புத்தாண்டு..

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
இந்த ஆண்டில் உங்கள் அனைவருக்கும் மன-மகிழ்ச்சி பெருகட்டும்..

கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க.. வருடம் என்று ஒன்று இல்லை என்றால் ? கஷ்டம்தான்.. எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வேண்டும்தான? அதான்.. காலத்தை கணக்கு பண்ணுறதுக்கு 'வருட' முறை வந்திச்சு.


 பூமி சூரியனை சுற்றி வரும் பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளமாக வைத்துக் கொண்டு.. அது, அடுத்த முறை அதே இடத்திற்கு வந்தால், ஒரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு ஆரம்பமாகிறது. இவ்வாறு காலத்தை கணக்கிடுவதால், கால நிலைகளை மனதில் நிறுத்தி, அதற்கேற்றவாறு நாம் வாழ வழிமுறைகளை செய்து வருகிறோம்.  இந்தக் கணக்கு இல்லையென்றால், பருவநிலை எதிர்பாராமல் வந்து செல்லும், மக்களுக்கு கஷ்டத்தை தரும். (இப்ப மட்டும் என்ன வாழுதாம்.. ?)

அந்த வகையில் உலக அளவில் பொதுவான ஆண்டு முறையாக கிருகோரியன் (gregorian)  முறையில் 2010ம்  ஆண்டு முடிந்து, 2011 ம் ஆண்டு வருவதை நாம் அனைவரும் ஆவலோடு வரவேற்று.. உறவினர் மற்றும் நண்பர்களுக்குள்  தத்தம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள், முதாலவது நாளான ஜனவரி ஒன்றில்.

இந்தியாவில் பலவித நாட்குறிப்பு முறை இருப்பதனால், பல புத்தாண்டு நாட்கள்  கொண்டாடப் பட்டு வருகிறது. அவற்றுள் எனக்குத் தெரிந்த சிலவற்றை பட்டியல் இடுகிறேன் உங்கள் பார்வைக்காக..

வேறு பல புத்தாண்டு தினங்கள் (இந்தியாவில்) : 

போக பிகு : இதுதான் அசாமியர்களின் புத்தாண்டோட பேரு. இது ஒரு அரசு விழாவாகும். பாரம்பரிய உடைகளை அணிவர் ஆண்களும் பெண்களும். பெரும்பாலும் ஏப்ரல் மத்தில (13 , 14 15 தேதிகள்) வரும். 'பிகு' முறை நடனங்கள் ஆடியும், 'ஹுசுரிஸ்' எனப்படும் கீதங்களைப் பாடியும் கொண்டாடுவார்கள். சில நாட்கள் வரை இந்த கொண்டாட்டங்கள் தொடரும்.

நபோ வர்ஷோ : இது வங்காள மக்கள் கொண்டாடும் புத்தாண்டு தினமாகும். வீடுகளை புத்தம் புதிய மலர்களால் அலங்கரித்தும், வண்ண அரிசிகளை வைத்து கோலங்கள் இடுவார்கள். இதனை 'அல்பன' என அழைப்பார்கள்.  பெண்கள் சிவப்பு மற்றும் வெள்ளை சேலைகளை அணிவர், ஆண்கள் வேஷ்டி குர்தா அணிவார்கள். பெரும்பாலும் இதுவும் ஏப்ரில் 13 , 14 ,  15 தினங்களுக்குள் வரும். வருடத்தின் முதல் மாதம் பைகாசி (வைகாசி) எனவே, இந்த தினத்தை பைசாகி எனவும் சொல்லுவர்.

பெஸ்து வரஸ் :  இது குஜராத்திய புது வருட தினம் ஆகும். தீபாவளிக்கு அடுத்த அல்லது இரண்டாம் நாள் வரும். புத்தாடை உடுத்தி, 'கோவர்த்தன் பூஜா' என்னும் பாரம்பரிய வழி பாட்டு முறைப்படி , கோவர்த்தன பர்வதத்தினை நினைத்து வழி பட்டு. உற்றார் உறவினர் இல்லங்களுக்குச் சென்று இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள்.  தீபாவளிமுதல் அடுத்து வரும் ஐந்தாறு தினங்கள் வரை கொண்டாட்டம்தான். பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு விடுமுறைதான். வணிக வழக்குகளும் இருக்காதுதான். புதிய காரியம் எதனையும் அதற்குப் பின்னரே ஆரம்பம் செய்வார்கள். தீபாவளியை விட, புத்தாண்டை பட்டாசு, வானவேடிக்கைகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

யுகாதி : யுகத்தின் (வருடம்) ஆதி (ஆரம்பம்) என்கிற அர்த்தத்தில் இந்த நாள் மார்ச் 13 முதல்,  ஏப்ரல் 15 க்குள், அமாவாசையை ஒட்டி வரும். இதனை ஆந்திர மாநில தெலுகு பேசும் மக்கள் கொண்டாடுகின்றனர். வீடுகளை சுத்தம் செய்து, மாவிலை, தென்னை இலை தோரணம் கட்டி, காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை உடுத்தி, இறைவனுக்கு படையலிட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி கொண்டாடுவார்கள். 'யுகாதிப் பச்சடி' எனப்படும் பல்சுவை பச்சடி இன்றைய சிறப்பு உணவு பதார்த்தமாகும்.

விஷு :  இந்த பெயரில் கேரளா மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினத்தில் காலையில் எழுந்தவுடன் கண்ணில் படும் பொருட்கள் மிகவும் நல்லதாக இருக்க வேண்டும் என்பதனாலேயே, அருகில் ஓலைச் சுவடி, தங்க ஆபரணங்கள், வெள்ளைத் துணி, பச்சை அரிசி, மஞ்சள் வெள்ளரி, வெற்றிலை, கொன்ன மலர்கள், பாதியாக வெட்டப்பட்ட பலாப் பழம், புனித கிரந்தங்கள் மற்றும் தேங்காய் ஆகியவற்றினை வெய்த்திருப்பார்கள்  எனக் கேள்வி பட்டேன். காலையில் புனித நீராடி, 'கொடி வஸ்திரம்' அணிந்து பாரம்பரிய ஆட்டம் பாட்டத்துடன், இனிப்பான அன்னமுண்டு கொண்டாடுவார்கள்.

பைசாகி : சீக்கய குருமாரின் அறிவுரைப் படி, ஜாதிகளை ஒழித்து 'கால்ச பந்த்' எனப் பெயரிட்டு நிறுவிய நாளையே, அவர்கள் புத்தாண்டு தினமாக 'பைசாகி' எனப் பெயரிட்டு கொண்டாடுகின்றனர். இது அவர்களின் அறுவடை திருநாளும் ஆகும். ஆண்களும் பெண்களும் ' ஜட்டா ஆயி பைசாகி' (வந்து விட்டாள் பைசாகி ) எனப் ஆடிப் பாடி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

தீபாவளி : ராஜஸ்தானில் இருக்கும் மார்வாடிகள், தீபாவளி தினத்தையே புத்தாண்டு நாளாக கொண்டாடுவார்கள். இந்த தினத்தில் புதிய செயல்கள் ஆரம்பித்தால் அவை வெற்றி கரமாக முடியும் என்ற நம்ம்பிக்கை கொண்டவர்கள். 

குடி பாட்வா : 'பாட்வா' அப்படீன்னா ஒரு அறுவடை பருவம் முடிந்து அடுத்த பருவம் ஆரம்பம் என்பதாகும்.  இதுவும் பெரும்பாலும் 'யுகாதி' யுடன் சேர்ந்து வரும். மராட்டியர்கள் கொண்டாடுவதாகும். பிரம்மா புராணத்தின் படி, இந்த நாளில், அண்டம், பிரம்மாவினால் தோற்றுவிக்கப் பட்டது. ராமன், ராவணனை போரில் வென்று வெற்றிச் சக்கரவத்தியாக ஊர் திரும்பிய நாளாகவும் அவர்கள் கொண்டாடுகிறார்கள். பிரம்மாவின் கொடியானது, மகிழ்ச்சியையும், வெற்றியையும் குறிப்பதானால், எல்லா வீடுகளிலும் அந்தக் கொடியினை ஏற்றி பிரம்மாவை சிறப்பிக்கிறார்கள்.

தமிழ்ப் புத்தாண்டு தினம் : இதப் பத்தி நா சொல்லி உங்களுக்கு தெரியுறதுக்கு ஒண்ணுமே இல்லை. நாமலாம் ரொம்பவே அதிர்ஷ்டம் செஞ்சவங்க.. நமக்குத்தான் வருஷத்துல ரெண்டு தடவை வருமே இந்த நாளு.. ஒண்ணு அரசுக்காக.. மத்தது நமக்காக..

----------  அப்புறம் முக்கியமா.... (நான் பார்த்து, படித்து, ரசித்தவை)
இதல்லாம் தவிர உலக அளவில் பலவிதப் புத்தாண்டு தினம் ஏதேதுன்னு தெரிஞ்சிக்கணும்னா,  கீழ்க்கண்ட சுட்டிகளைப் பார்த்து படித்துக் கொள்ளுங்கள்.

பலவித மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த சுட்டிய சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.

ஆங்... கேக்க மறந்துட்டேன்.. 'நியு இயர் ரெசலுஷன்'  எடுத்தாச்சா ? அத எப்படியாவது காப்பாத்துங்க....  'நாணயம் மாறலாம், ஆனால், நா(வின்)-நயம் மாறக்கூடாது '.... .அப்படீனா ('நியு இயர் ரெசலுஷன்') என்னவா ? படிங்க இந்த வலைமனை மேட்டர..  அப்பவாவது புரியுதான்னு பாக்கலாம். தமாஷான 'நியு இயர் ரெசலுஷன்' வேணும்னா இங்க போயிப் பாருங்க..





டிஸ்கி : 'அப்புறம் முக்கியமா'   -- சுட்டி தரும் பழக்கம், வலைச்சரம் எழுதும்போது வந்தது(நல்லாத்தான் இருக்கு).. இன்னும் என்னை விட்டு போகலை.. அதான்.. அட்ஜஸ்ட் ப்ளீஸ்..
------------------------------------------------

நா ரொம்ப பிசி..


அருமை நண்பர்களே..
இந்த மாதம், எனது வலைப்பூவில், நான் பெரியதாக ஒன்றும், எழுதமுடியவில்லை. சென்ற வாரம் தொடர்ந்து ஏழு நாட்கள் நான்  எழுதினேன் 'வலைச்சரம்' என்ற அறிமுகப் படுத்தும் வலைப்பூவில். ( இது எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தந்தது., நீங்க தான் பாவம், அறுத்தெடுத்துட்டேன்... )

அதன் பின்னர், எனது இல்லத்திற்கு வந்திருக்கும் எனது தாய் தந்தை சகோதர குடும்ப அன்பினர்களோடு இந்த வாரம் நல்லா பொழுது போக்காக ஊர் சுற்றுவதில் செல்கிறது. 
(வலைப்பூவிற்கு ஒரு வார காலம் விடுப்பு.. ஒங்களுக்குலாம் ஜாலி தான ?)


அடுத்த வாரம், அலுவலகப் பணி சம்பந்தமாக ஒரு சம்மேளனத்தில் (திடப் பொருள் இயற்பியல் தேசிய மாநாடு) பங்கேற்பதற்காக வெளியூர் செல்வதால், வலை மனைக்கு இன்னும் ஒரு வார காலம் விடுப்பு விட வேண்டியதாகிறது. (பீ ஹாப்பி, என்ஜாய். என்னால் ஏதும்  தொல்லை இப்போதைக்கு இல்லை.. ) அட.. இன்னும் யாருமே வரலை.. ஹால் காலியாத்தான் இருக்கு. இருந்தாலும் பாருங்க.. எனக்கு பிளைட்டுக்கு நேரமாச்சு (ஹி.. ஹி இன்னும் 29 மணி நேரம்தான் இருக்கு..)

ஆனா போறதுக்கு முன்னால ஒங்களுக்கிட்ட ரெண்டு பாஷலயாவது.. ரெண்டு வார்த்தையாவது சொல்லியே ஆகணும்...
 .............................
 .............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
.............................
............................. 

போயிட்டு வரேன்.. 
See You ...


வலைச்சரத்தில் எனது ஏழாவது நாள்

வெற்றி முரசு கொட்ட, எனது ஏழாம் நாள் ஆட்டம் வலைச்சரத்தில் இன்றைய பணி துவங்கியது. கடந்த ஆறு நாட்களாக நீங்கள் தந்த ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிகுந்த நன்றிகள். இன்று கவிதைகள் பக்கங்களுடன் துவங்கி.. சில கவிஞர்களை அறிமுகம் செய்திருக்கிறேன். அதன் பின்னர் 'வலைமனையில்' எழுதுவதால் சக வலைப் பதிவர்களில் இவர்களுக்கு விளைந்த நன்மைகள் பற்றி அவர்களே சொல்லும் பதிவுகளை மேற்கோள் காட்டி எழுதியுள்ளேன். அதன் பிறகு, கணணி மென்பொருள் ஒன்றின் பலதரப்பட்ட பயன்களை விளக்கத்துடன் சொல்லும் பதிவு பற்றி எழுதியுள்ளேன்.

இந்த இடுகைக்கு சென்று படித்துப் பயன் பெறுங்கள். வழக்கம் போல உங்கள் கருத்துக்களையும் இங்கும், அங்கும் வாரி வழங்கி இந்தப் பதிவினை சிறப்புறச் செய்யுங்கள்.

மீண்டும் நன்றிகள்.

வலைச்சரம் ஆறாம் நாள்


 





 


அன்பு நண்பர்களே.. உங்கள் பேராதரவோடு, வலைச்சர ஆறாம் நாள் நிகழ்ச்சிக்கு உங்களை அழைக்கிறேன்.

பலர் சொல்லுவது "நீங்கள் அறிமுகப் படுத்திவர்களில் பலர் எனக்குப் புதியவர்" என்று.
கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே ஓட்டத்தில் / வகையில், இன்றும் நாளையும் செல்வேனென நம்புகிறேன்.

இன்றைய அறிமுகத்தில், முதல் வகையில் மூன்று விதமான ஆற்றல்களைப் பற்றியும், பிறகு இயற்கை மூலிகை மருத்துவப் பயன்கள் பற்றிய பதிவுகளையும், இறுதியாக சிறப்பு வரிசையில், பின்னூட்டாளர்களுக்கு பிடிக்கும் வகையிலும் அறிமுகம் செய்துள்ளேன். சென்று படித்து உங்கள் கருத்துக்களை இங்கும், அங்கும் சொல்லவும்.

மறக்காமல் ஓட்டும் அளிக்கவும்.  வழக்கமான நன்றிகள்..

வெற்றிகரமான ஐந்தாம் நாள், வலைச்சரத்தில்

இன்றைய தினம், ஸ்ரீ. வைகுண்ட ஏகாதசி.... இதனைப் பற்றி சற்று விரிவாக, வலைபதிவு வல்லவர் (!) அண்ணன், பெ.சோ.வி அவர்கள் இங்கு சொல்லி இருக்கிறார். விரதமிருக்க சிறப்பான நாளாகும். அதாவது வயிற்றை சுத்தமாக வைத்து, ஜீரண படுத்தும் அவையங்களுக்கு ஓய்வு தரும் நாளாகும். ஒய்வு, மூளைக்கு அல்லவே.


 

 நமது எண்ணங்கள், அவற்றினை, செயற்படுத்தும் மூளைக்கு ஓய்வு தரவேண்டியதில்லை. எனவேதான், யோசிக்கும் திறன் கொண்ட மூளைக்கு வேலை தரும் கணக்குகள், கதைகளும் அடங்கிய வலைப் பதிவுகளை , ஐந்தாம் நாள் அறிமுகமாக வலைச்சரத்தில் எழுதியுள்ளேன். இன்றைய தினம் இரவு முழுவது தூங்காமல் 'பரமபதம்' (snake & lader) விளையாடுவது நன்மை தரும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளையின் விளையாட்டு நிகழ்ச்சிகளை விளக்கும் பதிவையும், வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

படித்துவிட்டு, இங்கும், வலைச்சரத்திலும் உங்கள் கருத்துக்களை சொல்லவும்.

நன்றி..

வலைச்சரத்துல எனது நான்காம் நாள் :

ஓரளவுக்கு செட் ஆகிடிச்சு.. வலைச்சரத்துல எப்படி எழுதுறதுன்னு. இன்னிக்கு, ஜாலியா , உங்களுக்கு பிடிச்ச  மேட்டரப் பத்தி பேசப் போறேன்.. மொதல்ல தின் பண்டங்கள் சம்பந்தப் பட்ட வலைப் பதிவுகள முதல்ல அறிமும் செஞ்சிருக்கேன்.

அப்புறம், வாய்விட்டு சிக்கு, கொஞ்சம் 'மொக்கை'ப் பதிவுகள சொல்லி இருக்கேன்.

அப்புறமா, மறுபடியும் சாப்பாடு சம்பந்தமா வருது.. போயி படிச்சிட்டு கருத்துக்களை சொல்லுங்க.. தொடர்ந்து ஒங்க ஆதரவு கண்டிப்பா எனக்குத் தேவை.. ரைட்டா ?
வலைச்சரம்

வலைச்சரத்தில் மூன்றாம் நாள் :


நண்பர்களே.. 'வலைச்சரத்தில்', எனது எழுதும் முறையை ரசித்து பின்னூட்டமிட்டு ஊக்கமளிக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தினம், மூன்றாம் நாள் ஆட்டத்தில், எனக்குப் பிடித்த புதிர்களைப் பகிர்ந்துள்ளேன். தொடர்ந்து, அலைபேசி, தொலைபேசி போன்றவற்றை பற்றி சக பதிவர்கள் எழுதிய பதிவுகளை குறிப்பிட்டுள்ளேன்.

அதன் பின்னர், ஒரு வித்தியாசமானவரை அறிமுகம் செய்துள்ளேன். அவர் பின்னூட்டமிட்டே பிரபலம் ஆனவர். அவர் 'எழுதினாரு'(வேற பிலாகுல), ஆனால் எழுதலை(தன்னோட பிலாகுல)....  புரிஞ்சிடிச்சா.. பிலாகிண்டமிலுக்கு போயி சரிதானா பாத்துட்டு வாங்க..
                                                          --- உங்கள் மாதவன். 

வலைச்சரத்தில் இரண்டாம் நாள் ஆட்டம்.

நண்பர்களே, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில்,
அறிமுகம் செய்யப் படுபவை..
  1. 'வாழ்க்கையில்' நமக்குத் தேவையான சிலவற்றையும்,
  2. புஸ்தகம் படிப்பது / எழுதுவது பற்றியும்
  3. கதை சொல்லுபவர் பற்றியும்

விவரங்களுக்கு வலைச்சரத்திற்கு வாருங்கள்... ஆதரவு தாருங்கள்..  நன்றி !

'வலைச்சரத்தில்', எனது முதல் நாள் பணி -

'வலைச்சரத்தில்' நான். 

வலைச்சர ஆசிரியராக இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு, பொறுப்பேற்று எழுத ஆரம்பித்தேன்.


முதலில், எனது வலைப்பூவை எனக்கே உரிய பாணியில் (அதான் வள.. வள ) அறிமுகம் செய்துள்ளேன்.

பிறகு, நான்படித்த இரண்டு வித்தியாசமான ( மொக்கத்தான், ஆனா மொக்கை இல்லை) பதிவுகளை, அறிமுகம் செய்துள்ளேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை அங்கும், இங்கும் (அட சி & பி தான்) சொல்லவும்.

நன்றி.

எ(ங்)ண்கள் கும்மி

நம்பருலாம் மட்டும் இல்லேன்னா வாழ்க்கையே இல்லை.. எதுவுமே ஒரு 'கணக்குதான்'.
நம்பருலாம், நம்பர்களா சேர்ந்து வந்தாலே தான 'மதிப்புதான்' பாருங்களேன், அதுங்க சேர்ந்து வந்து அடிக்கற 'கும்மி'...

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

----------------------------------------------------

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111



-----------------------------------------------

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888




நல்லா இருக்கு இல்லை ? அட இதெல்லாம் ஒங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?
ஐ யாம் வேரி சாரி.. ஒரு வாரமா நா ரொம்ப பிசி, அதாம் டச்சு விட்டு போகக் கூடாதுன்னு, ஃபிரண்டு அனுப்பிய இ-மெயில மேட்டர இங்க பதிவிட்டேன்.

ஆங் சொல்ல மறந்திட்டேன்.. வர திங்கக் கிழமைலேருந்து (13 டிசெம்பர் முதல் 19 டிசெம்பர் வரை) நான், வலைச்சரத்துல ஆசிரியர் பொறுப்பேற்று, எழுதப் போறேன், வந்து படிச்சிப் பாத்துட்டு ஒங்களோட கருத்துக்களை கண்டிப்பா சொல்லணும் .. சரியா ?

டிவி நிகழ்ச்சிகள் ஒப்பீடல் - இன்றைய, நேற்றைய ( 85 - 90 க்களில் -- DD ) நாட்களில்.

1985 என நினைக்கிறேன்... படித்துகொண்டிருக்கும் வயது பள்ளி நாட்களில் வெயில் விடுமுறையை கழிக்க சென்னைக்கு சென்ற பொது, டிடி யில் முதன் முதலில் தொலைகாட்சி நிகழ்சிககளை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாலை ஐந்தரை மணிக்குத்தான் தொலைகாட்சி நிகழ்சிகள் ஆரம்பமாகும். (90 களில் புதியதாக முளைத்த தனியார் தொலைக்காட்ச்சி கூட மாலை ஆறு மணிமுதல் மட்டுமே ஒ(லி)ளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது).

வார நாட்களில் மாலை 6 முதல் இரவு 9 வரை மட்டு தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். பிறகு தெரியாத பாஷை. .(அன்று தெரியாது. இன்று எழுத, படிக்க, பேச, புரிந்துகொள்ளக் கூட தெரியும்). இடையிடைய ஆங்கில நிகழ்சிகளும் உண்டு. சனிக்கிழமை மாலை ஹிந்தி திரைப்படம்.. ஹிந்தி தெரியாததால் பார்க்க மாட்டேன். ஞாயிறு முழுவதும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள்.. பார்க்கக் கூடிவையாக இருக்கும். இவ்வாறு நான் ரசித்த நிகழ்ச்சிகளுள் சில..


அன்று

வண்ணக்கோலங்கள் - காமெடி நாடகத் தொடர். (எஸ்.வி. சேகர், குட்டிபத்மினி) ஞாயிறு காலை. இதில் வரும் கணக்கு வாத்தியாரின் கணக்குகள் விடையளிக்கமுடியாமல் திணறும் பாத்திரங்கள், நமக்கு சிரிப்பை வரவழைக்கும்.

பிளைட் நம்பர் 176 : மௌலியின் நகைச்சுவை தொடர். பெரியதாக கதை சரியாம ஞாபகம் இலை.. ஆனாலும் அப்போது சிரித்துப் பார்த்த நிகழ்சிகளுள் ஒன்று.

சோவின் வந்தேமாதரம்.. மற்றும் ஒரு சில நாடகத் தொடர்கள்.. நன்றாக இருந்தது.. ஒரு சில காத்தாடி ராமமூர்த்தி, கிரேசி மோகன் நாடகங்களும் நன்றாக இருக்கும்..

செவ்வாய் தோறும் வரும் ஒரு மணிநேரம் (இடைவெளி இல்லாது) வரும் நாடகம் வித்தியாசமாக இருக்கும். மௌலி, பிரசன்னா நாடகங்கள் பார்க்கும்படி இருக்கும். அதுபோல வெள்ளிதோறும் வரும் 'ஒலியும் ஒளியும்' காண்பதற்கு நன்றாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறைதான் என்பதால அந்தந்த நாட்களுக்கு காத்திருந்து ஆர்வத்தோடு பார்ப்போம்.

எப்படா சண்டே வரும்னு வெயிட் பண்ணி மாலையில் தமிழ்ப் படம் (பழைய பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தாலும்) விரும்பி பாப்போம்..

தமிழ்ல, ஆங்கிலத்துல (DD-நேஷனல்) வாரத்துக்க் ஒரு குவிஸ் புரோக்குராமாவது இருக்கும்.. அறிவ வளத்துக்க படிக்கற (!) பசங்களுக்கு ரொம்ப யூஸா இருக்கும்.

மேற்கூறியவை அனைத்தும் DD தமிழ்த் தொலைக்காட்சியில் கண்டது. எந்த ஒரு தொடரும் 13 எபிசோடுகளுக்கு மேலே சென்று நமது கழுத்தை அறுத்ததில்லை..

இன்று
காமெடிங்கற பேருல ரெட்டை அர்த்த வசனங்கள் பார்க்கவே அருவருப்பு வருவதால் பார்ப்பதில்லை. உதாரணம் : மீண்டும் மீண்டும் சிரிப்பு, சூப்பர் 10 .

அசத்தப் போவது யாரு : ஒரு சில சமயத்துல செயற்கையா இருந்தாலும், பெரும்பாலும் இந்த நிகழ்ச்சி பரவாயில்லை...( ரிலேடிவ்லி பெட்டர்).

இப்பலாம் சினிமா, ஒலியும் ஒளியும் பாக்க தனி சேனலே அதுவும் நாலஞ்சு இருக்குறதுனால பாக்க இஷ்டமே வர்றதில்லைய்.. அளவுக்கு மிஞ்சினா எதுவுமே விஷம் தான் .

நாடகம்லாம் இப்ப போடுறதே இல்லை.. எல்லாமே மெகாத்தொடர்தான்.. எப்பப் பாத்தாலும் புரியும்... கதை அவ்ளோ ஸ்லோ.. நம்ம டயத்த வேஸ்டு பண்ணவேணாம்.. கடைசி பார்ட் (அப்படி ஒன்று இருந்தால்) பாத்தாலே பொதும்..

மனசுக்கு இதமா இன்னிசை (க்ளாசிகல் கர்நாடிக் மியூசிக்) ஒரு சில சமயத்துல ஒண்ணு ரெண்டு சானலுல வருது.. அதுலாம் நல்ல இருக்கு. எனக்கு பிடிக்கும்...

மாநில அளவுல வர்ற தனியார் சேனலுல குவிஸ் புரோகிராம் வந்து நா பாத்ததே இல்லை.. தேவையில்லாம 'தங்க வேட்டை', அதாவது பரவாயில்லை.. ரெண்டு மூணு கேள்விய கேப்பாங்க.. இப்பா வருது பாருங்க(சாரி.. சாரி.. பாக்காதீங்க), உங்க தெறமைக்கு சவாலே கெடையாது.. ஜஸ்ட் உங்க 'லக்க' மட்டும் டெஸ்டு பண்ணுவாங்க.. என்னமோ பொட்டி பொட்டியா வெச்சி ஒண்ணு ஒண்ணா, சொல்லச் சொல்ல தொறந்து காமிப்பாங்க.... என்னதாம் மேட்டரோ.. நல்லா காசு சம்பாதிக்குறாங்க போட்டிய நடத்துறவங்க..


விளையாட்டு நிகழ்சிகள் :
அன்று
All the way for Four - கிரிக்கெட் பற்றிய நிகழ்ச்சி.. ஸ்ரீகாந்த் வழங்கியவை. சக கிரிக்கேட்டரை, 'அவன், இவன்'(அவர்களுக்கு தமிழ் தெரியாது என்ற நினைப்போ என்னவோ..?) என அழைத்து கலக்குவது நமக்கு சிரிப்பைத் தூண்டும்.. 1987 ல் உலகக் கோப்பை கிரிக்கெட் பார்த்து கிரிக்கெட்டின் மீது ஒரு ஈடுபாடு வந்தது.
டி.வியில் எந்த பழைய கிரிக்கெட் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் வந்தால் தவறாது பார்த்த சமயம்.. ஒரு சில பழைய ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றதை இந்த நிகழ்ச்சியில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.

Granslam டென்னிஸ் - வருடத்துக்கொரு முறை வரும் கிராண்ட்ஸ்லாம் ஆட்டங்கள் காலிறுதி ஆட்டங்கள் முதல் பார்ப்பதற்கு ஆர்வம்..

இன்று :
எப்ப வேணும்னாலும் ஏதாவது ஒரு சானலுல கிரிக்கெட்.. அலுத்துப் போச்சு.. முக்கியமா எதிலுமே பணம்.. பணம்தான் அப்படீன்னு தெரிஞ்சதுக்கப்புறம் :
----------- "இந்தாட்டத்துக்கு நா வல்லப்பா"...

டென்னிஸ் கூட இப்பலாம் பாக்குறதில்லை.. ஏனோ தெரியல இன்ட்ரெஸ்டு போச்சு..

டிஸ்கி : நா எதையும் புதுசா சொல்லலை, என்னவோ மனசுல பட்டதை பதிவிட்டேன்.

பெற்ற இன்பம், பெருக வையகம்..

இனிதான சனிக்கிழமை....
பல விஷயங்களில் மகிழ்ச்சியாக இருந்தேன் இந்த சனிக் கிழமையில் (டிசம்பர் 4 , 2010 )..

மகிழ்ச்சி 1 :
2009-10 க் காண நிதியாண்டில் கூடுதலாக பிடிக்கப்பட்ட 'வருமான வரி', எனக்கு திரும்பக் கெடைச்சுது இன்றைய தினம். இதுல என்ன பெரிய சந்தோஷம்னு கேக்குறீங்களா..? நம்ம நாட்டுல நல்ல விஷயங்களை முனைப்பாக செய்யுறாங்க. அதப் பாராட்டனும்தான ?

முன்பெல்லாம், வருமான வரித்துறை, 'திரும்பத் தரவேண்டிய' தொகைக்கு காசோலை அனுப்புவார்கள். சாதாரணமாக ஒருவர் தரும் காசோலை, அதில் குறிப்பிடப்பட்ட நாள்முதல், ஆறு மாதங்கள் வரை செல்லுபடியாகும். ஆனால் அரசாங்கம் தரும் 'வருமான வரித் திருப்பம்' (IncomeTax Refund) காசோலை மூன்று மாதங்கள் வரைதான் செல்லுபடியாகும். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் எனக்கு அப்படி ஒரு காசோலை கிடைத்தது, இடப்பட்ட தேதியிலிருந்து ஒன்றரை மாதங்கள் கழித்து. எனக்கு அதை வங்கியில் உடனடியாக தர வேண்டிய நிர்பந்தம்.. இருப்பது மேலும் ஒன்றரை மாதங்கள்தானே. நான் கொடுத்தாலும்.. பணம் கிடைக்கவில்லை.... ஒரு மாதம் மேலும் ஆகிவிட்டதால், நான் வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தேன். அவர்கள், அந்த காசோலையை சரி பார்ப்பதற்கு வருமானவரித் துறைக்கு ஓரிரண்டு நாட்களுக்குள் அனுப்பியதாகவும்.. அங்கிருந்து மேலும் தகவல் வரவில்லையாதாலால் பணம் எனது கணக்கில் வரவில்லை என்றும் சொன்னார்கள். நான் சம்பந்தப் பட்ட ஐ.டி. அதிகாரிகளை(மண்டல தலைமை அலுவலகம்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது இக்கட்டான நிலையை சொன்னேன் (காசோலை காலம் முடிவுறும் நிலை). அவர்களும் அதனை புரிந்துகொண்டு சரியான நேரத்தில் செயல் பட்டு, எனது கணக்கில் பணம் சேர்பதற்கு ஒப்புதல் அளித்தனர். பணமும் வந்தது. ஏதோ ஒரு சில காரணங்களால் இவ்வாறு தாமதம் ஏற்பட்டதாக பின்னர் தெரிந்து கொண்டேன்.

ஐ.டி. துறையில், எனக்குத் தெரிந்தவரை நன்றாகத்தான் பணி செய்கிறார்கள்.. எனது நண்பர் ஒருவருக்கு வெறும் பதினாறு ரூபாய் வருமானவரியில் அதிகம் பிடித்ததால், ரீபண்டு, முறையாக இருபத்தி ஐந்து ரூபாய் தபால் தலை ஒட்டி (ரிஜிஸ்தர் தபால்) வந்து சேர்ந்தது சில வருடங்களுக்கு முன்னர்.

ஆனால் அந்த மாதிரி கால தாமதம் ஆகிவிடுமென இனி கவலை வேண்டாம்.. ஆமாம்.. தற்பொழுது, 'வருமானவரி ரீபண்டு' ஈ.சி.எஸ் (எலெக்ட்ரானிக் கிளியரன்ஸ் சிஸ்டம்) முறைப்படியும் தரப் படுகிறது. வருமான வரி ரிடர்ன் படிவத்தில் மீதிப் பணத்தை ஈ.சி.எஸ் முறைப் படி திரும்பப் பெரும் ஆப்ஷனையும் டிக் செய்து, உங்களது வங்கிக் கணக்கு எண்ணையும் எழுத வேண்டும். என்னைப் போல சாதாரண மனிதனுக்கு நடந்தது போல இனி அனைவருக்கும் நடக்கும் என நம்புகிறேன்.

மகிழ்ச்சி 2 :
இன்ட்லில ஒட்டு போட்டு பழகிகிட்டதால, ஊருல நடக்குற எலெக்ஷன்ல ஒட்டு போட ஆசை வந்துடிச்சு. அதற்காக எனது பெயரை எலெக்டோரல் லிஸ்டில் சேர்ப்பதற்கு, சம்பந்தப் பட்ட அலுவலகம் சென்று, விண்ணப் படிவத்தை சரியாக (!) பூர்த்தி செய்து அளித்துள்ளேன்.. (ஹி.. ஹி.. நானும் 18 + தான்.. ). பாஸ்போர்டு சைசில இரண்டு புகைப்படம்(கள்) கேட்டாங்க.. ஒன்றை அந்த படிவத்தில் கொடுக்கப்பட்ட இடத்தில் ஒட்டித் தரவேண்டும். (ஒக்கே).. இரண்டாவதை அந்தப் படிவத்துடன் இணைத்துத் தரவேண்டும். இந்த ரெண்டாவது போட்டோ எதுக்குன்னு தான் இதுவரை புரியவில்லை. வாக்களர் அடையாள அட்டைக்கு அவர்களே புகைப்படம் எடுத்துத் தரமாட்டார்களா ?

மகிழ்ச்சி 3 :
இன்று 'இந்திய கடற்படை தினம்' ஆகும்.
(4th December, Indian Navy Day)
நாட்டிலுள்ளோர் நன்றாக இருப்பதற்கு, கடல் மூலம் வரும் ஆபத்துக்களை கடற்படை மூலம் எதிர்கொள்ளும் வீரர்களை நினைவு கொள்வோம். இந்திய தினத்தில் இங்கு பொது மக்கள் பார்வைக்காக அப்படை வீரர்கள் வீர சாகசங்கள் செய்து காண்பித்தார்கள். அது பற்றி தனிப் பதிவு எழுதுவதாக நினைத்துள்ளேன்.. முடிந்தால் ஓரிரு நாட்களில் எழுதுகிறேன்.


டிஸ்கி
: இப்பலாம் இங்க எழுதுறதுக்கு 'மேட்டர்' பஞ்சமே இல்லை. இதுமாதிரி உருப்படியான (?) விஷயங்களையும் எழுதப் போறேன்..
-----------------------------------------------------------------------------

கோல்ட் மெமொரீஸ்

ஆபீசு லீவு.... வீட்டுல யாரும் இல்லை.. போர் அடிச்சுது.. அதான் பழைய புத்தக பொட்டிய எடுத்துக்கிட்டு நோண்டினேன்.. கெடைச்சது அந்த 'டீனேஜ்' ஐட்டம். 'கோல்டன்-மேமொரியோட' பாக்க ஆரம்பிச்சேன்....

தங்கமணி வர்றா மாதிரி இன்டிகேஷன். இத்தோட என்னப் பாத்தா திட்டுவாளே! பயந்துக்கிட்டே நா அத வேகமா மத்த புக்ஸுக்கு கீழ வெச்சுடலாம்னு..... ச்சே.. கையோட மாட்டிக் கிட்டோம்......

"என்னங்க.. அதக் கொஞ்சம் என்கிட்டே காமிங்க, நீங்க வேகமா செய்யுறதப் பாத்தா என்னவோ தப்பு மாதிரித் தெரியுது......", சொல்லிக் கிட்டே அத வெடுக்குனு புடிங்கிகிட்டு பாத்தாளே ஒரு பார்வை.... தீ பறந்துச்சி..

"எத்தனைத் தடவ சொல்லியிருக்கேன்.. இத மொதல்ல தூக்கி குப்பைல போடுங்கன்னு, டயத்த வேஸ்டு பண்ணிக்கிட்டு..", சொல்லிக் கொண்டே போனாள் அவள்.

"என்ன அப்படி சொல்லிட்ட, 13 மூணு வருஷத்துக்கு முன்னால இது எனக்கு எவ்ளோ வசதியா இருந்திச்சி தெரியுமா?", கேட்டது நான்தான்.

ஒடனே பதில்-கேள்வி (தங்க்சுதான்) , "அப்பவேணா அப்படி, இதுனால, இப்ப என்ன பிரயோஜனம்?"


"இது இன்னிக்கும் யூஸ் ஆகுறாமாதிரி ஒரு விஷயம் இருக்கு. ஒரு ஊருலேருந்து இன்னொரு ஊருக்கு எவ்ளோ தூரம்னு தெரியணுமா ? 13 வருஷத்துக்கு முன்னால இதுல எழுதினது, இன்னிக்கும் மாறவே இல்லை", சொன்னது நான்தான்.

கேட்டதும், கோவமா எம்மேல அவ கையில இருந்த '1997 'ம் வருஷ ரயிவே டயம் டேபிள் புஸ்தகத்த தூக்கிப் போடுறது தெரியுதா?

"என்னாது, சின்னபுள்ளத் தனமா ? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.. ஆமா......", சத்தமா நாஞ்சொன்னது ஒங்க காதுலயாவது விழுதா ?
------------------------------------------------------------