பழமொழி - (1) [ தமாசு ]

பழமொழி - தமிழ்
ப்ராவர்ப் - ஆங்கிலம்
கஹாவத் - ஹிந்தி    
இது பெரும்பாலும் எல்லா மொழிகளிலுமே இருக்குறதா தெரியுது..
எனக்குத் தெரிந்த தமிழ் - சில பழமொழிகளை  ( சொல்லும் வழக்கு) வைத்து கீழ்வருவன அமைந்துள்ளது.. ஒவ்வொன்றிலும் இரு பழமொழிகள் புதைந்துள்ளது.. முடிந்தால் கண்டுபிடியுங்கள்..
  1. சுத்தமா இருக்குற ஆள், பொய் சொன்னா அவருக்கு பாதிப்பு வருமா ?  வராது.. எப்படி ?
  2. மறக்குறதா.. இல்லை தொடர்ந்து முயற்சி செய்யுறதா ஒரே குழப்பமா இருக்கு இப்படி சொல்லிட்டாங்களே !!
  3. இருக்குற பணத்துல ஏதாவது ஒரு வேலைய செய்ய ட்ரை பண்ணலாம்.. இப்படி சொல்லிப்  புட்டாங்களே..  ரெண்டையும் ஒரே நேரத்துல செய்ய முடியுமா...?
  4. அட இப்படியில்ல சொல்லணும்.. இதைத்தான் எல்லாரும் செய்ய  விரும்புவாங்க.... 'சாப்பிட ரெடி'... 
சரி.. சமீபத்துல நான் ரசிச்ச ஒரு பட ஜோக்கு... இதோ


  
இப்ப மேல கேட்கப்பட்ட கேள்விகளுக்கு.. 
  1. சுத்தம் சோறுபோடும் --  பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
    • நீதி :  பொய் சொல்லு.. ஆனா சுத்தமா சொல்லு.. சோறு கிடைச்சுடும்.. :
  2. கிட்டாதாயின் வெட்டென மற -- முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
    • நீதி : ஹி.. ஹி.. இந்த மாதிரிலாம் எழுதினா பிரபலம் ஆக முடியாது.. ஆனா முயற்சி இருந்தா முடியாதா என்ன ?
  3. கல்யாணம் பண்ணிப்பார் -- வீட்டை கட்டிப் பார்.
    • நீதி : கந்து வட்டி அல்லது பாங்க் லோன் .. ம்ம் பாப்போம்.. 
  4. பந்திக்கு முந்து  --- படைக்குப் பிந்து.. 
    • நீதி : சாமி.. சோறு.. சோறு.. ஐ.. நாந்தான் பர்ஸ்டு! ..  --  என்னது எல்லாரும் கெளம்பிட்டாங்களா(சண்டைக்கு)  .. இதோ நானு பின்னாலேயே வாரேன்.. 
==========================================

24 Comments (கருத்துரைகள்)
:

செல்வா said... [Reply]

என்னமோ சொல்லிருக்காங்க .. ஆனா கொஞ்சம் கொயப்பமா இருக்கு :-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமாளி செல்வா

ஆஹா சக்சஸ்.. சக்சஸ்..

A.R.ராஜகோபாலன் said... [Reply]

வித்தியாசமான பதிவு மாதவன்
அழகு

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

சே நீங்களே வடைய..சே விடைய போட்டுக்கிட்டீங்கன்னா நாங்க என்னதான் பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

/////Madhavan Srinivasagopalan said... [Reply] 2
@கோமாளி செல்வா

ஆஹா சக்சஸ்.. சக்சஸ்..//////

என்னா ஒரு வில்லத்தனம்?

அருண் பிரசாத் said... [Reply]

சீ...சீ...இந்த பழம் புளிக்கும்.... ஹி ஹி ஹி விடை கண்டுபிடிக்க முடியலை.... நல்லவேளை நீங்களே சொல்லிட்டீங்க

வெங்கட் நாகராஜ் said... [Reply]

Find "X"! நல்ல ஜோக்....

பழமொழிகளை விட நீங்கள் அளித்திருக்கும் நீதி நன்றாக இருக்கிறது....

Madhavan Srinivasagopalan said... [Reply]

@A.R.ராஜகோபாலன்

தங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் நன்றி..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி
//சே நீங்களே வடைய..சே விடைய போட்டுக்கிட்டீங்கன்னா நாங்க என்னதான் பண்றது?//

விடை கொடுத்தாலும்.. கொடுக்காவிட்டாலும்.. கும்மி அடிப்பதுதான் நமது மரபு..
மியூசிக் ஸ்டார்ட் ஆகலையா ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி
//என்னா ஒரு வில்லத்தனம்? //

ம்.. எனக்கு வில்லன் கேரக்டர்தான் நல்லா வரும்னு சொன்னா நம்பாம.. என்னையப் போயி ஹீரோ வா நடிக்க கம்பெல் பண்ணுறானுக சில ப்ரோடியூசருங்க.. .

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அருண் பிரசாத்

உங்க நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட் நாகராஜ்

தங்கள் பாராட்டிற்கு.. நன்றி வெங்கட் நாகராஜ்..

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

நல்லவேளை நீங்களே சொல்லிட்டீங்க........

Madhavan Srinivasagopalan said... [Reply]

@இம்சைஅரசன் பாபு..

ஹி.. ஹி.. அந்தளவுக்கு உங்களுக்கு கஷ்டம் தருவேனா என்ன..?

Yaathoramani.blogspot.com said... [Reply]

கண்டுபிடிக்க முடியவில்லை
ஆனால் விடைகள் ரசிக்கும் படியாகத்தான் இருக்குது
வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Ramani

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்..

middleclassmadhavi said... [Reply]

நல்ல விடைகள்!! :-)

Admin said... [Reply]

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.. தாங்க முடியல..

ஸ்ரீராம். said... [Reply]

ஹலோ....கேள்வின்னு கேட்டிருக்கீங்களே பதில் சொல்வோம்னு கீழேயே வராம மேலே உட்கார்ந்து மண்டயக் குடைஞ்சு விடயக் கண்டு பிடிச்சிக் கீழ இறங்கினால் ....விடைகள்....ஏமாத்திப் புட்டீங்களே...(விடை கொடுத்து விட்ட தைரியம்தான்...!)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@middleclassmadhavi

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@சந்ரு

இதுக்கே இப்படியா ?
மத்ததலாம் படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

ஹி.. ஏமாத்தணும்னு ப்ளான் பண்ணி பண்ணலை..
அதுவா அப்படி அமைஞ்சிடிச்சி..

வெங்கட் said... [Reply]

// நீதி : சாமி.. சோறு.. சோறு.. ஐ..
நாந்தான் பர்ஸ்டு! .. -- என்னது
எல்லாரும் கெளம்பிட்டாங்களா ..
நானு பின்னாலேயே வாரேன்.. //

இது ரமேஷ்க்காக எழுதின பழமொழியா
இருக்குமோ..!? # டவுட்டு

RVS said... [Reply]

அடேங்கப்பா... பழமொழி இப்படி கூடவா? அசத்து மாதவா.... அசத்து... ;-))

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...