ரொம்ப தெளிவாத்தான் இருக்கான்..

நாம படிச்ச காலத்துல 'ஹிந்தி' சப்ஜெக்டு ஸ்கூலுல கெடையாது.. வேலைக்காக வேற மாநிலத்துக்கு, முக்கியமா வட(நோ.. நோ.. நாட் "மீ தி ஃபர்ஸ்டு" அது 'வடை'.. இது 'வட'-திசை) இந்தியா பக்கம் போன ஆரம்ப நாள்ல.. 'ஹிந்தி' தெரியாம நா பட்ட கஷ்டம்.. அனுபவப் பட்டவங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா 'ஹிந்தி' கத்துக்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு ஹிந்தி தெரிஞ்ச/புரிஞ்ச சமயத்துல ஒருத்தன் ஹிந்தில சொன்ன ஜோக்க புரிஞ்சுக்க எனக்கு ரெண்டு நாளாச்சு.. (நல்ல வேளை, அது டியூப் லைட்டு ஜோக்கு இல்லை).

எது எப்படியோ, 'ஹிந்தி' தெரிஞ்சதுனால ஒரு மொக்கையாவது போட முடிஞ்சுது (இது ரெண்டாவது). சரி விஷயத்துக்கு வாரேன்.

நாம பட்ட கஷ்டம் நமக்கடுத்த தலைமுறைக்கு அநேஹமா இருக்காது.. இப்பலாம் எல்லா ஸ்கூலுளையும் 'ஹிந்தி' சொல்லித்தராங்க. நம்ம பையனுக்கு ஒண்ணாம் க்ளாஸ்லேருந்து 'ஹிந்தி' பாடம் உண்டு. இந்த (ரெண்டாம் கிளாஸ்ல) அவனுக்கு 'கதை-கட்டுரைகளும்' 'ஹிந்தி' பாடத்துல இருக்குது. நம்ம வீட்டம்மாக்கு நம்மளவுக்கு 'ஹிந்தி' தெரியாது( இதுலயாவது நமக்கு முதலிடம், வூட்டுல). அதனால ரெண்டு நாளைக்கு முன்னால, நம்ம பையனுக்கு பாடம் சொல்லித்தர வேண்டி இருந்தது.. பாடத்தின் பக்கத்த கீழ படத்துல கொடுத்துருக்கேன். 'சிங்கத்தின் சப்தம்' (शेर की आवाज) என்ற தலைப்பில் அமைந்த ஒரு சிறிய நிகழ்வை சொல்லும் பாடமது.

சாராம்சம் : சிறுவர்-சிறுமியர் ஒரு முறை வயல் வெளிக்கு சென்றனர். அங்கு நன்றாக விளையாடினார்கள். பலவித பழங்களையும் உண்டு மகிழ்ந்தனர். பிறகு மீண்டு விளையாடினார்கள். அப்போது, ரமேஷ் என்ற சிறுவன், சிங்கத்தின் முகமூடியினை (மாஸ்க்) அணிந்துகொண்டு சிங்கம் போல கர்ஜனை செய்தான். அதனைக் கண்ட மற்ற சிறுவ-சிறுமிகள் பயந்து விட்டார்கள். பயத்தில் ஓட ஆரம்பித்தார்கள்.

நில்லுங்கள் ! நில்லுங்கள் ! இங்கு சிங்கம் (சிங்கிளா கூட) இல்லை.. இல்லவே இல்லை. ரமேஷ்தான் சிங்கம் போல வேடம் பூண்டிருக்கிறான். எல்லாரும் பயந்து விட்டீர்களே! ஆஹா, என்ன அருமையான வேஷப் பொருத்தம்.. அச்சசல் சிங்கம் போலவே கர்ஜித்து எல்லோரையும் பயமுறுத்தி விட்டானே அவன். அதான் சங்கதி.

இதுக்கும் தலைப்புக்கு என்ன சம்பந்தம் ? இருங்க தலைப்ப நா இன்னொருதரம் பாத்துட்டு பதில் சொல்லுறேன். ஆங்... தலைப்பு சரியாத்தான் இருக்கு.. நம்ம பையன் கொஞ்சம் தெளிவாத்தான் இருக்குறான்.

நம்ம பையனுக்கு நான் சொல்லித் தரும் பொது "ரமேஷ் என்ற சிறுவன், சிங்கத்தின் முகமூடியினை (மாஸ்க்) அணிந்துகொண்டு சிங்கம் போல கர்ஜனை செய்தான். அதனைக் கண்ட மற்ற சிறுவ-சிறுமிகள் பயந்து விட்டார்கள். பயத்தில் ஓட ஆரம்பித்தார்கள்.", என்ற வரிகளை சொல்லியவுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்த்துவிட்டு, "எதுக்கு பயந்து ஓடுறாங்க ?. அதுதான் சிங்கம் இல்லியே.. அது லயன்-மாஸ்க் போட்ட ரமேஷ்தானே' அப்படீங்கறான். இப்ப சொல்லுங்க, நம்ம பையன் வெவரந்தானே ?

ஏன் ? எதற்கு ?

சின்ன வயசுல அம்புலிமாமா படிச்சிருப்பீங்க..  அதே ஸ்டைலுல ஒரு கதை.. என்னோட சொந்த பாணில..


தன்  முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் தனது நீண்ட வாளை எடுத்துக் கொண்டு, மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்ட வேதாளத்தை தன் தோள் மீது போட்டுக் கொண்டு கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தான். போகும் வழியில் அவனிடமிருந்து விடுபட, அவனது மௌனத்தை கலைக்க வேண்டும். இதனை மனதில் நினைத்த வேதாளம், வழக்கம்போல ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது...

சிம்மபுரி என்ற நாட்டை சுயமித்தரன் என்ற அரசன் சீரோடும் சிறப்போடும் ஆண்டு வந்தான்... அவனது  ஆட்சியில் மக்களும் நேர்மையாக உழைத்து நாட்டிக்கு பெருமை சேர்த்தனர்...  மக்கள் மீது அரசன் வைத்திருந்த அன்பும், பண்பும் அனைத்து மக்களையும் கவந்திருந்தது. அரண்மனை இரவுக் காவலாளி முத்து அந்த அரச குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான்.

அந்நாட்டின் இளவரசன் வில்வித்தையில் நன்கு கற்று தேர்ச்சி பெற்றிருந்தான். ஒருமுறை, இளவரசன் காட்டிற்கு தோளில் அம்பறாத்துணி நிரம்பிய அம்புகளை ஏந்தி வில்லுடான் (will )  -வேட்டையாட கிளம்பும் பொது, முத்து அவனிடம் சென்று.. முந்தைய இரவு தான் தூங்கும் பொது, கனவில், இளவரசனுக்கு, காட்டில் பேரபாயம் காத்திருப்பதாகவும், வேட்டைக்கு போகவேண்டாமெனவும் சொன்னான். இளவரசனோ, தனக்கு தனது வில் வித்தையில் மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும், தனக்கு காட்டில் தீங்கு நேராது எனவும் சொன்னான்.

அதற்கு முத்து, "அந்த அபாயம் விலங்கினால் அல்ல", இளவரசரே என்றான். 'விலங்கினால் அல்ல' என்பது தனக்கு 'விளங்கும்' படி விளக்கிச் சொல்லுமாறு  கேட்டான்.  அதற்கு முத்து, காட்டினுள் இளவரசன் செல்லும்போது அதி பயங்கர மின்னல் இடியுடன் மழை போயிந்ததகவும்.. இளவரசன் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒதுங்கவும், சிறிது நேரத்தில் அந்த கட்டிடம் இடிந்து இளவரசன் மேல விழுந்து அவனது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியதை, தான் கண்டதாக சொன்னான்.

இதை கேட்டதும், இளவரசன் இடி போலச் சிரித்து.. "மழை வரும் முகாந்திரம் எதுவுமே இல்லை.. நீ சொல்வது வியப்பாக இருக்கிறது, எனது நேரத்தை வீணடிக்காதே.. நான் வில் வேட்டைக்கு செல்கிறேன்", எனக் கூறி போக முற்பட்டான். அதனை கேட்டுக் கொண்டிருந்த அரசனோ, இளவரசனை தடுத்து, அன்றையதினம் வேட்டைக்கு போகவேண்டாமெனவும் கட்டளையிட்டான்... 'அரச கட்டளை' மீற முடியுமோ, இளவரசனும் தனது வேட்டை பயணத்தை நிறுத்திக் கொண்டான். 

முத்து சொன்னதுபோலவே சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் காட்டில் கனமழை பொழிந்து, ஒரு பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாக மறுநாள் தெரிய வந்தது. அதனை கேட்ட இளவரசன், தனது தந்தையான அரசரிடம், தனது உயிரைக் காத்த முத்துவிற்கு, பரிசளிக்கும்படி வேண்டினான். தந்தையும் முத்துவிற்கு பரிசளித்தது மட்டுமில்லாது, அவனை பணி நீக்கமும் செய்தான். 

'கதையை நன்கு கேட்டாயா விக்கிரமாதித்தனே ? தனது மகனின், நாட்டின் இளவரசனின் உயிரினை காத்த முத்துவை, பணி நீக்கம் செய்த அரசனின் செயல் சரிதானா ? சரியானால் என்ன காரணம்? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் நீ சொல்லவில்லையானால், உன் தலை சுக்கு நூறாகட்டும்', என்றது வேதாளம்.

வழக்கம் போல், விக்கிரமாதித்தன் சரியான பதிலை சொல்லவே, அவனது மௌனம் கலைந்த காரணத்தினால், வேதாளம் மீண்டும் முருங்கை மரமேறியது.

விக்கிரமாதித்தன் சொன்ன பதில் என்ன ? பின்னூட்டமாக சொல்லவும்.  எல்லோரும் முயற்சி செய்ய வசதியாக பின்னூட்டம் தற்போது வெளியிடமாட்டேன்....



நானும் ஒரு பாடகன்

கேட்டு ரசிப்பது, இளையராஜாவின் இன்னிசை

கேட்டு ரசிப்பது, ஏ. ஆர். ரகுமானின்  இன்னிசை

கேட்டு ரசிப்பது, தேவாவின்  இன்னிசை

கேட்டு ரசிப்பது, கே.ஜே. யேசுதாசின்  இன்னிசை

கேட்டு ரசிப்பது, எஸ்.பி.பியின்  இன்னிசை 


அட.. நா பாடினால் அந்த பூனையோட ரசிக்கும் தன்மை.. எப்படியிருக்கும்.. ஒரு சிறிய கற்பனை.. கொஞ்சம் கீழ போயி பாருங்க....


























நான் பாடிய பாடலை கேட்ட பூனை..

நன்றி : இதனை இ-மெயிலில் அனுப்பிய 'சரண்யாவிற்கு'


வயசு ஒண்ணு !

இந்த மாதம் மூன்றாவது சோமவாரத்தில் இரண்டாமாண்டு துவக்க விழா..?


எனக்குத் தெரியும்                                            3 (27 %)
எனக்குத் தேரியாது                                          1 (9 %)
நா இந்த ஆட்டத்துக்கு வல்ல                           4 (36 %)
க்ளு  வேணும்                                                 3 (27 %)

    --------------------------------------------------

கடந்த பத்து தினங்களாக எனது வலைப் பதிவில் மேற்கண்ட கேள்வியை நீங்க பார்த்திருக்கலாம்.. சும்மா சொல்லக்கூடாது.. நம்ம வார்த்தைக்கு ஒரு 11 பேராவது மதிப்பு கொடுத்து அட்டென்ட் செய்யுறாங்க.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது..

  • முக்கியமா.. நண்பர் 'அருண்' மற்றும் 'பெ.சோ.வி' ரெண்டு பெரும் கரக்டா கண்டு பிடிச்சிட்டாங்க...

  •  இதுக்கு க்ளுலாம் தரத் தெரியல.. அதனாலா அந்த மூணு பேருக்கும்.. 'ஐ யாம் சாரி'.

  • தெரியாதுன்னு சொன்ன  அந்த ஒரு நண்பர் / நண்பி யோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

  • இந்த  ஆட்டத்துக்கு வர விருப்பமில்லாத நாலு பேருக்கும் வேற ஏதாவது நல்ல கேள்வி கேட்டு அவங்களையும் இதுல கலந்துகொள்ளச் செய்ய முடியுமான்னு பாக்குறேன் அப்புறமாய்..


ஆமாம், ஒரு வருடத்திற்கு முன்னர்(18 -10 -2009 ) முதன் முதலாக நாமளும் கடையத் தொறந்தா என்ன அப்பனிட்டு ஆரம்பிச்சதுதான் இந்த வலைப்பூ.. என்ன எழுறதுன்னே தெரியாம.. அந்த சமத்துல வந்து எரிச்சலை கிளப்பிய ஒரு மெகாத்தொடர் பற்றி ரெண்டே வரிகளில் எழுதுனேன்.

அப்புறமா, ஏதோ எனக்கு தோணியதை எழுதறேன். அதலாம் படிச்சிட்டு, பின்னூட்டம் இன்ட்லில ஒட்டு போடுற எல்லா 'தமிழ்ப் பதிவுலக'  சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி.. உங்க ஆதரவ தொடர்ந்து கொடுத்துக் கிட்டு இருங்க.. நன்றிகள்.

இன்றையதினம்  மேட்டரே இல்லாம மேல சொன்னத நா எழும்போது, எனது நண்பரிடமிருந்து வந்த ஒரு வித்தியாசமான ஒரு படம் ... இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளேன்..   -- என்னமா யோசிக்குறாங்க.. எங்கிட்டு ரூம் போடுவாங்க இதுக்குலாம்..? பெரும்பாலும் எல்லாருக்குமே, 'வித்தியாசமான விஷயங்கள் / எண்ணங்கள்' பிடித்துவிடும். அந்த மாதிரி 'creativity' உள்ள விஷயம் இந்த படம் என நான் நினைக்கிறேன்.  பாத்துட்டு பின்னூட்டத்துல மறக்காம சொல்லுங்க..

 









தேசியப் பார்வையில் நவராத்திரி - தஸரா

நவராத்திரி திருவிழா.. நான் இந்த போஸ்டுல சொன்னா மாதிரி நமக்கு கொலு-சுண்டல் தான் ஞாபகத்துக்கு வரும். நாம் கொண்டாடும் முறை பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

சற்று தமிழகத்தை விட்டு வெளியே சென்று இருந்த / இருக்கும் பொது, அந்தந்த  இடங்களில் நவராத்திரி, தஸரா , எப்படி கொண்டாடுகிறார்கள்,  எனத் தெரிந்துகொண்ட விஷயங்கள்.

குஜராத் :
நான் 11 வருடங்கள் குஜராத்தில்  இருந்திருக்கிறேன்.  இங்கு நவராத்திரி என்றால் ஆட்டமும் பாட்டும் தான்.. நவராத்திரி என்பதற்கு உண்மையான அர்த்தத்தை விளக்குவதுபோல.. எல்லா கொண்டாட்டங்களும் இரவு 9 -10 மணி முதல் ஆரம்பமாகி.. பின்னிரவு 2 -3 மணி வரை நடைபெறும். இங்கும் பெண்களுக்கான விழாவாக  இருந்தாலும்.. ஆண்களும் கலந்து கொள்ளுவார்கள். பாரம்பரிய ஆடை அணிகலன்களை போட்டுக் கொண்டு அவர்கள் ஒவ்வொரு இரவும் 9 அல்லது 10 மணி முதலில் 'ஆரத்தி' எனப்படும், வழிபாடு / பூஜையினை செய்து ஆரம்பிக்கும் ஆட்டமும், பாடும் பாட்டும் -- அவர்களது 'பாரம்பரியத்தினை பிரதிபலிக்கும்'.

'அம்பா மா' எனப்படும் அம்பாள் / அம்மன் அசுரணை அழிப்பதற்கு, 9 இரவுகள் தூங்காமல் தவமிருந்ததாகவும்.. அவளுடைய தவத்தினை போற்றும் வகையிலும், அவள் தூங்காமல் இருக்கவும் மக்கள், பாரம்பரிய நாட்டியம் 'கர்பா' ( gharbha - घर्भा ), என்ற ஆட்டம் ஆடிவருவதாகவும் சொல்லப் படுகிறது. பெரிய வட்டமாக, அம்பாளை மையமாகவும் சுற்றி வருவார்கள். நமது வழக்கமான 'பிரதக்ஷன' கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு,  முறைக்கு நேர் எதிராக (கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு என சுற்றுவார்கள்.


குஜராத்தில் தீபாவளி முடிந்த இரண்டாம் நாள் அவர்களது புத்தாண்டு தினம் வரும். ஆதலால், தீபாவளியை ஒட்டி அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் எல்லாம் மூன்று வாரங்கள் வரை விடுமுறை அளிக்கப் படும். ஆதாலால்.. காலாண்டுத் தேர்வுகள் முடிந்தாலும் இந்த நவராத்திரிகளுக்கு விடுமுறை இருக்காது. அப்படி பள்ளி கல்லூரி நாட்களிலும் இள வட்டங்கள் மிக்க ஆர்வமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாகும் இந்த நாட்கள்.

புதிதாக திருமணம் ஆனவர்களும், திருமணம் நிச்சயிக்கப் பட்ட ஜோடிகளும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் இந்த விழாக்களில். நாளடைவில் காதலர்களும் ஜோடியாக ஆரம்பித்து விட்டனர் என்று அந்த ஊரு பாட்டிமார்கள் சொல்லியிருக்கிறார்கள், என்னிடம். நாளடைவில் இந்த விழாவும் விபாபார மார்கத்தில் செய்யப்படுவதாகவும் அந்த ஊர் பெரியவர்கள் சொன்னார்கள்.

தாண்டியா -- இது நமக்கு பிரியச்சமான 'கோலாட்டம்' தான். இதையும் வட்ட சுற்றுப் பாதையில் செய்வார்கள். நீங்கள் இந்த ஆட்டத்தினை சினிமாவில் பார்த்திருப்பீர்கள்.. (படம் : காதலர் தினம் -- 'தாண்டியா ஆட்டம் ஆட...' என்று துவங்கும் பாடல்)   குஜராத்தில் நடு இரவில் பெண்கள் கூட தனியாகப் போகலாம் என்பது கண்டிப்பாக இந்த தினங்களில் உண்மைதானென நான் எனது கண்ணால் பார்த்திருக்கிறேன்.

ஆந்திரா :
இரண்டு வருடங்களாக நான் ஆந்திராவில் இருந்து வருகிறேன். சென்ற வருடம் நமது தமிழ்நாட்டில் நவராத்திரியை கழித்ததால்.. இந்த வருடம் தான் இவர்கள் கொண்டாடும் முறை தெரிய வந்தது.

நான் இருக்கு பகுதியில் ஒரு 'கம்யூனிடி ஹாலில்', அம்பாளின் ஒருவத்தினை பிரதிஷ்டை செய்து தினமும் காலை, மாலை, பூஜை, புனஸ்காரம் செய்து.. பிரசாதம் விநியோம் செய்வார்கள். பின்னர் நடனம், பாட்டு, பஜன், போன்ற வித விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அம்பாளுக்கு வித விதமான அலங்காரங்கள் செய்து வருகிறார்கள். அந்த அலங்காரத்தில் என்னை மிகவும் கவர்ந்து, ஆச்சரியப் பட வைத்த ஒன்று நேற்றைய முன்தினம் நடந்தது. அம்மனுக்கு அளித்த அலங்காரம் சுமார் 20 லட்சம் மதிப்பிலானது.  அத புகைப்படத்தை கீழே கொடுத்துள்ளேன் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் அதன் மதிப்பை.... ஆனால் இந்த வித அலங்காரம் செலவினை குறைக்க உதவும்..  புரியவில்லையா ? படத்தினை பாருங்கள் புரியும்....


இதில் ஆயிரம், ஐநூறு, நூறு, ஐம்பது, இருபது, பத்து, ஐந்து, இரண்டு, ஒரு  -- புதிய கரன்சி ரூபாய் நோட்டுக்களைக் பயன்படுத்தியுள்ளனர். யூ.எஸ். டாலர் கரன்சியும் இருந்தது.... நன்றாக படத்தைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். பயன்படுத்திய பணங்களை மீண்டும் பயன்படுத்தலாமல்லவா? (so not an expenditure).

மேற்கு வங்கம் :
இங்கு தான் 'துர்க்கா பூஜா' ரொம்ப பிரபலம் எனக் கேள்வி பட்டிருக்கேன். இந்தப் பகுதிக்கு இது வரை செல்லும் வாய்ப்பு கிடைக்காதலால் அது பற்றி விரிவாக எழுத முடியவில்லை. மேலும் விபரங்களுக்கு இந்த லின்க்கினை  கிளிக்கவும்.

மைசூர் தசரா :

மைசூர் அரண்மனை - தசரா - யானைகளின் அணிவகுப்பு.. மன்னர் காலத்து முறை கொண்டாட்டங்கள்..  இதை பற்றியும் எனக்கு அனுபவமில்லை. கொடுக்கப்பட்ட இந்த லிங்க்குகளை பார்த்து மேலும் அறியவும்.

நன்றி..

"அம்மா அருள் 'காமி'-நீ" (சவால் சிறுகதை)


ஒரு ஊருல ஒரு கணவன், மனைவி இருந்தாங்களாம்.. நெறையா பொன், பொருள், வீடுவாசல், நெலம், இருந்தாலும் அவங்களுக்கு ஒரே ஒரு தீராத கொறை இருந்திச்சாம். அதான்.. கல்யாணமாகி ரொம்ப வருஷமாகியும் கொழந்தையே இல்லையாம். அவங்க, கோவிலுக்கு போயி அம்மன்கிட்ட, 'அம்மா, எங்களுக்கு அருள் காமி நீ' ன்னு மனம் உருகி வேண்டிகிட்டாங்க. தங்களுக்கு கொழந்தை பொறந்துச்சின்னா அந்த ஊரு கோவில் அம்மனுக்கு ஒரு வைர மூக்குத்தி, வைரத்தோடு எல்லாம் வாங்கி அணிவிக்கறதாகவும் வேண்டிகிட்டாங்கலாம் .....

அந்தநாளுலேருந்து ஒரு வருஷம் முடியறதுக்குள்ள, அவங்களுக்கு ஓரு அழகான பெண் குழந்தை பொறந்துச்சாம். அம்மனோட அருளப் பாத்து சந்தோஷமடைஞ்சு, 'காமினி' ன்னு அந்த குழந்தைக்கு பேரு வெச்சாங்க. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய்.. 'காமினி' ஒரு நல்லா புத்திசாலிப் பெண்ணாகவும், அழகு மற்றும் அறிவுடன் வளர்ந்தாள்.

(விதிகளின் படி ரிவைண்டு /ப்ளாஷ் பேக் / கொசுவத்தி இதெல்லாம் இருக்கக் கூடாதாம்.. ஆனாலும் 'பாஸ்ட் பார்வாடு' பண்ணலான்னு நெனைக்கிறேன், அதனால..)

------ பல வருடங்களுக்குப் பிறகு.......
(எத்தனை வருஷம்னு சொன்னா, நம்ம ஹீரோயின் 'காமினி'யோட வயச கண்டுபிடிச்சிடுவாங்களே..!)


"அம்மா நா டியூடிக்கு போயிட்டு வரேன்..", காமினி சொன்னாள். "பத்திரமா போயிட்டு வா", அது அம்மா. தனது 'மாருதி ஸ்விஃப்டு ' ஸ்டார்ட் செய்து, நேரே, தான் வேலை செய்யும் மருத்துவமனையை நோக்கி செலுத்தினாள்  Dr. காமினி.  என்னதான் சொத்து சுகம் இருந்தாலும், தனது மகள், மக்களுக்கு சேவை (சர்வீஸ்) செய்வதற்காகவே மருத்துவமனையில் மருத்துவப் பணி செய்யும் குணத்தினை கண்டு பெருமை கொண்டாள் அவள் அம்மா. அமாங்க.. 'காமினி' ரொம்பவே நல்ல உள்ளம் கொண்டவள்.
(வடிவேலு பாணில சொல்லனும்னா, 'அவ ரொம்பவே நல்லவ'.)

அன்றையதினம் ஒரு முக்கியமான அறுவை சிகிச்சை இருந்தது. Dr. காமினி அன்று அறுவை சிகிச்சை செய்யும் தலைமை மருத்துவருக்கு அடுத்தப் பொறுப்பில் இருந்தாள். இது 'காமினி' கலந்து கொள்ளும் இரண்டாவது அறுவை சிகிச்சையாதலால், மேலும் தான் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து அவள் கவனமாகவும், ஆர்வமாகவும் இருந்தாள்.

(கதை ரொம்ப ஸ்லோவா போகுதா.. அதான் பாஸ்டு பார்வர்டு போட்டேனே.. அது போதாதா.. சரி.. ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வருவோம்.)

அறுவை சிகிச்சை நல்லா விதமாக முடிந்தது.. எனினும், தான் இன்னும் சற்று கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பதால்.. டாக்கரிடம், "நான் இன்னும் கொஞ்ச நேரம் பேஷண்ட அப்சர்வ் செய்லாம்னு நெனைக்கிறேன்.. அதற்கு உங்க பெர்மிஷன் வேணும்." அனுமதி அளிக்கப்பட்டது. நர்சுகள் முதலில் வெளியேற.. பின்னர் சிறிது நேரம் வரை, தலைமை டாக்டர் கூட ஆபரேஷன் தியேட்டரிலேயே இருந்துவிட்டுச் சென்றார்அவர் வெளியே  செல்லும் பொது, ஆபரேஷன் அறைக் கதவு மூடப்பட்டு, 'ப்ளக்' என்ற சப்தம் வந்தவுடன், அவள் அந்த தவறை உணர்ந்தாள். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.


அந்த சூழ்நினையில், அவளிடத்தில் யாராக இருந்தாலும் அதை செய்வது தான் சரியானதாகும். டாக்டர் கதவினை கவனமின்றி வெளிப்புறமாக தாழிட்டு விட்டார்.... ஏசி சத்தத்தில், தான் கூப்பிடுவது யாருக்கும் கேட்காது.. அந்த அறையிலோ அலைபேசி / இன்டர்காம் அனுமதி இல்லை.. .. ஒருவேளை 'பேஷண்டுக்கு' ஏதாவது அவசர மருத்துவத் தேவைன்னா.. அப்போ கதவ திறக்க முயற்சி செய்வது தப்பா போயிடுமோ.. அதனாலத்தான் 'காமினி' அப்படி செய்தாள். நாலு பெருக்கு வெயிட் பண்ண வேண்டியதில்லை, ஒருத்தருக்கு கஷ்டம் வரும்போல இருந்தா கூட இந்த மாதிரி செய்வது தப்பில்ல..(என்ன சொல்லுறீங்க, சரிதானே ?).

என்னதான் சரியான செயல் செய்தாலும்.. சற்று படபடப்பு ஏற்பட்டது அவளுக்கு. கொஞ்சம் டென்ஷன் வந்ததால், களைப்பாகக் காணப் பட்டாள். இருந்தாலும் உடனே அவள் ஆபரேஷன் தியேட்டர் சென்று கதவை திறந்து.. நர்ஸ்களிடம் அந்த பேஷண்டை ஸ்பெஷல் வார்டுக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டாள்.

களைப்புடன் அங்கேயே உட்கார்ந்தவள் அடுத்த வினாடி அது நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வேகமாக ஒருவன் பின்னாலிருந்து அவளை நோக்கி வந்து, யாருக்கும் தெரியாத படி, கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னுடைய குரலை மாற்றி.
ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலைஎன்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. பயத்தில் காமினிக்கு வந்த விக்கல் சட்டென்று நின்றுவிட்டது."ஹா.. ஹா, பாத்தியா ஒரு டாக்டருக்கே  வைத்தியம் செஞ்சுட்டேனே..".. என்று சொல்லுவதை கேட்ட 'காமினி' கோபத்துடன் அவனிடம்.. அதுக்காக.. இப்படியா பயமுறுத்துறது ?" என்றாள். "மறுபடியும் சாரி.. இந்த பக்கமா வந்தேன்.. அப்படியே என்னோட தேவதைய ஒரு தடவை சைட்டடிச்சிட்டு போகலாமுன்னு வந்தா.. இங்க நீ ஜன்னல் வழியா குதிச்சு வந்த கதைய கேட்டு, நீ எப்படி இருக்கேன்னு தெரிஞ்சிக்க வந்தேன்.. நீ ரொம்ப டயர்டா.. விக்கிக் கிட்டு இருந்தே.. அதான் என்னோட அதிர்ச்சி வைத்தியம், விக்கல் நின்னுடிச்சி பாரு. இந்த துப்பாக்கி கூட 'தீபாவளி' கேப்பு வெடிக்க என்னோட அக்கா பையனுக்கு வாங்கினதுதான்.. சரி சரி.. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க.. நா அப்புறமா வரேன்..", சொல்லிவிட்டு வெளியேறினான், அவளால் நான்கு  மாதங்களாக காதலிக்கப்படும், காதலன் சிவா.

(அஹா ரெண்டு மேட்டரை கோத்தாச்சு.. இன்னும் ஒரு மேட்டரு தான் பாக்கி.. 'டயமண்டு' மேட்டரு.... சரி சரி.. அதுக்கு சரியான நேரம் கெடைக்காதா என்ன ?)



தன்னை சுதாரித்துக் கொண்டு, பழம் உண்டு, தண்ணீர் பருகி, வழக்கம்போ 'இன்- பேஷண்டுகளை' பார்க்கும் ரவுண்ட்சுக்கு சென்றாள். ரவுண்ட்சு முடிந்து 'அவுட் பேஷண்டுகளை' பரிசோதிக்க தனது அறைக்குள் சென்றாள்.

(மீண்டும் பாஸ்டு பார்வர்டு.. இல்லேன்னா ரொம்ப போரடிக்கும்.... நாம பேஷன்டா ஹாஸ்பிடல் வெளிய நின்னு நெறையா அனுபவச்சிருக்கோம்.. போதும்டி அம்மா.. - இது அம்மன் சம்பத்தப்பட்ட கதை.. அதனால 'சாமி' க்கு பதிலா 'அம்மா')

மதிய உணவுக்கு வீட்டிற்கு செல்ல, டாக்டர்'ஸ் கார் பார்கிங் வந்து தனது கார் கதவை திறந்து போது, எதிர் பக்க கதவின் கண்ணாடியை மூடாமல் சென்றது தெரிய வந்தது.. குனிந்து டிரைவர் சீட்டில் உட்காரும் போது சீட்டில் ஏதோ தட்டுப் படுவது தெரிந்தது.. எடுத்துப் பார்த்தால்.. ஜொலிக்கும் வைரத் தோடுகள் ....பார்த்த உடனேயே தெரிந்தது, அவைகள், தனது பெற்றோர்களால் கோவில் அம்மனுக்கு அணிவிக்கப் பட்டது.

நேரே கோவிலுக்கு சென்றாள்.. அங்கு போலிஸ் குழுமியிருந்தது.. இன்ஸ்பெக்டரிடம் சென்று, அந்த தோடுகளை கான்பித்தாள். தான் பேசும் முன்னரே,காமினி...  வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியேஎன்று பாராட்டினார் பரந்தாமன். "இன்ஸ்பெக்டர் ப் போலீஸ்" என்று அவருடைய சட்டையில் மெட்டல் ப்ளேட் தொங்கியது. "என்ன சொல்லுறீங்க இன்ஸ்பெக்டர், எனக்கு எதுவுமே புரியலே" என்றாள் காமினி.

"இந்த கோவில் பாதுகாப்புக்கு வெச்சிருந்த ரெண்டு கான்ஸ்டபுளும், திட்டம் போட்டு இன்னிக்கு இந்த ரெண்டு வைரத் தோடுகளையும் திருடிட்டு ஓடிட்டானுங்க.. நாங்க தேடிக்கிட்டு இருக்கோம் அவங்களை. உங்களுக்கு எப்படி இந்த வைரத் தோடுகள் கிடைத்தன ?" எனக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

"ஹாஸ்பிட்டலுல என்னோட கார் சீட்டுல இருந்துச்சி.. அடையாளம் நல்லா தெரிஞ்சதுனால, உடனே இங்க வந்துட்டேன்", சொன்னாள் காமினி.

"கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காகக் கொடுத்தார்.." என்று சிணுங்கியது, இன்ஸ்பெக்டருடைய அலைபேசி. "ஹலோ இன்ஸ்பெக்டர் பரந்தாமன் ஹியர், என்னது...., அப்படியா.... நல்லது, நான் உடனே ஸ்டேஷனுக்கு வருகிறேன்" என்று பேசிய இன்ஸ்பெக்டர் தனது அலைபேசியில் வந்த 'காலை'(call) கட் செய்துவிட்டு.. அந்த தோடுகளுடன், காமினியையும் .அழைத்துக் கொண்டு போலிஸ் ஸ்டேஷன் சென்றார்.

ஸ்டேஷனில் ...
இன்ஸ்பெக்டர் பேச ஆரம்பிச்சார் "அப்பாடா இந்த கேஸு ஆரம்பிச்ச ஒரு மணி நேரத்துலேயே சால்வாயிடுச்சு.., நான்தான் போலீஸு கான்ஸ்டபிள் ரெண்டு பேரையும் வீணா சந்தேகப் பட்டுட்டேன்.. அந்த ரெண்டு கான்ஸ்டபிளையும் அடிச்சு கட்டி போட்டுட்டு அவங்க யுனிபோர்மப்
போட்டுக்கிட்டு ரெண்டு திருட்டுப் பசங்க கொவில காவல் காப்பது மாதிரி, சமயம் பாத்து அந்த வைரத் தோடுகளை திருடிட்டு சத்தம் போடாம கொவில்லேருந்து நழுவிட்டாங்க.. வெளியே போலிஸ் உடைல போனதால சந்தேகம் யாருக்கும் வரலை.. இருந்தாலும் அவங்களுக்கு பயம் இருந்திச்சு.. உங்க ஹாஸ்பிடல் பக்கமா போனப்ப உங்க காரோட கண்ணாடி கொஞ்சம் திறந்து இருந்ததால அவுங்க தோடுகளை காருக்குள்ள போட்டு காரோட போகலாம்னு   நேனைச்சப்ப ஹாஸ்பிடல் செக்யூரிட்டி அவுங்கள சந்தேகமா பாத்து என்ன, எதுன்னு கேக்க... அவங்க புதுத் திருடங்க போல... பயத்துலேயே தாறுமாறா ஓட.. ரோட்டுல ஒருத்தன் ஒரு மோட்டார் பைக் மேல மோதி விழ.. அடுத்தவன் தப்பிச்சிட்டான்.. விழுந்தவன்  முழிசச் முழில டிராபிக்கு போலீஸு சந்தேகப் பட்டு அவனை விசாரிக்க.. அவன் எல்லா உண்மையையும் சொல்லிட்டான்.. அவனோட தகவல்படி செயல் பட்ட போலீஸு, அந்த கூட்டாளியையும் பிடிச்சுட்டாங்க, கான்ஸ்டபிள்களையும் காப்பாத்திட்டாங்க.."

"சரி சார்.. எதிர் பாக்காத சம்பவங்கள்.. நா ரொம்ப களைப்பா இருக்கேன்.. பசி கூட.. ஏதாவது பார்மாலிடீஸ் இருந்தா அப்புறமா சொல்லுங்க.. இப்போ நா வீட்டுக்குப் போறேன்", எனச் சொல்லிவிட்டு அவர் பதிலுக்குக் கூட காத்திராமல் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து தனது காரை ஸ்டார்ட் செய்தாள் . வீட்டிற்கு வரும் வரை அவள் மனதில் 'கோவில் அம்மனும்', சிவாவும்' மாறி மாறி வந்து சந்தோஷம் தந்தார்கள்.



பின்குறிப்பு : போலீஸ கெட்டவரா காமிச்சா நல்லா இருக்காது. 'வேலியே பயிர மேஞ்சிதுன்னா நல்லா இருக்குமா?' அதான்.. அவுங்களையும் நல்லவர்களா காட்டி இருக்கேன்..

டிஸ்கி :
1) மொத தடவையா கதை விடுறேன்.... நல்லா இருக்குதா பின்னூட்டத்துல சொல்லுங்க..
2) மறக்காம  இன்ட்லில ஓட்டுப் போடுங்க..
3) பரிசல்காரன் சிறுகதை போட்டிக்கு இதை அனுப்பியுள்ளேன்
4 ) சிகப்புக் கலரில் உள்ள வரிகள் -- பரிசல்காரன் விதிப்படி அமைந்தது..