைப் போல சாதாரண மனிதனுக்கு நடந்தது போல இனி அனைவருக்கும் நடக்கும் என நம்புகிறேன்.

மகிழ்ச்சி 2 :
இன்ட்லில ஒட்டு போட்டு பழகிகிட்டதால, ஊருல நடக்குற எலெக்ஷன்ல ஒட்டு போட ஆசை வந்துடிச்சு. அதற்காக எனது பெயரை எலெக்டோரல் லிஸ்டில் சேர்ப்பதற்கு, சம்பந்தப் பட்ட அலுவலகம் சென்று, விண்ணப் படிவத்தை சரியாக (!) பூர்த்தி செய்து அளித்துள்ளேன்.. (ஹி.. ஹி.. நானும் 18 + தான்.. ). பாஸ்போர்டு சைசில இரண்டு புகைப்படம்(கள்) கேட்டாங்க.. ஒன்றை அந்த படிவத்தில் கொடுக்கப்பட்ட இடத்தில் ஒட்டித் தரவேண்டும். (ஒக்கே).. இரண்டாவதை அந்தப் படிவத்துடன் இணைத்துத் தரவேண்டும். இந்த ரெண்டாவது போட்டோ எதுக்குன்னு தான் இதுவரை புரியவில்லை. வாக்களர் அடையாள அட்டைக்கு அவர்களே புகைப்படம் எடுத்துத் தரமாட்டார்களா ?

மகிழ்ச்சி 3 :
இன்று 'இந்திய கடற்படை தினம்' ஆகும்.
(4th December, Indian Navy Day)
நாட்டிலுள்ளோர் நன்றாக இருப்பதற்கு, கடல் மூலம் வரும் ஆபத்துக்களை கடற்படை மூலம் எதிர்கொள்ளும் வீரர்களை நினைவு கொள்வோம். இந்திய தினத்தில் இங்கு பொது மக்கள் பார்வைக்காக அப்படை வீரர்கள் வீர சாகசங்கள் செய்து காண்பித்தார்கள். அது பற்றி தனிப் பதிவு எழுதுவதாக நினைத்துள்ளேன்.. முடிந்தால் ஓரிரு நாட்களில் எழுதுகிறேன்.


டிஸ்கி
: இப்பலாம் இங்க எழுதுறதுக்கு 'மேட்டர்' பஞ்சமே இல்லை. இதுமாதிரி உருப்படியான (?) விஷயங்களையும் எழுதப் போறேன்..
-----------------------------------------------------------------------------

கோல்ட் மெமொரீஸ்

ஆபீசு லீவு.... வீட்டுல யாரும் இல்லை.. போர் அடிச்சுது.. அதான் பழைய புத்தக பொட்டிய எடுத்துக்கிட்டு நோண்டினேன்.. கெடைச்சது அந்த 'டீனேஜ்' ஐட்டம். 'கோல்டன்-மேமொரியோட' பாக்க ஆரம்பிச்சேன்....

தங்கமணி வர்றா மாதிரி இன்டிகேஷன். இத்தோட என்னப் பாத்தா திட்டுவாளே! பயந்துக்கிட்டே நா அத வேகமா மத்த புக்ஸுக்கு கீழ வெச்சுடலாம்னு..... ச்சே.. கையோட மாட்டிக் கிட்டோம்......

"என்னங்க.. அதக் கொஞ்சம் என்கிட்டே காமிங்க, நீங்க வேகமா செய்யுறதப் பாத்தா என்னவோ தப்பு மாதிரித் தெரியுது......", சொல்லிக் கிட்டே அத வெடுக்குனு புடிங்கிகிட்டு பாத்தாளே ஒரு பார்வை.... தீ பறந்துச்சி..

"எத்தனைத் தடவ சொல்லியிருக்கேன்.. இத மொதல்ல தூக்கி குப்பைல போடுங்கன்னு, டயத்த வேஸ்டு பண்ணிக்கிட்டு..", சொல்லிக் கொண்டே போனாள் அவள்.

"என்ன அப்படி சொல்லிட்ட, 13 மூணு வருஷத்துக்கு முன்னால இது எனக்கு எவ்ளோ வசதியா இருந்திச்சி தெரியுமா?", கேட்டது நான்தான்.

ஒடனே பதில்-கேள்வி (தங்க்சுதான்) , "அப்பவேணா அப்படி, இதுனால, இப்ப என்ன பிரயோஜனம்?"


"இது இன்னிக்கும் யூஸ் ஆகுறாமாதிரி ஒரு விஷயம் இருக்கு. ஒரு ஊருலேருந்து இன்னொரு ஊருக்கு எவ்ளோ தூரம்னு தெரியணுமா ? 13 வருஷத்துக்கு முன்னால இதுல எழுதினது, இன்னிக்கும் மாறவே இல்லை", சொன்னது நான்தான்.

கேட்டதும், கோவமா எம்மேல அவ கையில இருந்த '1997 'ம் வருஷ ரயிவே டயம் டேபிள் புஸ்தகத்த தூக்கிப் போடுறது தெரியுதா?

"என்னாது, சின்னபுள்ளத் தனமா ? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.. ஆமா......", சத்தமா நாஞ்சொன்னது ஒங்க காதுலயாவது விழுதா ?
------------------------------------------------------------

கமெண்டு மாஸ்டர்..

உங்களுக்கு தினமலர் பத்திரிக்கை டவுட் தனபாலு தெரிஞ்சிருக்கலாம்.. அவரோட கமெண்ட்ட நீங்க, படிச்சிருக்கலாம், அந்த பாணியில் இங்கே என்னோட கமெண்ட்டுகள். ( இங்கிட்டு டவுட்டு தனபாலு....   நான்தானுங்கோ..  )

+++++++++++++++++++++++++

// அதிக விலைக்கு டாஸ்மாக் சரக்கு விற்ற 2 பேர் கைது //

விற்பனையை அதிகமாக்கி லாபத்தை பெருக்கணும்னு  சொன்னத தப்பாப் புரிஞ்சிகிட்டான்களோ என்னவோ ?
-------------------------------------------------------------------------------------------------
// எதிர்கட்சி்கள் அமளி:பார்லி., முடங்கியது //

ஹி.. ஹி.. கும்மியோ கும்மி... எங்கேயும்.. எதிலேயும்..
-------------------------------------------------------------------------------------------------
// தங்கம் விலை சற்று அதிகரிப்பு //

ரெண்டு பைசா ஏறி இருக்குமோ ?
-------------------------------------------------------------------------------------------------
// கள்ளத்தொடர்பு : பாக்., பெண்ணின் மூக்கு அறுப்பு //

அதே இலங்கை பெண்ணா இருந்தா ஆரம்பத்துலேயே அன்னிக்கு கோடு போட்ட 'தம்பி' நடத்தி இருப்பாரு..
-------------------------------------------------------------------------------------------------
 //சி.பி.ஐ., புதிய இயக்குநராக ஏ.பி.சிங் நியமனம் //

அப்படியே, ஹீரோ, ஹீரோயின், வசனகர்த்தா யாராரு.... படம் எப்ப ரிலீசாகும்னு சொன்னாக் கூட நல்லாத்தான் இருக்கும்..
-------------------------------------------------------------------------------------------------
// மதுரையில் சரக்கு அனுப்புவது திடீர் நிறுத்தம்  //

'டாஸ்மாக்க'  அங்கிட்டு அனுப்புவத நிறுத்திட்டாங்களா ?
-------------------------------------------------------------------------------------------------
// சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை //


புவியீர்ப்பு சக்திய கண்டு பிடிக்கலேன்னா இப்படி நடந்திருக்காதோ ?
 -------------------------------------------------------------------------------------------------
// மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் //


ஆயுள் : அப்பனுக்கு ஸ்ட்ராங்கு....  மகனுக்கு கம்மி .....
  -------------------------------------------------------------------------------------------------
// பதவி விலகுகிறார் ஊழல் கண்காணிப்பு கமிஷனர்  //


யாரோ அவர 'கண்காணிச்சத', அவரு சரியா 'கண்காணிக்கல' போலருக்கு.....
 -------------------------------------------------------------------------------------------------
// ஜப்பானில் நிலநடுக்கம் //

அங்கிட்டு அந்தளவுக்கு குளிருதோ, நிலமே நடுங்குதாமே? 
-------------------------------------------------------------------------------------------------

டிஸ்கி : செய்தி தினமலர் -- கமெண்ட்டு மாதவன்....

நான்-வெஜ்ஜுதான் சாப்டுவேன். நீங்க?

சண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு..  அவருக்கு இங்கிலீசு அறைகொரையாதான் தெரியும்.. அவரு காய்கறி, கீரை, கிழங்கு எல்லாத்துக்கும் இங்கிலீசுல சொன்னாரு பாருங்க, சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாயிடிச்சு....

ஒங்களால சிரிக்க முடியலேன்னா, சொன்னது புரியலன்னு அர்த்தம்.. சிரிக்காம விடமாட்டீங்களா.. அப்ப சவாலுக்கு தயாரா..?
ரெடி ஸ்டார்ட் மியூசிக்... (நம்ம ராமசாமிய நெனைச்சிகிட்டு..)

  1. Life
  2. Cylinder
  3. Flower-Saturday
  4. Sucrose-Murugan Wife
  5. Coimbatore
  6. Thorndress
  7. Scissors
  8. English
  9. Half
  10. Sin

 டிஸ்கி :

  1. கடைசீல 'காய், கிழங்கு, கீரை' ஏதாவது ஒண்ணு சேர்த்துக் கொள்ளவும்.(சாப்பாட்டுல சேத்துக் கிட்டா ஒடம்புக்கு ரொம்ப நல்லது.... கிழங்குல மட்டும் கொஞ்சம் கண்ட்ரோல்.. ஒக்கே..?)
  2. பின்னோட்டம் தற்போது மாடரேஷன் செய்யப் படுகிறது..(என்னவோ நெறைய பேரு இத்தைலாம் படிச்சு பதில் போடுவாங்கன்னு நெனைச்சி..)

என்னைப் போல் ஒருவன்...

திருமணமான சமயம். மனைவிக்கொ,  புது ஊரு, புது மக்கள், புது பாஷை--  ஆனா, ஜமாய்க்கத்தான் முடியலை.. பேசினா வாய்ல தார் பூசிடுவாங்கனு பயந்துபோயி அவ கத்துக்காத  பாஷையாச்சே....  அவளுக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சி.. அதலாம் அனுபவிச்சாதான் தெரியும் / புரியும்.

அப்படித்தாங்க ஒருநாளு, நா ஆபீஸ்ல இருந்தப்ப செல்போன்ல வூட்டம்மா கூப்டாங்க..

நான் : ஹாய் செல்லம்.. சொல்லு. 

மனைவி : என்னங்க.. என்னோட காலேஜுல படிச்ச பிரண்டு ஒருத்தி.. 'சசி'னு பேரு. இந்த ஊருலதான் இருக்காளாம்போன் நம்பர் கெடைச்சு இப்பத்தான் அரைமணி பேசினேன். நம்ம அட்ரஸ் சொல்லிருக்கேன். ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு அவ குடும்பத்தோட வர்றாளாம், அதனால, நீங்க சீக்ரம் வந்துடுங்க, சொல்லிட்டேன்.

நான் : ! எஸ். கண்டிப்பா சீக்கிரம் வந்துடறேன். நல்ல வேளை ... ஒன்னோட ஏற்கனவே பழகின ஒரு ஆளு  இப்பவாது கெடைச்சாங்களே.. அது சரி அரைமணி நேரம் என்னதான் பேசின ?

மனைவி : அவளோட ஹஸ்பெண்டு, கொழந்தையப் பத்தி சொன்னா, அவ. நா ஒங்களப் பத்தி சொன்னேன். அத அப்புறமா சொல்லுறேன்.. நீங்க டயத்த வேஸ்டு பண்ணாம சீக்கிரம் வீட்டுக்கு வர்ர வழியப் பாருங்க. பை.
( 'போன்' கட் - மெசேஜ் ஓவர்)
  அட பார்ரா, பழைய பிரெண்ட் கிட்ட அரை மணி நேரம், என்கிட்டே ரெண்டெ நிமிஷம், என்ன செய்ய ? "அது சரி, என்னைப் பத்தி சொன்னதா சொன்னாளே, என்ன சொல்லியிருப்பா?" இதுதான் என்னோட மண்டைய கொடஞ்செடுத்த ஒரே கேள்வி. உசைன் போல்ட் கணக்கா 'ஆணியலாம்' புடுங்கி முடிச்சிட்டு  வீட்டுக்கு போனேன். வாசல்லையே வரவேற்பு, என்னோட வொயிஃபுதான்.

"என்னங்க, அவ்ளோ சொல்லியும் லேட்டா வர்றீங்களே?" என்றாள். "ஏம்பா, அதுக்குள்ளே உன் பிரெண்ட் வந்துட்டாங்களா?" என்ற என்னிடம், "இப்பதான் போன் பண்ணினா, இதோ பத்து நிமிஷத்துல ஒங்க வீட்டுல இருப்பேன்னு சொல்லியிருக்கா"

"அது சரி, என்னப் பத்தி உன் பிரெண்ட்கிட்ட என்ன சொல்லியிருக்கே ?", ஆசையோட கேட்டதுக்கு, வொயிஃப் சொல்ல ஆரம்பிச்சா, "உங்களைப் பத்தி சொல்லத்தான் இருக்கவே இருக்கே......   அலைபாயுதே பட ஹீரோ மாதிரி....................".
இவர்(ன்)தான் ... 'பேர்ல'.



கேட்ட எனக்கு "ஜிவ்"வென்றிருந்தது, "பேர்ல  மட்டும்!", என்று முடித்தது காதில் விழும்வரை.







டிஸ்கி : 'பல்பு' வாங்குதல் என்றால் என்ன? உதாரணம் தருக.

ரசித்த ஜோக்குகள்

காதால் கேட்ட ஜோக்குகள் :
1 ) (நன்றி எனது அண்ணன்)
ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க ?
மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்டெக்ஸ்' போட்டு இருந்தா இன்னும்
வசதியா இருக்கும்னு சொல்லுறாரு ..
ஒருவர் : அதிலென்ன தப்பு..?
மற்றவர் : யோவ், இது 'டிக்ஷனரி'
---------------------------------------------------------------------------------------------


2) லைப்ரரியியனிடம், சர்தார்ஜி :
என்ன புஸ்தகம் இது.. தலைப்பு இருக்கு.. நெறைய கதா
பாத்திரங்களின் பெயர் இருக்கு ஆனா கதையே இல்லையே ?

லைப்ரரியன் : அடப்பாவி காணோம்னு நாங்க தேடிக்கிட்டு இருக்குற
டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனது நீதானா ?
--------------------------------------------------------------------------------------
நெட்டில் நான் ரசித்த சில ஜோக்குகளை இங்கு தந்துள்ளேன்..

3) கையிலே காசு இல்லேன்னா எதுவுமே வாங்க முடியாதுன்னு சொல்லுறாங்க.. 'கடன்' வாங்கலாமே ?
--------------------------------------------------------------------------
4) காருல ரெண்டு பேரு போறாங்க.. அப்ப
டிரைவர் : கொஞ்சம் தலைய வெளியே நீட்டி சைடு இன்டிகேடர்
எரியுதான்னு பாருங்க..
சர்தார்ஜி : எரியுது.. எரியல.. எரியுது. எரியல.. எரியுது.. எரியல..
எரியுது.. எரியல.. எரியுது... எரியல..
------------------------------------------------------------------------------------------
இதேபோல வரும் வேறு ஒரு ஜோக்கு.. (கேள்விப் பட்டது)
6) பார்க்கில் ஒரு சர்தார்ஜி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.. அப்போது அவரிடம்
ஒருவர் : ஆர் யூ ரிலாக்சிங் ?
சர்தார்ஜி : நோ.. ஐ ஆம் கபீர்சிங்
-------------------------------------------------------------------------------------
-----------------------------------------------
எனக்கு கூட ஜோக்கு எழுதிச் சொல்லவரும்.... நா யோசிச்சு (!) கண்டுபுடிச்ச ஜோக்கு
8 )
ஒருவர் : என்னது அந்தாளு செந்தில் கணக்கா அடி வாங்குறாரு..?
மற்றவர் : ஆளில்லா, ரயில்வே லெவல் கிராசிங்ல ஆக்சிடண்ட
தடுக்குறதுக்கு ஸ்பீட் பிரேக்கர் போடலாம்னு
யோசனை சொன்னாரு..
முதலாமவர் : நல்ல விஷயம்தானே அதுக்கு ஏன் அடிக்குறாங்க ?
மற்றவர் : அவரு சொன்ன ஸ்பீட் பிரேக்கர்... ட்ராக்குல வர்ர
ரயிலுக்காம்..

டிஸ்கி : உண்மைய சொல்லுங்க.. எட்டாவது ஜோக்குதான எல்லாத்தையும் விட சூப்பரு..?
----------------------------------------------------------

நான் போட்ட சதம்..

ஒரு அரசன் தன்னை புகழ்ந்து கவிதை பாடிய புலவரைப் பாராட்டி,
"சற்று நேரம் இருந்து, நான் தரும் 'நூறு பொன்' பரிசினை பெற்றுச் செல்லுங்கள்", எனச் சொன்னான்.

மற்ற அலுவல் இருந்ததால் அப்புலவனுக்கு பரிசு தருவது தாமதமானது....
தன்னை அரசவையில் மறந்து விட்டார்கள் என நினைத்து அப்புலவன் மன்னரிடம்...

புலவர் : மன்னா...!! இருநூறு தருவதாகச் சொன்னீர்களே..?!!. அது இன்னும் வரவில்லை..

அரசன் : இருநூறா..? எப்பொழுது சொன்னேன் ?

புலவர் : முன்னூறு தருவதாகச் சொன்னீர்களே..

அரசன் : முன்னூறா... யார் சொன்னது ?

புலவர் : நானூறு தருகிறேன் என்றீர்கள்.

அரசன் : நான் எவ்வளவு பொன் தருவதாகச் சொன்னேன்,  சற்று விளக்கமாகச் சொல்கிறீர்களா ?

புலவர் : நீங்கள் 'நூறு' பொன் தருவதாகச் சொன்னீர்கள்.

அரசன் : அப்புறம் ஏன் இருநூறு, முந்நூறு, நானூறு என்றெல்லாம் சொன்னீர்கள், புலவரே ?

புலவர் : அரசே, நீங்கள் 'எப்படி சொன்னேன்?' என்பதற்கு 'இரு(ந்தால்) நூறு  தருவதாகவும்',  'எப்போது சொன்னேன்?' என்பதற்கு 'முன்பு -- முன்-நூறு' என்றும்  'யார் சொன்னார்' என்பதற்கு, 'நா(ன்)னூறு, தருவதாகவும் சொன்னீர்கள்', என்றேன்.

அதனை கேட்டு மகிழ்ந்து போய் அரசன், அனைத்தையும் சேர்த்து ஆயிரம் பொன்  கொடுத்தான் அப்புலவனுக்கு.(அமாம் அரசன் கணக்குல ஸ்ட்ராங்கு..)

------------------------------------------------------
எனக்கு பிடித்த  நூறுகள் ( ஹன்ரட்ஸ் )
  • மோகனின் படம் - நூறாவது  நாள்
  • பூஜைப் பொருள் -  துன்-நூறு
  • நன்பேண்டா  -  நூர்-முகமது. 
  • கார்கறி - நூர்-கோல் 
 நூறின் வடிவங்கள்:
  • தமிழ்  --
  • ரோமன் -  C
  • இரண்டடிமானம் (பைனரி) -  1100100 
  • எட்டடிமானம் (ஆக்டால்) - 144  
  • பதினாரடிமானம் (ஹெக்சா டெசிமல் ) -- 64
"என்னது, நூறப் பத்தியே சொல்லுறே ?", அப்படி நீங்கள் நினைத்தால்.... அதான இந்த பதிவோட ஸ்பெஷல்.

 டிஸ்கி : "இதெல்லாம் எனக்குக்தான் ஏற்கனவே தெரியுமே..  இதப் போயி ஒரு பதிவா, அதுவும் நூறாவது பதிவா போட்டுட்டீங்களே / போட்டுட்டியே?" , அப்படின்னா .....
  1. நீங்க பதிவரா இருந்தா.. இதப் பத்தி நீங்க ஏன் ஒங்க நூறாவது பதிவுல எழுதல  ?
  2. பதிவர்தான், நூறாவது பதிவா இதத்தான் எழுத நெனைச்சேன் அப்படீன்னா, ஐ ஆம் வெரி சாரி.. 'பர்ஸ்டு கம் பர்ஸ்டு செர்வ்', ஒக்கே ..?
  3. பதிவர் இல்லேன்னா  --- ஒங்களலாம் நெனைச்சா, ரொம்பப் பாவமா இருக்கு..( வெரி பிடி ஆன் யு )
டிஸ்கி- 2 :வள வளன்னு நான் எழுதிய கதையை, சுருக்கமாகவும் ஸ்மார்ட்டாகவும் மாற்றியமைத்து உதவிய 'வெங்கட்' அவர்களுக்கு நன்றி.

"கவாஸ்கர்" - திரைப்படம்

சுனில் கவாஸ்கர், 80 களில் அகில உலக அளவில் தலை சிறந்த கிரிக்கெட் டெஸ்ட் மேச்சு பேட்ஸ்மன். அவரோட பொறுமையான, நிதானமான ஆட்டத்தினால் எதிரணியை திணறடித்திருக்கிறார். இது பலருக்கும் தெரிந்ததே. ஆனால் அவரைப் பற்றிய இந்த செய்தி உங்களுக்கு தெரியுமா தெரியாதான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க.. விஷயம் கீழே இருக்கிறது.

80 களிலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பல வெற்றிகளை குவித்து வந்த சமயத்தில், அவருக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு அழைப்பு. 'கவாஸ்கர்' எனத் தலைப்பிட்டு, ஒரு திரைப்படம் வெளியிட இருப்பதாகவும்.. முதல் காட்சிக்கு வந்திருந்து சிறப்பித்து தருமாறும் சொன்னார்கள் அந்தப் பட தயாரிப்பாளர்கள்.

நம்ம ஆளும் ரொம்பவே உச்சி குளிர்ந்து போய், ஆஸ்திரேலியாக்கு போனாராம்.  தன்னோட சாதனைய பத்தி நம்ம நாட்டுல கூட படம் எடுக்கல, ஆனா ஆஸ்திரெலியால , தன்னோட மகிமையைப் புரிஞ்சு 'கவாஸ்கர்' ன்னு பேரு வெச்சு வெளியிடப் போற படத்த பாக்குறதுக்கு ரொம்ப ஆர்வமாயிட்டார். டால்பி ஸ்டீரியோ எபெக்டுல  ஆரம்பிச்சாங்க படத்த... 20 நிமிஷம் ஆச்சு.. 'கவாஸ்கர்' பத்தி எதுவுமோ சொல்ல ஆரம்பிக்கலை. அட.. நம்ம நாட்டுல  சின்ன ஊர் தியேட்டருல படம் போடுறதுக்கு முன்னாடி பிளாக் அண்ட் வொயிட்ல 'டாகுமெண்டரி' போடுவாங்களே(War reel) அது மாதிரி அவங்க நாட்டுலே கலர்ல போடுவாங்க போல இருக்குனு நெனைச்சிகிட்டு காத்திருந்தார்..

ஒருமணி ஆயிடுச்சி... இருந்தாலும் நம்ம ஆளு, பொறுமையாவே இருந்தாரு.. என்னதான் இருந்தாலும் தன்னைப் பத்தின படம் வரும்னு ஆர்வம் கொறையாம இருந்தாரு.... அதுக்கப்புறம் 15 நிமிஷம் கழிச்சு, பிரேக் விட்டாங்க.... அவரும் தனக்கிருந்த களைப்புக்கு தெம்பா பர்கர்-பெப்சி சாப்புட்டு ரெடியானாரு.. தன்னோட படத்த பாக்குறதுக்கு.

இன்டர்வெல்லுக்கு அப்புரமாகவும், அதே மாதிரி கண்டினியூ ஆச்சி..... இப்ப அவருக்கு கொஞ்சம் கொஞ்சமா கடுப்பு வர ஆரம்பிடுச்சு....  ஒரு மணி நேரம் கழித்து ஒரு வழியா படத்துல 'எண்டு' போட்டு முடிச்சிட்டாங்க...... நம்மாளுக்கு ரொம்பவே டெண்ஷனாகிடுச்சு.. நாடு விட்டு நாடு போயி 'கவார்கர்'னு பேரு வச்சி அவங்க எடுத்த படத்தப் பாத்திட்டு போகலாம்னு நனைச்சா.. அவங்க வேற ஏதோ படத்தப் போட்டு அவரோட டயத்த வேஸ்டு பண்ணிட்டாங்க... அவருக்கு வந்த கடுப்புக்கு தயாரிப்பாளர் கிட்ட போயி கேட்டாராம், "கவாஸ்கர்ன்னு படம் போடுறதா சொல்லிட்டு வேற ஏதோ படத்த போட்டீங்களே.. ஏன்.. ஏன்.. இந்த வில்லன்கத்தனம் ?". அதுக்கு, "நீங்க இப்ப பாத்த படம்தான் 'கவாஸ்கர்'" அப்படின்னு சொன்னாராம் அந்த தயாரிப்பாளர்.

கவாஸ்கர் அப்பாவியா கேட்டாரு, "இதென்ன அநியாயமா இருக்கு.. படத்தோட பேருக்காவது என்னப் பத்தி ஏதாவது சொல்லி இருக்கணுமே ?"

அதுக்கு அவங்க சொன்னாங்களாம் "ஏன்யா..  ஒங்க நாட்டுல, நீங்க மட்டும் 'பார்டர்'னு படம் எடுப்பீங்க.. ஆனா 'ஆலன் பார்டர்' பத்தி ஒரு ஃப்ரேமும்  இருக்காது.. அவர பொம்மையா கூட காட்ட மாட்டீங்க, அதுக்குதான் பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம்"....

டிஸ்கி : என்னத் திட்டாதீங்க..  நா பாவம் ( இப்ப 99ல இருக்கேன் ) .. 
ரொம்ப வருஷத்துக்கு முந்தி இ- மெயிலுல வந்த ஜோக்கு இது... தெரியாதவங்க தெரிஞ்சுகட்டுமேனு ஒரு நல்ல எண்ணத்துல தான் இங்கிட்டு எழுதிட்டேன்....
___________________

வட போச்சே !

ரொம்ப நாளா நானும் வூட்டுல எலியோட இம்சை (அட இந்த இம்சை இல்லப்பா..) தாங்காம, எலியப் புடிக்க எலிப்பொறி வெச்சேன்.... அது எப்படியோ தெரியல.. எலி மாட்டாமலே இருந்துச்சி.. ஒவ்வொரு தடவ நா அதப் புடிக்க 'வடை' வெச்சி டிரை பண்ணாலும் எனக்கு கெடச்சது, இந்தப் பதிவோட தலைப்புதான்..

ஆனா அதுக்கான காரணம் நம்ம சிரிப்பு போலிசால தெரிஞ்சிடிச்சி.. வைட்.. வைட்.. நா கம்ப்லேயின்ட்லாம்  தரலை.. தந்தா மட்டும் அவர் FIR போட்டு சரியா  கண்டுபுடிச்சிடுவாரா என்ன?

போலிசோட இந்தப் பதிவ படிச்சிட்டு அதுக்கு நா கமெண்டு போட்டேன் இந்த மாதிரி.. (27 வது கமெண்டு..)

//"....... ஆனா ஒண்ணு மட்டு அழுத்தமா சொல்லுறேன்.. படத்துல இருக்குற 'வீடுதிரும்பல்' மோகன எனக்குத் தெரியும்.. (அவருக்குதான் என்னை ------
அட சொல்ல விடுகப்பா... 'நல்லாவே தெரியுமே') பள்ளி வாழ்க்கையில் எனது சீனியர் அவர்... எங்கள் வீட்டிக்கு வந்திருக்கிறார்."//

அதுக்கு ரமேசு(சிரிப்பு போலிஸ்)  சொன்னாரு பாருங்க ஒரு பதிலு..  (36 வது  கமெண்டு)
//சொன்னாரு. ஒழுங்கா படிக்காம அவர்கிட்ட செம அடி வாங்குநீங்கலாமே//

இப்படிலாம் பதில் போட்டு, தூங்கிட்டு இருந்த சிங்கத்தை கெளப்பி விட்டுட்டாரு.... தேவையா அவருக்கு.. நா ஒடனே ஒரு பதிலுக்கு, பதில் கமென்ட் வித்தியாசமா போட  யோசிச்சேன்.. (ஆனா போடலை..  ஹி.. ஹி.. அத வெச்சிதான் இந்த பதிவே அப்புறம் எதுக்கு கமெண்டு போட்டு வேஸ்டு பண்ணனும் ?).

நா யோசிச்சது இதுதான். //"ஒங்களை நெனைச்சா எனக்கு பரிதாமா இருக்கு போலீசு..
அவருகிட்டே அடி வாங்கினேன்.. அப்புறமா நல்லா படிச்சேன்.. இன்னிக்கு நல்ல நெலமைல இருக்கேன்.... நீங்க பாவம்... சரியான சமயத்துல அடி கொடுக்க ஆளு இல்லாம 'எப்படி' இருக்க வேண்டிய நீங்க 'இப்படி' இருக்கீங்க.."//

'எப்படி' அதுக்காக குகிள் இமஜெஸ்ல தேடினேன் 'ஸ்மார்ட் மென்' கீ வேர்டு போட்டு. அதுக்கு இந்தப் பக்கத்துல கெடைச்சுது, 'எலி பிடிக்கும்' முயற்சித் தோல்விக்கான காரணம்.  பாருங்க இந்த படத்த.. எலிலாம்கூட  எவ்ளோ வெவரமா இருக்குது..


இனிமே எலி பிடிக்க பெரிய பொட்டி டைப்பு பொறிதான் யூஸ் பண்ணனும். இது புரிஞ்சா யாரும் இனிமே 'வட போச்சே'னு பொலம்ப மாட்டாங்க.. 

ஒரே கல்லுல ரெண்டு வடை.. ச்சே..  மாங்காய்..
1) இனிமே எலிய, எளிய முறையில  புடிச்சுடலாம்.. (பெட்டி  வெச்சி..)
2) பெ.சோ.வி யோட இந்த பதிவுக்கான  போட்டி கதை.. அதாங்க.. 'ஆ'னா, 'ஆ'வன்னா... .  இல்லாம கதை சொல்லச் சொன்னாரே ? இந்த எலி படத்த, தலைப்பே  வெக்காம அனுப்பிட்டேன்....

ஜெயிக்கப் போவது (எலிகிட்டேயும், பெ.சோ.வி போட்டிலயும் ) நாந்தான ?

டிஸ்கி : இன்ட்லில இணைப்பதில் ஏதோ தவறு நடந்துவிட்டது..நீங்கள்  இந்த லின்க்கினை (என்மீது கிளிக் செய்து)முயற்சி செய்து இதற்கு ஓட்டளிக்கவும். நன்றி

எனக்கு பிடித்த ரஜினி படங்களிள் டாப் 10

சூப்பர் ஸ்டாரோட படங்களில்  என்னை கவர்ந்த பத்து படங்களை டாப் 10 என வரிசைப் படுத்தி, ஓரிரு வரிகளை எழுதுமாறும், வலைப்பதிவில் என்னுடைய புதிய நண்பர்களுள் ஒருவரான சவுந்தர் அவருடைய பதிவில் அழைத்தமைக்கு முதற்கண் நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே.. நாள் சொல்லப் போகும் விஷயங்கள் பலருடைய எண்ணங்களையும்  ஒத்து போவதாக இருந்தால், அவற்றின் பெருமை, உங்களுக்கும்,   இதனை படிப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அப்படி ஒத்துப் போகவில்லை என்றால், எனது வித்தியாசமான எண்ணங்களும் சிந்தனைகளும் உலகிற்கு புரியும். நான் சொல்ல வருவது என்னவென்றால்..  (சரி . சரி.. மேட்டருக்கு வாறன்)

10) தர்மதுரை : ப்ளஸ் டூ படிக்கும்போது, நண்பர்களுடன் 'National Talent Search Examination'  எழுதுவதற்காக தஞ்சாவூர் சென்றபோது, காலைக் காட்சி பார்த்த படம்.  'சந்தைக்கு வந்த கிளி...',  'ஆணென்ன பெண்ணென்ன..' மற்றும் ஜேசுதாசின் இனிய குரலில் 'மாசிமாசம் ஆளான.. ' , பாடல்களுக்காக  மிகவும் பிடித்திருந்தது. சான்ஸ் கிடைத்ததால் மறுபடியும் இரண்டு முறை பார்த்தேன்.
ஒரே வரியில் -- உடன் பிறப்புகளுக்காக  தியாகம்

9) அண்ணாமலை : எளிமையா இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்கிற செய்திதான் முழு நீள திரைச்சித்திரமாக வந்தது. பணக்காரனாவது சினிமாவில் எளிதாக இருந்தாலும், வாழ்க்கையிலும் எளிமை வேண்டும், பணம் மட்டும் 'இன்பமானது இல்லை' என்று சொன்னது. 
ஒரே வரியில் -- நட்பு, எளிமை  பற்றியது..

8) ராஜா சின்ன ரோஜா : தன்நலனுக்காக  இளம் தலைமுறையை போதைக்கு அடிமையாக்கி அழிக்க முனைந்தோரை, வேருடன் அழித்து நாட்டின் எதிர்காலத் தூண்களை நல்வழி படுத்தும் நல்லதொரு காவியம். அனிமேஷன் பாடல் க்ளாசிக் 
ஒரே வரியில் --  குழந்தைகள்(பள்ளி, கல்லூரி) ஸ்பெஷல்..

7-6) குரு சிஷ்யன்  & வேலைக்காரன் : 'பொழுதுபோக்கு' அதுவே இந்த படங்களின் தாரக மந்திரம். ரஜினி படங்ககளுக்கு தனியாக நகைச்சுவை நடிகர்கள் தேவையே இல்லை என்பதனை நிரூபித்த படங்கள்.. இரண்டிற்கும் ஒரே இடங்கள், எனது வரிசைப் பட்டியலில்.
ஒரே வரியில் -- காமெடி, மசாலா ஒருசேரக் கலந்த பொழுது போக்கு.

5) ஸ்ரீ ராகவேந்திரா : மக்கள், ரசிகர்களுக்காக வேடம்(வாழ்க்கையிலும்) போடாமல், தனக்காகவே, தானே விரும்பி தனது நூறாவது படமாக (சினிமாவில் மட்டுமே) நடித்து நமக்களித்தவர். நமது இந்திய மக்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இறையுணர்வோடு  அளித்த  விருந்தாகும் இது.
ஒரே வரியில் -- ராகவேந்த்ராய  நமஹா !

4) எந்திரன் : சமீபத்தில் ரசித்தது....  இந்த படம் எனது மூன்றரை வயது மகளுக்கு எப்படி இருந்தது என்பதை ஏற்கனவே தனிப் பதிவாக போட்டிருக்கிறேன். பிரம்மாண்டம் என்பதற்கு ஒரு சரியான உதாரணம் இந்த படம். அறிவியலின் இன்றைய முன்னேற்ற நிலையை வைத்துக் கொண்டு....  மெஷினே போதும், மனிதர்களே வேண்டாம் என்கிற அபாயகரமான நிலை ஏற்பட வேண்டாமென்பதை தெள்ளத் தெளிவாக சொன்ன படம். அதே நேரத்தில் மனிதன் தனது வாழ்க்கையில் மேன்மை அடைந்து தன்னால் முடியாத வேலைகளுக்கு மெஷினை வைத்து செய்வது நல்ல எதிர்காலமாக நன்றாகவே புலப்படுகிறது. 'ரோபோ'  மற்றும் 'கம்பியூட்டர்' தொழில்நுட்பம் புகுந்து விளையாடுகிறது. சூப்பர் ஸ்டார் வழக்கமான ஸ்டைல், பந்தா இல்லாமல் வெகு இயல்பாக செய்திருப்பது படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக நான் நினைக்கிறேன்.
ஒரே வரியில் -- சயின்ஸ் & டெக்னாலஜி, பிரம்மாண்டம்.

3) தளபதி :  ஆரம்பத் தொன்னூறுகளில்  பெரிய எதிர்பார்ப்பை  வரவழித்த  படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பாச மகனை விட்டுத் தவிக்கும் தாய், ஒருமுறை செய்த உதவிக்கு உயிரைக் கூட கொடுக்கத தயாராகும் நண்பன், காதலும் சண்டைகளும் கலந்த ஒரு கதம்பம். எஸ்.பி.பி & ஜேசுதாஸ்  இணைந்த 'காட்டுக் குயிலு...', 'ராக்கம்மா கையத் தட்டு..'  மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள். அப்போது பத்தாம் வகுப்பில் படித்த மாணவ-மாணவிகளிடம், நான் " 'குவித்த புருவமும்....' பாடலை அடிக்கடி நன்றாகக்  கேளு, மனப்பாடப் பகுதிக்கு தனியாக படிக்க வேண்டியதில்லை", எனச் சொல்லுவேன்.
ஒரே வரியில் -- நட்பு, பாசம், காதல், சண்டை செண்டிமெண்ட். & பாடல்  கலந்த கதம்பம்

2) அருணாச்சலம் (மாலா மால்) : நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். படத்தின் ஹைலைட்டே.. கடைசி நேரத்தில் மீதமிருப்பதாக வந்த பணத்தினை அரை நிமிடத்தில் தனது காரியதரிசிக்கு சம்பள(ல)மாக கொடுத்து, பணப் பட்டுவாடாவையும் முடித்து போட்டியில் ஜெயிப்பது. எதிபாராத இந்தக் காட்சியை பார்த்தபோதே எனக்கும் புரிய ஆரபித்தது, 'மாத்தி யோசி' என்றால் என்ன என்று. சரியாகவும், தேவைப்   பட்டபோதும் மாத்தி யோசிப்பது வாழ்க்கையில் நமக்கு கை கொடுக்கும் என்பது சரியான பாடம்தானே. ஹிந்தியில் நஸ்ருதீன் ஷா, நடித்து 'மாலா-மால்' என கொடி  கட்டி பறந்த படமாகும் இது. தமிழில் பின்னர் 'ரீமேக்' செய்திருகிறார்கள்.
ஒரே வரியில் -- காமெடி கலந்த மெசேஜ் 

1) தில்லு முல்லு  ( கோல்-மால்) : வேலை கிடைப்பதற்காக, விளையாட்டாக சொன்ன பொய், ஒன்றன் மேல் ஒன்றாக மென்மேலும் பல பொய்களை சொல்ல வைப்பது...  என்னதான் தமாஷாக படம் அமைந்தாலும், வாழ்க்கையில் ஒரு பொய் சொன்னால்.. எவ்வாறான இன்னல் களுக்கு ஆளாக நேரிடும் என்பதி தத்ரூபமாக எடுத்துக் காட்டிய  படம்.  இந்த படமும் ஹிந்தியில், அமோல் பலேகர் நடித்து சூப்பர் ஹிட்டான 'கோல்-மால்' என்பதாகும்.
 ஒரே வரியில் -- காமெடி.. காமெடி...  காமெடி.. வேறென்ன  தேவை ?

சூப்பர் ஸ்டாரு படமே போடலையா ?  அவரு படத்தப் பத்தி என்னோட கருத்த சொல்லத்தான் இந்த பதிவு.. .... சரி சரி..  இன்ட்லில ஓட்டும், இங்கிட்டு கமெண்டும் போட மறந்துராதீங்க.. சரியா.. ?

டிஸ்கி : ஆறு படையப்பனை வணங்கும்,  ரொம்பப் படிக்காத, நமது ராஜாதிராஜாவை  ஹிந்தியில் 'பாட்ஷா'ன்னு  சொல்லுவாங்க. நமது பாண்டிய-மன்னன், தர்மத்தின் தலைவன் எப்பவுமே நல்லவனுக்கு நல்லவன், இவன் ஓர் அதிசயப் பிறவி. குசேலன் போன்று வறுமையில் வாடும் உழைப்பாளியை நேசிக்கும் ஓர் முத்து, இவனது இயற்பெயரோ சிவாஜி.  மேலும் சில மசாலாப் படங்களும் உண்டு.. ஆனால் முதற்பத்தில் இல்லை. ஏனோ தெரியவில்ல 'பாட்ஷா' கூட டாப் டென்னில் வரவில்லை..

விருப்பமிருந்தால் யார் வேண்டுமானாலும் தொடரவும்.  

இன்ட்லியில் இணைப்பதில் ஏதோ தவறு நேர்ந்து விட்டது. நீங்கள்
http://ta.indli.com/search/madhavan73 சென்று சற்று முயற்சி செய்து ஓட்டுப் போடவும்.

குழந்தைகள் தினம்

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான பதினான்கு நவம்பர், ஒவ்வொரு வருடமும் 'குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த விஷயம் நாமெல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் உலகளவில் 'குழந்தைகள் தினம்' நவம்பர் இருபதாம் தேதி கொண்டாடப் படுகிறது. 1959 ம்  வருடம் நவம்பர் 20ம்  நாளில், குழந்தைகளின் உரிமைகள் பற்றிய கொள்கைகளை அமல் படுத்தியது ஐ.நா சபை உலக குழந்தைகள் தினத்தினை அறிமுகப் படுத்தியது. குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை நல்வழி நடத்திடுவோமாக. அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அளிப்பது நமது கடமையாகும்.

இங்கு கொடுக்கப் பட்டுள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் படம், நான் வரைந்து, வண்ணம் தீட்டியது. உங்களுக்காக இங்களித்துள்ளேன். கூகிளில் நேரு படத்த டவுன்லோடு பண்ணி, அதை பாத்து பாத்து வரைஞ்செனுங்க.. பையனோட ஸ்கூலுல குழந்தையர் தின சம்பந்தமா வீட்டுல யார் வேணாலும் படம் வரைஞ்சு தரலாம்ன்னு சொன்னாங்க.. அதுக்குத்தான் இந்த ஏற்பாடு. நா வரைஞ்சத பெஸ்ட் படம்னு நோட்டீஸ் போர்டுல போட்டுருக்காங்க..

இன்று காலை எனது மகன் சிறு குறும்பு செய்ததை கண்டித்து, நான் அவன் அடிக்க முனைந்தபோது, அவன் 'அப்பா, இன்னிக்காவது என்னை அடிக்காம, திட்டாம இருங்கபப்பா. இன்னைக்கு "எங்களோட டெ(ய்)", எனச் சொல்லி தடுத்துவிட்டான்.. சரிதான்.. இன்னிக்காவது (14 நவம்பர்) நம்ம பசங்களுகிட்டே அவங்க வெளையாட்டா குறும்பு செஞ்சா கோவப் படாம, அவங்க இஷ்டத்துக்கு விட்டுவோமே.

ஒரு நிமிஷன் பொறுங்க, எங்கம்மா யாரையோ திட்டிகிட்டு இருக்காங்க.... போய் பாத்துட்டு வாரேன்..

நான்: என்னம்மா யாரை திட்டுறீங்க..? என்ன மேட்டர்..?
 
என்னோட அம்மா : வாடா வா.... எவ்ளோ நாளா சொல்லுறேன்.. என்னோட கண்ணு சரியாவே தெரிய மாட்டேங்குது.. டாக்டரு கிட்டே போயிட்டு வரலாம்னு..
 
நான் : இன்னிக்கி சண்டே மா... இன்னிக்குத் ஹாஸ்பிடல் கெடையாது.. கண்டிப்பா நாளைக்கு கூட்டிக்கிட்டு போறேன்... அதுக்காக குழந்தையை திட்டாதேம்மா.. இன்னிக்கு 'குழந்தைகள்  தினம்'.

அம்மா : நா எங்கே குழந்தையை திட்டினேன்..? ஒன்னத்தானே (கோட்டானத் தானே) திட்டிக்கிட்டு இருக்கேன்..

நான் (ரொம்ப பணிவோட) : நான் குழந்தைன்னு சொன்னது என்னை தாம்மா நீதான் அடிக்கடி சொல்லுவியே.. என்னதான் வளந்துட்டாலும், நா என்னிக்குமெ ஒனக்கு கொழந்ததான்னு....... ஹி.. ஹீ.. அதான் ....





காலேஜு டேஸ்ல நடந்தது..

அன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை.

வழக்கம்போல காலேஜு முடிஞ்சு, பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி.. ஃபிரண்டு போட்டு வெச்சிருந்த சீட்ல உக்காந்து வெயில்ல வெந்து நொந்து கொண்டிருந்தேன். அது என்னாத்துக்கு பஸ்ல காலேஜு ஸ்டாப்புல ரொம்ப நேரம் நிறுத்தறாங்களோ ? அதுக்கு முந்தின நாளுதான் நா கொஞ்சம் லேட்டா வந்தேன்.. ஆனா வண்டிய கெளப்பிட்டு போயிட்டாங்க.. நான்தான் இன்னிக்கு டயத்துக்கு வந்துட்டேனே.. அப்புறம் ஏன் இன்னும் வண்டிய எடுக்கல...... ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.. ஆரம்பமே இப்படியா.. எல்லாம் என்னோட 'ரிஸ்டுல உக்காந்துக்கிட்டு காட்டுது பாரு' அதுதான். எப்படியோ என்னோட கஷ்டம் தெரிஞ்சு டிரைவர் ஸாரு பெரிய மனசு பண்ணி, வண்டிய கேளப்பினதுனால கொஞ்சம் கொஞ்சமா காத்து வர ஆரம்பிச்சுது... தூக்கம்தான் வரலை.. எப்படி வரும் ?

அதான் அன்னைக்குனு பாத்து லாஸ்டு பிரியடுல நல்லா தூங்கிட்டேனே. வழக்கமா 'லாஸ்டு' பிரியடுல நா தூங்க மாட்டேன், ( அதுக்கு ரெண்டு பீரியடுக்கு முன்னாலேய தூங்கிடுவேன் ). அப்பத்தான சொகுசா, பஸ்சுல ரிடர்ன் வர்றப்ப தூங்கலாம். பஸ்ஸ ஓட்டுறது நானா என்ன, ஒன்னேகா மணிநேரத்த ஓட்டினா போதாதா ?

என்ன சொன்னேன், ஆங்.. முன்னாடியே தூங்கினதுனால, பஸ்சுல தூக்கமே வரலை. பேச்சு தொணைக்கு யாருமே இல்லை.. எல்லாருமே தூங்கிட்டானுங்க.. பாவி மனுசனுங்க. முக்கியமான பாவி, சீட்டு போட்டு தந்தானே அவன்தான். அவன்கூட தூங்கிட்டான். என்னையப் பத்தி ஒரு நெனைப்பு வேணாம். வெச்சிக்குறேன் அப்புறமா.. 'every dog has it own day', நாய்க்கே அப்படி ஒரு நாளு இருக்குதுன்னா, நா யாரு.. எனக்கு ஒரு நாளு வராதா என்ன?

அட. இந்த மாதிரி தான், நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாம சுத்தி சுத்தி போயிடுறேன். இனிமே ஸ்ட்ரைட்டா மேட்டருதான்.

எப்படியோ அரைகொரையா தூக்க கலக்கத்தோட ஒருமாதிரியா ஒரு மணி நேரம் ஓடிடுச்சு ... இன்னும் கால் மணி தான்.. அட.. அட.. என்னடா ரோட்ல கூட்டம்.. முன்னால காரு, புஸ்சு, டிரக்கு.. . என்னதான் ஆச்சு ? என்னது முன்னால ஒரு மரம் விழுந்து டிராபிக்க நிறுத்திடுச்சா ? பத்து.. இருபது.. அட முப்பது நிமிஷம் ஆயிடுச்சி.. இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமா டிராபிக்க சரி பண்ணுறதுக்கு..

என்னோட ஃபிரேண்டு  'இதெல்லாம் ஆவுரதுல்ல, நாம நடந்தே போயிடலாம் இன்னும் மூனே மூணு கிலோமீட்டருதானே..', ஐடியா கொடுத்தான். ஏன் சொல்ல மாட்டான்.. அவன்தான் நல்லா ஒன்னவரு தூங்கிட்டானே.. இப்ப ஃபிரெஷ்ஷா இருக்குறானே.. சரி பேச்சு தொணைக்கு இப்பவாது ஆள் கேடைச்சுதே. 'சரி வா போகலாம், வேற யாராவது எங்ககூட வரீங்களா நாங்க லிஃப்டு தாரோம்.. ஒக்கே ஒக்கே கம்பெனி தாரோம்', சொன்னது நாதான்.. என்ன தாராள மனசு எனக்கு.

start music.. ஆரம்பிச்சுது எங்க 'நட-ராஜா' சரிவீஸ். நடந்து.. நடந்து.. மூணு கிலோமீட்டரு, மூணரை மணி வெயிலுல நடகச்சே தூங்காம ஒரு வழியா என்னோட பிரண்டு வீட்டுக் கிட்ட வந்துட்டோம். அதாவது அரை கிலோமீட்டரு தூரம்தான். மனசுக்கு நிம்மதி.. என்னதான் நம்மளோட வீடு இன்னும் ஒன்னரை கிலோமீட்டரு இருந்தாலும் கவலை இல்லை, ஃபிரெண்டோட சைக்கிள்ல போயிடலாம். அட என்னடா இது.. பின்னால என்ன சத்தம்னு திரும்பி பாத்தா.... பாவிங்களா எல்லா காரும் பஸ்சும் வேக வேகமா நம்மள தாண்டி போகுதே.. மரத்த எடுத்துப் போட்டு வழிய கிளியர் பண்ணிட்டாங்களா..?

எப்படி 'நடந்தோம்' பாத்தீங்களா (படிச்சீங்களா)?  
வீதில "நடக்கணும்னு" விதி....................................

டிஸ்கிகள்  :
  1. நல்லவேளை மூணாப்பு படிச்சப்பவே இப்படி நடக்கல.. இல்லேன்னா 10 கிலோ புத்தக மூட்டையோட எப்படி நடந்திருப்பேன்..
  2. என்னது தலைப்பல சொன்னமாதிரி காலேஜுல (டேஸ்ல) என்ன பெரிசா நடந்துச்சா? அம்புட்டு தூரம் நடந்துருக்கோம்..  அத சொல்லத்தான் இந்த மாதிரி..