அளவா ஆனா முழுசா - 2 (வியாபார விளம்பரமல்ல)

எனது  'அளவா ஆனா முழுசா - 1'  பதிவினை  தொடர்கிறது இப்பதிவு. ஆனால், இவைகளோ  வியாபர நோக்கமில்லாதவை  (Non-Commercial ads).
இந்த படங்கள் சொல்லும் விஷயங்கள் மதிப்பற்றது.. பார்த்துவிட்டு சொல்லுங்களேன், நான் சொல்வது  சரியா, தவறா என்று.



புகைக்காதே.. மனிதா
புகைக்காதே.. !
ஏண்டா  தற்கொலை பண்ணிக்கறீங்க என்று சொல்வது போல இருக்குது.















அப்பாவோட

சட்டையப் போட்டு அழகு பார்க்கலாம், பரவாயில்லை.. ஆனால், கால்களுக்கு பள்ளிகூட ஷூ மட்டும் போதுமே (தருவீங்களா).. அப்பாவோட ஷூ இப்பவே வேண்டாமே!
















இப்படியே போனால், பின்னால வர்றது ரொம்ப தூரத்துல இல்லை..








சரியான பார்வைக்கு  (VISION), இரண்டு 'கண்கள்' (Is ) தேவை  -- சரிதானே..

அளவா ஆனா முழுசா - 1

எவ்வளோ  பெரிசா, நீட்டி, முழக்கி, சொல்லுற விஷயத்தை இப்படி ஒரே ஒரு படத்துல சொல்லுறாங்களோ.. உண்மையிலே பாராட்டப் பட வேண்டிய 'சிந்தனைகள்'


லிமிட்டு..

 எச்சரிக்கை : 'சுட்ட' விஷயம் 
திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்.!!

இத்தாலிய பல்லேமோ நகருள ஒரு திருமணம் நடந்தபோது..  வழக்கம் போல புகைப்படம் எடுப்பவர் மணமக்களை பல கோணங்களில் படமெடுத்துக் கொண்டிருதாராம்.
இதற்காக வித்தியாசமான ரொம்ப ரொம்பவே....வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்க சொன்னார்.

அங்கிட்டு தான் வினை விளையாண்டுடுச்சி..
தேவையா இந்த விபரீத வேளை.. துப்பாக்கியை மணமக்கள் கையில் கொடுத்து சுடுவது போன்றும் போஸ் கொடுக்க செய்தார். அதில் மணமகள் கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து போட்டோ கிராபர் மீது குண்டு பாய்ந்தது.

இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.
எதுக்குமே ஒரு அளவு உண்டுன்னு சொல்லுறாங்களே...  அதுக்கு இது சரியான உதாரணமோ ?

கணணி(ய)யுகம்

தகவல் தொழில்நுட்பம், கணணி போன்றவற்றைப் பற்றி பதிவு எழுதும் சீசன் போல எப்ப வேண்டுமானாலும் வரவைக்கலாம். சமீபத்திலும், பல நாட்களுக்கு முன்னரும், வலைப் பதிவில் அது சம்பந்தமாக சக பதிவர்கள் (உதா.
http://ulagamahauthamar.blogspot.com/2010/07/134.html,
 http://maransite.blogspot.com/2009/12/blog-post_27.html )
எழுதும்போது, நாமும், முடிந்தவரை கணணியுகதிற்கு மதிப்பு தரும் வகையில் (சொந்த சரக்காக இல்லாமல் இருந்தாலும்) ஏதாவது செய்ய விரும்பியதால் இந்த படப்பதிவு. 
    -----------------------------------------------------------------
1 )
2 )            -----------------------------------------------
 3)  -----------------------------------------------

4)  --------------------------------------------------------------

எறும்புப் புதிர் -- பாதை இப்படி இருக்கும்?

 எனது முந்தைய பதிவான எறும்பு புதிருக்கான தொடர்ச்சி..  ( http://madhavan73.blogspot.com/2010/07/blog-post_21.html   )


--------------
------------
-------------
------------
------
----

வடை......................   சாரி.......................  விடை,  (விடையளித்த நாள் : 22nd July 2010, 10:10 pm IST)



1 ) பாதை இப்படி இருக்கும்.
2 ) ஒரு பிக்-பாங்கு (big-bank) மோதல் நடந்திருக்கும்..

3) கடந்த தூரம் = சதுரத்தின் பக்க அளவே ஆகும். கண்டிப்பா இது உண்மைதாங்கோ.. எனது ஃ போர்ட்ரான் (அனு.. இங்க கவனிங்க..) பிரோகுராமு கூட இதை.. இதை... இதைத்தான் சொல்லுது..

எறும்புப் புதிர்

ஒரு சதுரத்தின் நான்கு முனைகளில் நான்கு எறும்புகள் உள்ளன. மேல்-வலது மூலையிலிருந்து எறும்பு 'A'  கீழ்-வலது மூலையில் இருந்த எரும்புபான 'B'யை நோக்கி நகர்ந்தது. ஆனால், 'B ', அதனது இடது பக்கமிருந்த 'C' எறும்பை நோக்கி நகர ஆரம்பித்தது. 'C' எறும்போ, அதற்கு மேலே இருந்த 'D' எறும்பை நோக்கி நகர ஆரம்பித்தது. அதேபோல 'D ' எறும்பு 'A ' வை நோக்கி நகர ஆரம்பித்தது.
ஒவ்வொரு எறும்பும் போன பாதையானது, எந்த ஒரு நேரத்திலும், மேலே கூறியுள்ளபடி தத்தமது எறும்பை 'குறைவான' தூரத்தில் அடைய முனைந்ததாகும். (shortest distance between him and its target at any moment of time)
மேலும்,
1 ) ஆரம்பத்தில் தூரம் AB = BC = CD = DA = 15 செ.மீ (15 செ.மீ 'பக்கம்' கொண்ட சதுரம்)
2 ) ஒவ்வொரு எறும்பும் ஒரே வேகத்தில் சென்றன.
3 ) எறும்புகள் களைப்படையாவண்ணம் 'சக்தி' (Energy) பெற்றிருந்தன.
4 ) புதிருக்காக, எறும்புகளின் அளவு மிக மிகச் சிறியதாகக் கொள்ளவும் (Size of the ants being negligibly small)



கேள்வி  நேரம் :
1 ) இவர்களின் பயணப் பாதை எப்படி இருந்திருக்கும்......  ? (தேவையானால் படம் போட்டு காட்டவும்)
2 ) ஒவ்வொரு எறும்பும் அவற்றினுடைய 'வெற்றி' இலக்கான அடுத்த எறும்பை அடைய முடிந்ததா?
3 ) ஒவ்வொரு எறும்பும் கடந்த தூரம் என்ன ?
                  (சதுரத்தின் பக்க அளவில் எவ்வளவு பங்கு எனச் சொல்லலாம் ?

பின்குறிப்பு  : என்னால் விடைகளை சரியாக ஊகிக்க முடிந்தது.. பிறகு, நான் சொந்தமாக "fortraanil " (நாங்க 'C ' க்கு இன்னும் மாறலை..) பிரோகிராம் எழுதி விடையை சரி பார்த்துக் கொண்டேன்.

INDIA -- FIFA WC Champion :

உலகக் கோப்பை கால்பந்து (WC football ) போட்டிகள் சென்ற வாரம் வரை நடைபெறுகையில், நம்மைப் போன்ற ஆட்கள் ,  படபடப்பு, நகம் கடித்தல் ('டென்ஷன்' ) இல்லாமல் தொலைக்காட்சியில் (இரவானாலும், முழித்துக் கொண்டு) ஆட்டத்தினை பார்த்து ரசிக்க (!)  முடிந்தது. அதற்கு காரணம், நமது இந்திய அணி போட்டியில் பங்கேற்கவில்லை.  'ராமன் ஆட்சியா இருந்தா என்ன ?  ராவணன்  ஆட்சியா இருந்தா என்ன ? என்பதுபோல யார் ஜெயிச்சா என்ன ?யார் தோத்தா ? என்ன என்றிருந்தது.

இருந்தாலும் நம்மில் பலருக்கு, நமது இந்திய கால்பந்தாட்ட அணி (அப்படின்னு  ஒண்ணு இருக்குதா?) FIFA  எனப்படும், உலக கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் நன்றாக விளையாடி உலக கோப்பையில் கலந்துகொண்டு (இது நடந்தாகூட போதுமே) வெற்றி பெற என்னலாம் செய்ய வேண்டும் ?

நான் இரண்டு வாய்ப்புகள் (chances) பரிந்துரை செய்கிறேன்.. உங்களுக்குத் தோன்றும் மற்றைய வாய்ப்புக்களை (chances) பின்னூட்டமாகத் தரலாமே..

1 ) ஜெர்மெனி, பிரான்சு, ஹாலந்து, ஸ்பெயின், பிரேசில், உருகுவே, ... போன்ற அணிகளில் எதாவது ஒரு அணியினை, 'இந்திய அணி' எனப் பெயர் மாற்றம் செய்யலாம்..


2 ) ஆடுகளத்தினை இந்திய அணிக்கு சாதகமாக கீழே உள்ள படம் போல அமைக்லாமே..?
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

|
|
|
|
|
|
|
|
V
 




இந்திய அணியின் கோல்-போஸ்ட்  கீழ் மட்டமாகவும், எதிரணியினரின் கோல்-போஸ்டினை மேல் மட்டமாகவும்  வைக்கலாம்.(with a slope as shown above). இரண்டாவது அரை பாகத்தில் (2nd half)  லீவர் மூலம் ஆடுகளத்தின் சாய்வை (slope) மாற்றி அமைக்க வேண்டும் எனச் சொல்லத்தேவையில்லை...

அவ்வாறு செய்ததால்...
 உலக கால்பந்தாட்ட சாம்பியன் : இந்தியாவே !

தமாஷ் நேரம்

எனது 6 வயது மகன் பள்ளிக்கூட, வீட்டு வேலை (Home work தானுங்கோ) செய்து வரும் வேளையில், அவனுக்கு ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவைப்பட்டதால், என்னை அணுகி கேட்க ஆரம்பித்தான். கேட்கப்பட்டவார்த்தைகள்.
1) Bundle,
2) unwarp
3) excited
4) steam
ஒவ்வொன்றாக அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தேன், கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
1 , 2 , 3   மறுகேள்வி கேட்காமல் கவனித்தான்.
'ஸ்டீம்' - நான் சொன்ன விளக்கம்.
நான் : வெந்நீரிலிருந்து மேலே செல்லும் ஆவியைப் பாத்திருக்கியா..?

மகன் : ஆம்
நான் : அதுதான் 'நீராவி' இங்கிலீஷுல 'ஸ்டீம்'
          தண்ணிய  சூடு பண்ணினா, நீராவி ஆகிடும்....
          தண்ணிய கூல்  பண்ணினா 'கட்டி' ஆகிடும்.. அதாவது தண்ணிய ஃபிரிஜ்ஜில வச்சா  ஐஸ் கட்டி  ஆகிடும்ல..........
மகன் : தண்ணிய சூடு பண்ணி  ஃபிரிஜ்ஜில வச்சா என்ன ஆகும் ?
நான் :  ?!@#$%^&*().. (கரெண்டு-பில்லு ரொம்ப ஆகும்)

Moral : எம்புட்டு தேவையோ அதோட பொத்திக்கணும்.. எக்ஸ்ட்ரா விளக்கம்லாம் கொடுக்கப்டாது.

---------------------------------------------------------
இன்றைய ஸ்பெஷல் ஜோக்கு :
 க ஸ் (ஷ்) டமர் : என்னங்க, ஆடி 1ம் தேதி முதல்  'தள்ளுபடி' அறிமுகம்ணு விளம்பரம் செஞ்சுட்டு, 'டிச்கவுண்டே' தரலையே?
கடைக்காரர் : ஹீ... ஹீ....  நாங்க சொன்னது அதோ இருக்குதே அந்த 'தள்ளு-படி' (எஸ்கலேட்டேர்) அதுதான் இன்னிலேர்ந்து ஆரம்பிச்சுருக்கோம்..

--- இது எனது 'சொந்த முயற்சி'

'தள்ளுபடி' (எஸ்கலேட்டேர்) நல்ல கண்டுபிடிப்பு தான..? அது எப்படி வேலை செய்யுறதுன்னு, நெட்டுல கெடச்ச இந்த படம் நல்லா இருக்குறதால............  கொஞ்சம் கீழே பாருங்க..


நன்றி : google images
---------------------------------------------------------

நமது இந்திய தேசிய ரூபாயின் குறியீடு

மேலே உள்ளவை அமெரிக்க (USA ),  ஐரோப்பிய, ஜப்பானிய, இங்கிலாந்து போன்ற  நாடுகளின் பணத்தின் குறியீடாகும். நமது இந்தியாவில் இதுவரை 'Rs .' என்ற குறியீட்டை பயன்படுத்திவருகிறோம். இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.
இது நமது தேசிய மொழியான ஹிந்தியில் 'ர' வர்க்கத்தின் குறியீட்டையும், ஆங்கில எழுத்து 'R' யும் பிரதிபலிக்குமாறு உள்ளது. மற்ற நாடுகளின் குறியீட்டில் உள்ளது போல ஒரு படுக்கை கோடு (sleeping line) சேர்க்கப் பட்டுள்ளது. 'படுத்தல்' என்பது குறியீட்டோடு நிற்கட்டும்..  பணத்தில் மதிப்பு உயரே, உயரே செல்லட்டும்..(நான் விலைவாசியை சொல்லவில்லை)



இதனை வடிவமைத்தவர், குவஹாத்தி இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT Guwahati), வடிவமைப்புத் துறையுடன் (Department of Design)  தொடர்புடைய  திரு. D உதய குமார் ஆவார்.  அன்னாருக்கு  வணக்கமும் நன்றியும், இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.உதயகுமார், சென்னையில் பிறந்தவர் என  விக்கிபீடியா தெரிவிக்கிறது. (அட.. நம்ம ஆளா..?.. இப்படித்தாங்க, நோபெல் பரிசு பெற்ற திரு. வெங்கடராமன் ராமகிருஷ்ணனையும்  குறிப்பிட்டோம். ஆமால்ல.. அவார்டு வாங்குற அளவுக்கு சாதனை செஞ்சா,  நாங்க அவங்கள, இல்லை இல்லை.. எங்கள அவங்களோட  இணைச்சுக்க மாட்டோமா..?) இந்த குறியீட்டை உருவாக்கிய உதய குமாருக்கு  2.5  லக்ஷம் பணப்பரிசாக இந்தியா அரசு தருகிறதாம். பணத்தை இப்பொழுதே தருவார்கள அல்லது, இந்த குறியீட்டுடன் பணத்தினை அச்சடித்தபின் தருவார்களா..?




முதலில் கணனியில்(தட்டச்சு பலகை), இந்த குறியீடு ஏற்றப்படவேண்டும். மற்ற மாற்றங்கள் என்னவெல்லாம் வருமென்று நீங்கள், பின்னூட்டமாகத் தரலாமே..

நன்றி  -- தினமலர், IBNlive, NDTV , விகீபீடியா --  Online News channels dt. 15th July :14:20 Hrs .

தாமதமான  பின்குறிப்பு : அட நமக்கு இது ஏப்ரல் 15 தேதிக்கு முன்னாலே தெரியாமப் போயிட்டுதே..... ஒரு ரூபாயா, ரெண்டு ரூபாயா..  2 .5 லக்ஷம் ரூபாயாச்சே..!

வினா-விடை

சமீபத்துல http://funaroundus.blogspot.com/2010/07/blog-post.html பார்த்ததின் விளைவு....கீழே கொடுக்கப்பட்டுள்ள படம். இதெல்லாம் உண்மையிலே நண்டு சுண்டுகளின்  கைவண்ணமா... அல்லது நம்மளப் போல வேலையில்லாத ஆளுங்களோட உபயமா, எனக்குத் தெரியாதுங்கோ..
இருந்தாலும் ரசிக்கக் கூடியதாக இருப்பத்தால், "யான் பெற்ற இன்பம்(கடி) பெருக என் வாசகர்கள்". 

அட.. பெயர விடுங்க.. ரோல் நம்பரப் பாருங்க... யாரோ நம்ம ஆளோட கைங்கர்யம்தான்..

டிவி யில் எனது பேட்டி...

  
என்ன மாதிரி உள்ள பிரபல (?) வலைப்பூ பதிவர்களை தொலைக்காட்சியில் பேட்டி  எடுத்தாங்கன்னா எப்படி இருக்கும் ? (ஒரு கற்பனை தான்..)


பேட்டியாளர் : வணக்கம்..
நான் : (நடப்பதை  நம்பவே முடியாமல், உணர்ச்சி வசப்பட்டு..) வண.. க்க.... ம்ம்ம்ம்

பேட்டியாளர் : உங்க பெயரை வாசகர்களுக்கு நீங்களே சொல்லுங்களேன்..
நான் : பேரச்சொன்னா அலை.... பாயுமில்ல....

பேட்டியாளர் : ஆஹா.... ஆரம்பத்துலேய அசத்துறீங்க....
சரி, உங்களுக்கு இந்த பெயர் எப்படி வந்ததுன்னு சொல்ல முடிமா ?
நான் : சொல்ல முடியுமே, ஆனா கேட்டாதான் சொல்லுவேன்.

பேட்டியாளர் : நான் தான் கேட்டேனே?
நான் : நீங்க, 'சொல்ல முடியுமான்னு' தான கேட்டீங்க...

பேட்டியாளர் : (மனதினுள், அடாடா.. கொல்றானே) சரி. உங்களுக்கு இந்த பெயர் எப்படி வந்தது ?
நான் : நா பொறந்தது வெள்ளிக்கிழமை.. ஒரு வாரம் கழிச்சு வந்த ஞாயித்துக் கிழமையில, யாரோ, என்னோட ரெண்டு காதுலயும், மூணு தடவை, சொன்ன வார்த்தை எனக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சு.. பின்னால அதை சொன்னது, என்னோட அம்மா தான்னு தெரிஞ்சுது.... இப்படித்தான் எல்லோரும் அதே பேருல என்ன கூப்புட ஆரம்பிச்சாங்க.. இப்ப கூட அந்த நாள், நல்லா எனக்கு ஞாபகம் இருக்குது..

பேட்டியாளர் : உங்கள் வயது ?
நான் : மூணு மாமாங்கம் கடந்தவன்..

பேட்டியாளர் : 24லா இல்லை 36ஆ?
நான் : என்ன  கேள்வி இது.. 12 வருஷத்துக்கு ஒரு மாமாங்கம்னா, மூணு மாமாங்கம் 36 வருஷத்துலதானே ?

பேட்டியாளர்  : நீங்க பொறந்த உடன் மாமாங்கம் வந்திருந்தால், 24 வயசு முடிந்த உடன்  மூணாவது மாமாங்கம் வந்துருக்கும் இல்லையா?
நான் : ஒ, நீங்க அப்படி வரீங்களா.. (கடுப்பாகி) அப்ப ஓங்க இஷ்டப் படி, என்னோட வயச  வெச்சுக்கங்க..

பேட்டியாளர்  : உங்கள் தொழில் ?
நான்:  அறிவியல் ஆராய்ச்சியாளர்..

பேட்டியாளர் : இல்லாத ஒரு விஷயத்துல ஆராய்ச்சியா?
நான் : (சற்று அதிர்ச்சியாகி) 'அறிவியல்' --  அதாவது 'science'  இருப்பது உண்மைதானே.... இல்லைன்னு சொல்லுறீங்களே..?

பேட்டியாளர் : நான் சொன்னது 'உங்கள்' 'அறிவு' பற்றிய இயல்..
நான்  : ஹீ.. ஹீ... ஹீ.. (வேறென்ன செய்யுறது..)

பேட்டியாளர் : உங்களோட பொழுது போக்கு ?
நான் : பிளாக் (வலைப்பூ) எழுதுறது......    ....  பின்னூட்டம் போடுறது..

பேட்டியாளர் : நீங்களே எழுதி, நீங்களே பின்னூட்டம் போடுவீங்களா?
நான் : (மனதினுள்....  யார்ராவன்... என்னோட பிளாக்குல பின்னூட்டம் போடுறவங்க ரொம்ப இல்லை என்பதால் நானே சில சமயம் பின்னூட்டம் போடுறது இவனுக்கு எப்படி தெரியும்..?)  பின்னூட்டம் அடுத்தவங்க வலைப்பூக்கு போடுவேன்னு சொல்ல வந்தேன்..

பேட்டியாளர்  : பிளாக்குல என்னலாம் எழுதுவீங்க..?
நான் : அதாங்க  ரொம்ப கஷ்டம்..  அடுத்த பதிவா, இந்த பேட்டிய போட்டுட வேண்டியதுதான்..

பேட்டியாளர்  : இந்த பேட்டியா ..? ஏன் சார், வேற சரக்கு எதுவும் இல்லையா ?
நான் : நீங்க கூடத்தான், நல்ல சரக்கு இல்லாம, என்னைய மாதிரி ஆளலாம் பேட்டி எடுத்து போடுறீங்க..!

பேட்டியாளர் : கேள்விய வாபஸ் வாங்கிக்கறேன்.. (இல்லைன்னா எங்க மானம் போயிடுமே!)
நீங்க என்ன காரணத்துக்காக பிளாக் எழுத ஆரம்பிச்சீங்க..?
நான்  : கொஞ்சம் பிரபலம் ஆகணும்னுதான்.

பேட்டியாளர் : ஏன் சார் பிரபலம் ஆகணும்?
நான் : உங்களை மாதிரி டிவி  சேனலுல  நா பேட்டி தரணும்.

பேட்டியாளர் : ஏன் சார் பேட்டி தரணும் ?
நான்  : அப்படியாவது என்னோட 'பிளாக்கு' பிரபலம் ஆகணும்.., அதுக்குத்தான்..

பேட்டியாளர்  : என்ன சார்.. நீங்க 'பிளாகுல' பிரபலம் ஆகணுமா, இல்லை, 'சேனலுல' பிரபலம் ஆகணுமா?

நான் :'சேனலுல' தான்.. அதுல என்னோட பேட்டி வந்து நான் பிரபலமாகனும்..

பேட்டியாளர்  : எதைப் பத்தி பேட்டி வரணும் ?
நான் : என்னோட பிளாகப் பத்திதான்..

பேட்டியாளர்  : ஆ.. ரொம்ப வலிக்குதே..  இப்ப நேரா மேட்டருக்கு வர்றேன்....
நான் : (இடை மறித்து..) இதுவரைக்கும் கேட்டது சொன்னதுலாம் மேட்டரே இல்லையா?

பேட்டியாளர் : (வெறுப்பாகி ) சார், நான் தான் கேள்வி கேக்கணும்.. நீங்க பதில மட்டும் சொல்லுங்க.
(தொடர்ந்து)  பிளாக்குல என்ன மாதிரிலாம் எழுதனும்னு நெனைக்கறீங்க.. ?

நான் : (சற்று உற்சாகமாகி)  "நாஞ்சில் எக்ஸ் பிரஸ்ஸுல , வித்தவ்டுல போகும் எங்கள் பெயர் சொல்ல விருப்பமில்லாத அனந்யாவின் என்ன அலைகள் போன்ற தீராத விளையாட்டு பிள்ளையாய் Do's & Dond'sஉள்ளது உள்ளபடி சொன்னாலும், இட்லிவடை காம்பினேஷன் போல் கொஞ்சம் வெட்டிப் பேச்சையும் கலந்து........",    மூச்சு முட்டுதுல்ல?  இப்படித்தான், சம்பந்தமில்லாத, ஆனா கோர்வையா வர்ற மாதிரி ஏதாவது எழுதணும்.
நண்பர் ரொம்ப நாளைக்கு முன்னாடி அனுப்பிய இ-மெயிலு, ஏதாவது 'படம்' அப்படீன்னு கண்டபடி எழுதணும்.. கேப்பே(Gap) விடப்டாது.... ஏன் சார் ஓடுறீங்க... நில்லுங்க சார்.. நில்லுங்க.. இன்னும் சொல்லவேண்டிய மேட்டரு நெறைய இருக்குது....

(அதை எல்லாம் பொருட்படுத்தாது.. பேட்டியாளர் 'பேக்-அப்' செஞ்சுட்டு வீடு திரும்பிட்டாரு )

பின்குறிப்பு : யாரையும் பழிக்கும் நோக்கமல்ல.. அனைத்தும் சொந்த கற்பனையே..

மாறுதிசை - தொடர் பதிவு.

என்னை இந்த தலைப்பின் மூலம் தொடர் பதிவிற்கு அழைத்தவர்(கள்) 'எங்கள்' பிளாக்..
அவர்(கள்), 'கற்பனை - தனித்தன்மை' போன்ற திறமைகளை 'எங்கள்',்றும்  'engalcreation' ஆகிய வலைப்பூக்கள் மூலம் ஆற்றிவரும் பணிகள் எண்ணற்றவை. அதே போன்ற திறமையை காட்டுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தமைக்கு என்ன சொல்லி நன்றி தெரிவிப்பது எனத் தெரியவில்லை.


"இந்த உலகம்(பூமி மட்டும்) சுற்றும் திசையில இருந்து மாறி எதிர் திசையில் சுற்றும்போது என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் ?"

'எங்கள்' சொன்னவை, நினைவில்  கொள்க : ஆரம்பப் பள்ளி நாட்களில் நமக்குக் கிடைத்த பாடம், காலையில் நாம் சூரியனை நோக்கி நின்றால், நம் இடக்கைப் பக்கம் வடக்கு, வலக்கை பக்கம் தெற்கு. இதன் படி பார்த்தால், இதுநாள் வரை வடக்காக அறியப்பட்ட திசை தெற்கு ஆகிவிடும். தெற்கு என்று இவ்வளவு நாள் அறியப்பட்ட திசை வடக்கு ஆகிவிடும். எனவே நானும் அதே வழியில் பயணம் செய்கிறேன்.

என் கற்பனை(?) குதிரையை தட்டி எழுப்பியதன் விளைவுகள் கீழே..
 
  1. தற்பொழுதுள்ள உலக வரைபடங்கள்(world maps) நமது மனதில் நன்றாக பதிந்துள்ளத்தால், அதனை தலைகீழாக மாற்றம் செய்யாமல், வரைபடங்களுடன் மேற்கண்ட குறியீடு அச்சிட வேண்டும்.
  2. 'திசைமானி (compass)' காட்டும் அம்புக்குறி முனையில் 'S' என்று திருத்தி எழுதப் பட வேண்டும்.
  3. North pole, South Pole ஆகும் ( South pole, North pole ஆகும்)
  4. விஞ்ஞான ரீதியாக, 'தெற்கே' தலை வைத்து படுக்க வேண்டாமென சொல்லப்படும்.
  5. 'தை' முதல் 'ஆனி' வரை தக்ஷிணாயனமாகவும், 'ஆடி' முதல் 'மார்கழி' வரை உத்தராயனமாகவும்  மாற்றப்படும்.
  6. 'தென்குமரி', 'வடகுமரி' என பெயர் மற்றம் செய்யப்படும்.
  7. இந்திய இருப்புப்பாதை மண்டலங்களும் (மத்திய மண்டலம் தவிர) பெயர் மாற்றங்கள் செய்யயப்படும். (உதாரணம் -- 'வடக்கு ரயில்' மண்டலத்தின் தலைமையகம் சென்னையாக மாறும்.)
  8. கிழக்குத்  தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலையாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத்  தொடர்ச்சி மலையாகவும் மாறிவிடும்.
  9. சென்னையில் 'சூரிய நெருப்புப் பந்து' கடலினுள் அமிழ்வதையும், அதே 'நெருப்புப் பந்து',  கடல்-தண்ணீர் உள்ளிருந்து எழும்புவதை மும்பையிலும் காணலாம். (கன்யாக்குமரியில், வழக்கம்போல், இரண்டினையும் காணலாம்..)
  10. நாமெல்லாம், மேற்கிந்தியர்கள் என அழைக்கப் படுவோம்.

இன்னும் பல சொல்லலாம்.. மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், இதனோடு நிறுத்துவதுதான் நல்லது என நினைக்கிறேன். மிக்க நன்றி.

இதனை தொடர, நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்.
  1. பெயர் சொல்ல விருப்பமில்லை,
  2. சித்ரா