Friday Message - 2

இனியாவது, ஒத்துமையா இருங்கப்பு....  நம்மோட முந்தைய பாரம்பரிய, கலாச்சார, வழிபாட்டுக்கு உள்ள மகிமை இப்பவாவது, புரியுதா..?

நன்றி :  மின்னஞ்சல் மூலம், இந்த செய்தியை அனுப்பிய, எனது, நண்பருக்கு..
நல்ல  செய்தி என்று நான் உணர்ந்ததால், இதனை இங்கு வெளியிட்டுள்ளேன்.

Friday message - 1

 HEART IS A BEAUTIFUL GARDEN:

Join smilingsmilers for Innovative Mails

Once a Junior School teacher asked her students to bring some potatoes in a plastic bag to school. Each potato will be given a name of the person whom that child hates. Like this, the number of potatoes will be equal to the number of persons they hate. On a decided day the children brought their potatoes well addressed. Some had two, some had three and some had even five potatoes.

The teacher said they have to carry these potatoes with them everywhere they go for a week. As the days passed the children started to complain about the spoiled smell that started coming from these potatoes. Also some students who had many potatoes complained that it was very heavy to carry them all around. The children got rid of this assignment after a week, when it got over.

The teacher asked, "How did you feel in this one week?" The children discussed their problems about the smell and weight. Then the teacher said, "This situation is very similar to what you carry in your heart when you don't like some people. This hatred makes your heart unhealthy and you carry that hatred in your heart everywhere you go. If you can’t bear the smell of spoiled potatoes for a week, imagine the impact of this hatred that you carry throughout your life, on your heart?"

MORAL:
* Our heart is a beautiful garden that needs a regular cleaning of unwanted weeds.
* Forgive those who have not behaved with you as expected and forget the bad things. this also makes room available for storing good things

மின்னஞ்சல் மூலம், இந்த செய்தியை அனுப்பிய வடஇந்திய நண்பருக்கு நன்றிகள்.
   --------- (யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்)

பிடித்த 'பத்து'(10 , Ten ) படங்கள் ' - தொடர் பதிவு

 சகோதரி  அநன்யா அவர்கள் ஒரு தொடர் பதிவிற்கு பொதுவான அழைப்பு விடுத்திருந்தார். அதன் படி, எனக்குப் பிடித்த 'பத்து'(10 , Ten ) படங்களை கீழே தந்துள்ளேன். நான் செய்ய நினைத்த காமெடி இங்கு இருக்கிறது.. தொடர் பதிவாக. இப்போது இந்த பதிவு உண்மையிலேயே சீரியஸ் என்று உறுதியளிக்கிறேன்.

எனக்கு காமெடி படம்தான் ரொம்ப பிடிக்கும். ஆமாங்க. வாழ்க்கையில பல விதமான கஷ்டங்களையும், சண்டை சச்சரவு, வன்முறை, தீவிரவாதம் (violence )  எல்லாத்தையும் அன்றாடம் டிவிலயும் , பேப்பர்லயும்  பாக்குறோம். அந்த வகையில காமடி படம் தான் நல்ல பொழுது போக்கு அல்லவா ?
இப்போதைக்கு  ஒரு 10 படங்களை சொல்லுகிறேன்.. இந்த 10 படங்கள் தான் எனக்கு பிடிக்கும் என நினைக்கவேண்டாம்.
  1. காதலிக்க நேரமில்லை (அந்த காலத்திலேயே  இப்படி ஒரு காமெடி படம்.. நல்ல சிந்தனை, திரைக்கதை..)
  2. தில்லுமுல்லு (ரஜினியின் கலாட்டா   -- இந்திரன், சந்திரன்.. செம சூப்பர்பா..)
  3. மைக்கேல் மதன காமராஜன் (3 - 4 முறை பார்த்த பின்னர்தான் குழப்பம் தீர்ந்தது..  அப்படி ஒரு சிக்கலான காமெடி -- கிரேசி.. )
  4. உள்ளத்தை அள்ளித்தா (ஹா ஹா ஹா.. ரெண்டு நாளைக்குமுன் டிவில  மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.  ரசித்து பார்க்கத்தூண்டும் படம்).
  5. காதலா காதலா (அல்லா பெரும்[எல்லோரும்], நல்லா பண்ணியிருப்பாங்க. அப்படி ஒரு டீம் வொர்க். முக்கியமா கிரேசி மோகன் வசனங்கள் )
  6. பஞ்சதந்திரம் (ஒவ்வொரு வசனமும் சிரிக்க வைக்கும்..  உதா :'முன்னாடி', 'பின்னாடி', 'கண்ணாடி' etc ..... சான்சே இல்லை.. கிரேசி மோகனால்தான் இது முடியும்)
  7. தெனாலி (நல்லா சிரிக்க வைக்கும்..  மறுபடியும்..  கிரேசி மோகனால்தான் இது கூட)
  8. ஜோடிநம்பர்-1 (ஹிந்தி  -- கோவிந்தா படத்துல காமெடிக்குப் பஞ்சம் இல்லீங்கோ.. லாஜிக்க மட்டும் எதிர்பாக்கக் கூடாது.)
  9. ஹேராபேரி   (ஹிந்தி - பரேஷ் ராவல், சுனில் ஷெட்டி, அக்ஷைகுமார்  -- 'காமெடி trio'. தமிழில் வந்த 'அரங்கேற்ற வேலை'  தழுவல்.)
  10.  முஹம்மது பின் துக்ளக் -- (காலத்தின் கோலத்தை, 'சோ. ராமசாமி' பல வருடங்களுக்கு முன்னரே துல்லியமாக சொல்லிய, சிரிப்பூட்டும் படம்)

மேலும் தொடர, இவர்களை அழைக்கிறேன், விருப்பமிருந்தால் இடுகை இடவும்.
  1. தீராத விளையாட்டு பிள்ளை (RVS).
  2. பெயர் சொல்ல விருப்பமில்லை
  3.  சாய்ராம் கோபாலன்
  4.  _______________  (அட நீங்க  தான்  .. ரெடி ஜூட்..)

    உஷாரையா உஷாரு !!

    இரண்டு  தினங்களுக்கு முன் வந்த ஒரு குறுந்தகவல் (SMS)
    "CONGRATS-U-HAVE-WON-7000,000-GBP-IN-2010-UK-DOMINION  PETROLEUM-INT'L-MOBILE-DRAWS-SINNING-#40,TO-CLAIM YOUR PRIZE SEND EMAIL TO MR.TERRY:terry11149@hotmail.com" send by Message Centre : 919259155008 dt. 16th May 2010, 11:08 Hrs.

    எனக்கு வந்த SMSல மிகவும் சிறந்த காமெடி SMS இதுதான்னு நினைக்கறேன். பின்ன இல்லையா.. நீங்களே சொல்லுங்க.. நா பாட்டுக்கு, அரசாங்க உத்தியோகத்துல என்னால முடிஞ்ச அளவு உழைச்சு(?) சம்பாதிச்சுக்கிட்டு வர்றேன். .. என்னையப் போயி.. சோம்பேறியா நினைச்சுகிட்டு இப்படி முயற்சி செய்றாங்களே. எனக்கு தெரிஞ்சதெல்லாம், மூர் மார்க்கெட் மட்டுமே.. 'பங்கு' மார்கெட் பக்கம் கூட போனதில்ல.. மேலே என்ன நடக்கலாம்னு ஒரு யூகம்.
    அந்த ஈமெயில் முகவரியில் தொடர்பு கொண்டால், அவர்கள், பணப் பட்டுவாடா செய்வதற்கு சிறிது முன்-பணம் தேவை என்றும்..  அவர்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு, அந்த முன் பணத்தை செலுத்துமாறும் சொல்லலாம். பின்னர் அவர்கள் நாம் செலுத்திய முன் பணத்தை முழுவதுமாக சாப்பிட்டு விட்டு, பெரிய ஏப்பத்தினை    நமக்குத் தரலாம்... நமக்கு ஏன் சார் வம்பு.. பேசாம இருக்குறதுதான் பெட்டர்.  இதே போன்று செய்தித் தாள்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.. நாம் படிப்பதில்லையா / பார்க்கவில்லையா..?
    ஆரம்ப 80களில் எனது அக்காவும் அவருடைய நண்பியும், வாரப் பத்திரிகையில் வந்த புதிர் ஒன்றிற்கு பதில் அனுப்ப, முதல் பரிசாக ஒரு மிக்சி அறிவிக்கப்பட்டது.. ஆனால் அதற்கு ரூ 200 /- அனுப்புமாறும் சொன்னார்கள்.. பணமும் அனுப்பினார்கள் 'நண்பிகள்'. நல்ல வேளை,  பார்சலில் மிக்சியே வந்தது.. பின்னர் மற்ற பலருக்கு பார்சலில் 'செங்கல்' வந்ததாக சொல்லப்பட்டன. ரூ 200 க்கு அன்றைய தினத்தில் தங்கத்தினால் செய்த செங்கல் கூட கிடைத்திருக்கலாம்..  என்னவோ பாவம்  பலர் (சிலரோ?)  களிமண் சுட்ட செங்கலை ரூ.200 க்கு வாங்கினர்.
    முதலில் ஒருசிலருக்கு பணமோ, பொருளோ இலவசமாக கிடைப்பது உண்மைதான்.. இல்லேன்னா யாரும் இந்தமாதிரி விஷயங்களா நம்பி ஏமாற மாட்டங்களே.. பின்னால போறவங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.
    'குறைந்த  வட்டி', 'ஒரே வருடத்தில் இரட்டிப்பு', 'தங்கம் சேமிப்பு திட்டம்'.. அப்பப்பா.. எவ்வளவோ பாத்தாச்சு.. மக்களில் மோகத்தினால் விளையும் ஏமாற்றம்.. பின்னர் அழுது புரளுவதால் என்ன பயன்? மிகக் குறைந்த நேர காலத்தில், வியர்வை சிந்தாமல் பணம் சேர்க்கும் ஆசையில் வருவதே இந்த அவலங்கள்.
    எனது அண்ணன் சொல்லும் ஒரு வசனம் ஞாபகம் வருகிறது..
    "There is no short cut in life" (for everything)
    ---------------------------------- 

    பிடித்த 'பத்து' படங்கள் ' - தொடர் பதிவு

    சகோதரி அநன்யா அவர்கள் ஒரு தொடர் பதிவிற்கு பொதுவான அழைப்பு விடுத்திருந்தார். அதன் படி, எனக்குப் பிடித்த 'பத்து' படங்களை கீழே தந்துள்ளேன்.

    பாருங்க, பாருங்க.. எல்லாத்துலேயும் 'பத்து(அரிசிப்/சாதப் பருக்கை)' இருக்குதா..?

    என்னடா, 'பத்து' படம்னு சொல்லிட்டு, 'ஆறு' படத்த தான் போட்டிருக்கேன்னு சொல்லுறீங்களா?
    நீங்க வேணா இந்த பதிவை 'ஆறு' படம் போட்டு கூட தொடரலாம்.. (உதாரணம் கீழே..)

    பின்குறிப்பு : எனக்கு சினிமா படம் அவ்வளவா பிடிக்காதீங்கோ(அவ்வளவா பிடிக்காதா? அவ்வலோவும் பிடிக்காதா? நன்றி 'மணல் கயிறு' ).. அதனாலத்தான் இப்படி தாக்கிட்டேன்.. ரொம்ப சாரி..

    கைபேசி

    ாரிடம்  'கைபேசி' இல்லை இந்நாளில். சாலையில் போகும்போது, நடந்துகொண்டே, இரு மற்றும் நான்கு சக்கர  வாகனத்தினை ஓட்டியபடியே  'கைபேசியில்' உரையாடும் (இல்லை இல்லை.. அவர்கள் கைபேசியில் பேசிகொண்டிருக்கும் பொது, வாகனத்தையும் செலுத்துகிறார்கள்.. என்று கூட சொல்லலாம்) பலரை நாம் நிதம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

    ஒருசிலர் கைபேசியில் உரையாடும் பொது, கைகளையும், தலையையும், முக பாவனையும் மாற்றி மாற்றி பேசுவது,. சில சமயங்களில் நமக்கு சிரிப்பைக் கூட வரவழைக்கும்.

    ஒருசிலர் பேசுவது கூடத் தெரியாமல், ஓசையில்லாமல் (காதலன் / காதலி !) பேசுவது, மற்றவர்களை இம்சை செய்யாது.. (அந்த 'கைபேசிக்கு' பில் கட்டுபவரைத் தவிர).


    எனக்குத் தெரிந்த பெண் ஒருவர், (2000 க்கு முன்னர்,) 'கைபேசி' உதவியதாலேயே தனது காதலனுடன் கை-கோர்த்த சம்பவம் நன்றாக நினைவில் இருக்கிறது. அவரின் காதலனும், எனது நண்பர் தான். அப்பெண்ணின் வீட்டிற்கு  சாதரணமாக வந்து செல்லும் நண்பர்.. அந்த பெண்ணின் குடும்பத்தின் அனைவருக்கும்  பிடித்தமானவர்தான். ஆனால், அவர்களிருவருக்கும், காதல் இருப்பது தெரியவந்தவுடன், பெண் வீட்டார்.. மறுப்பு தெரிவிக்க, நண்பரோ அவர்கள் வீட்டிற்கு செல்வது நிறுத்தப் பட்டது. இன்று நிமிடத்திற்கு ரூ 1 /-, நொடிக்கு ஒரு பைசா.. , நிமிடத்திற்கு 30 பைசா என பல வாய்ப்புகள்  நுகர்வோருக்கு உள்ளது. ஆனால் அன்றைய தினத்தில்.. உள்வரும் அழைபிற்கே  நிமிடத்திற்கு ரூ.4 /- தண்டம் அழ வேண்டும்.வெளி செல்லும் அழைபிற்கோ  ரூ.8 / நி. இருந்தாலும், நண்பர் நல்ல வேலையில்('நல்லவேளை' கூட ) இருந்ததால், 'கைபேசி' மிகவும் பயன் தந்தது. அந்த பெண் தனது வீட்டிலிருந்து நிலஇணைப்பு ( Landline தானுங்கோ.) தொ(ல்)லை பேசி மூலம், அவருடன்  தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி.. தனது திருமணத்திற்கு வழி செய்தார். ஒரு வழியாக பெண் வீட்டாரும் அவர்களது இணைப்பை அங்கீகாரம் செய்தனர். இவ்வாறு ஒரு காதலர்கள் இணைய உறுதுணையாக இருந்தது 'கைபேசி'. வீட்டில் இருந்தவர்களுக்கு புரியாமல்  மிகவும் மெதுவாக பேசும் வல்லமை கொண்டிருந்ததாலேயே அந்த பெண்ணின் முயற்சி வெற்றி கொண்டது.

    'கைபேசி' பல விஷயங்களில், நன்மை புரிந்தாலும், சரியாக பயன்படுத்தாமலிருந்தால், பல இன்னல்கள் வரக்கூடும். ஒரு  படம் (still picture /photograph)  பல வார்த்தைகளை உடைய செய்தியை உணர்த்தும்.. அத்தகைய ஒரு படத்தினை உங்கள் பார்வைக்காக இங்கு தந்துள்ளேன்.  படம் சொல்லும் பாடம் நன்கு உணரக்கூடியதே..


    நாம் சாலையில் செல்லாத பொது கூட, யாரிடம் பேசுகிறோமோ அவர் சாலையில் செல்லும் (நடந்து, வாகனத்தை செலுத்தும்) பொது 'கைபேசி'  உரையாடல் வேண்டாமல்லவா..?

    பின்குறிப்பு : அருமை அண்ணன் 'சோ விசிறி' பின்னூட்டத்தில் சொல்லியதற்கினங்க, படத்தில் உள்ளவரின் அடையாளம் தெரியாதபடி படத்தினை வெளியிட்டுள்ளேன். நன்றி.

    Comment please


    மேலே உள்ள படத்தினைப் பார்த்தவுடன், உங்களுக்கு என்ன தோண்றுகிறது? பின்னூட்டமாக எழுதவும்..

    எனக்கு தோணியது..:  "நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யவும்.. கடவுள் பின்னாலேயே வந்து வழிகாட்டுவார்.."