இலாவணிச் சிந்து


மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும்
வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக்
கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக்
கண்களுக்குள் கோகுலத்தில் போட்டிப் போட்டி.....!


********************************************
மேற்கண்ட பாடல், இலாவணிச் சிந்து வகைப் பாடலாகும். 'பைந்தமிழ்ச் சோலை' குழுமம், முகப்புக்கம் ஆசான்... பாவலர் அவர்களின் பயிற்சியில் பயனால் எழுதினேன், நான்.

ஆசான் எங்களுக்கு அளித்த  பயிற்சியின் பயனை, நீங்களும் பெற அந்தக் குழுமத்தில் சேரலாமே !
இந்தப் பாடல் பற்றிய செய்திகள், அவர் பதிவிலிருந்து.......
*********************
மேற்கண்ட பாடலில், எட்டுச் சீர்களும்,
ஒவ்வொரு சீரிலும் நான்கு எழுத்துகளும் (ஒற்று நீக்கி) உள்ளன.
7,8 ஆம்சீர்கள் இரண்டெழுத்தே இருந்தாலும் ( அந்த எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும் (நீட்டிப் பாட வேண்டும்) .
பொது இலக்கணம் :
மேற்கண்ட பாடலின்படி...
* ஓரடிக்கு நான்கெழுத்துச் சீர்கள் எட்டு வரவேண்டும்
* செம்பவள...என்பது முதல் கேட்டு என்பது வரை ஓரடி.
உம்பரரும். என்பது முதல், போட்டு என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டும்.
* அனைத்து அரையடிகளின் முதற் சீரும் மோனையால் இணைந்து
 * ஏழாம் சீரும், எட்டாம் சீரும் ஒரே மாதிரியான ஈரெழுத்துச் சொல்லை இயைபாகக் கொண்டிருக்கும்
(கேட்டு, கேட்டு, போட்டு, போட்டு)
இந்த இலக்கணப்படி வருவது "இலாவணி " ஆகும்.

  1,3,5ஆம் சீர்களில் மூன்றெழுத்துச் சீர்களும் வரலாம். குறைந்த எழுத்துக்குப் பதில் அந்த இடம் நீண்டிசைக்கும். இந்தச் சலுகை 1,3,5ஆம் சீர்களுக்கு மட்டுமே.

நன்றி : பாவலர் ஐயாவின், முகப்புத்தகப் பதிவு :  

Mannargudi Sri Rajagopalaswamy on 11th of Panguni Utsavam 2018



Courtesy (Sourced from) : vicky vicky, facebook.

தைத்திங்கள் - வானவியற் நிலைப்படி :

இரு விகற்ப நேரிசை வெண்பா :

கதிரவனும் இப்புவியும் காலத்தின் சுற்றில்
எதிர்கொள் வகையுள் இருக்கும் - கதிர்வீசு(ம்)
செஞ்சுடர் தென்திசை சேர்ந்திடுந் தைநாளில்
நெஞ்சார்ந்து வாழ்த்துவன் நின்று !
***********




பொருள் :
கால ஓட்டத்தில் (ஆண்டிற்காண்டு), கதிரவனும், புவியும் ஒன்றுக்கொன்று பல நிலைகளில் இருக்கும் ( Relative position). கதிரவன், பூமியைப் பொறுத்த மட்டில், தென் திசையில் கடைசி கட்டத்தை சென்றடையும் நாள் தான் 'தை' திங்கள் நாள்... மங்களம் பொங்கும், மனம் மகிழும், பொங்கல் திரு நன்னாள்...  இந்நாளில், நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சொல்கிறேன்.


தமிழ்க்கவியைத் தூற்றுவாரின் நிலை

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

சூடித் துதித்தச் சுடரைத் துயருறப்
பாடிப் படைக்கும் பயனிலாப் - பாடகனும்
ஓடி ஒளிவான், ஒழிவான் ஒருநாளில்,
பேடியாகிப் பின்னாவன் பித்து

 *********************

சீர்கள்வாய்ப்பாடு - அசைதளை
சூ/டித்/ - துதித்/தச்/தேமா - நிரைஇயற்சீர் வெண்டளை
துதித்/தச்/ - சுட/ரைத்/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
சுட/ரைத்/ - துய/ருறப்/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
துய/ருறப்/ - பா/டிப்/கருவிளம் - நேர்இயற்சீர் வெண்டளை
பா/டிப்/ - படைக்/கும்/தேமா - நிரைஇயற்சீர் வெண்டளை
படைக்/கும்/ - பய/னிலாப்/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
பய/னிலாப்/ - பா/டக/னும்/கருவிளம் - நேர்இயற்சீர் வெண்டளை
பா/டக/னும்/ - ஓ/டி/கூவிளங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை
ஓ/டி/ - ஒளி/வான்/தேமா - நிரைஇயற்சீர் வெண்டளை
ஒளி/வான்/ - ஒழி/வான்/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
ஒழி/வான்/ - ஒரு/நா/ளில்/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
ஒரு/நா/ளில்/ - பே/டியா/கிப்/புளிமாங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை
பே/டியா/கிப்/ - பின்/னா/வன்/கூவிளங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை
பின்/னா/வன்/ - பித்/து/தேமாங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை


 **********************
சூ டித் துதித் தச் சுட ரைத் துய ருறப்
நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாபுளிமாபுளிமாகருவிளம்
பா டிப் படைக் கும் பய னிலாப் பா டக னும்
நேர் நேர் நிரை நேர் நிரை நிரை நேர் நிரை நேர்
தேமாபுளிமாகருவிளம்கூவிளங்காய்
டி ஒளி வான் ஒழி வான் ஒரு நா ளில்
நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நேர் நேர்
தேமாபுளிமாபுளிமாபுளிமாங்காய்
பே டியா கிப் பின் னா வன் பித் து
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் பு
கூவிளங்காய்தேமாங்காய்காசு

மார்கழித் திங்கள் திருப்பாவை (12-01-2018)

இருவிகற்ப நேரிசை வெண்பா :
நாடி வருவோர் நலம்பேணும் நாயகனைப்
பாடிப் படைத்த பசும்பாவைப்
- பாடல்கள்
முப்பதைஇத் திங்கள் முழுதும் இசைத்திட
எப்போதும் இல்லை இடர்
!
******************************
நா டி வரு வோர் நலம் பே ணும் நா யக னைப்
நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நேர் நேர் நிரை நேர்
தேமாபுளிமாபுளிமாங்காய்கூவிளங்காய்
பா டிப் படைத் பசும் பா வைப் பா டல் கள்
நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாபுளிமாபுளிமாங்காய்தேமாங்காய்
முப் பதை இத் திங் கள் முழு தும் இசைத் திட
நேர் நிரை நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
கூவிளங்காய்தேமாபுளிமாகருவிளம்
எப் போ தும் இல் லை இடர்
நேர் நேர் நேர் நேர் நேர் நிரை
தேமாங்காய்தேமாமலர்


***********************************
நா/டி/ - வரு/வோர்/தேமா - நிரைஇயற்சீர் வெண்டளை
வரு/வோர்/ - நலம்/பே/ணும்/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
நலம்/பே/ணும்/ - நா/யக/னைப்/புளிமாங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை
நா/யக/னைப்/ - பா/டிப்/கூவிளங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை
பா/டிப்/ - படைத்/த/தேமா - நிரைஇயற்சீர் வெண்டளை
படைத்/த/ - பசும்/பா/வைப்/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
பசும்/பா/வைப்/ - பா/டல்/கள்/புளிமாங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை
பா/டல்/கள்/ - முப்/பதை/இத்/தேமாங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை
முப்/பதை/இத்/ - திங்/கள்/கூவிளங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை
திங்/கள்/ - முழு/தும்/தேமா - நிரைஇயற்சீர் வெண்டளை
முழு/தும்/ - இசைத்/திட/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
இசைத்/திட/ - எப்/போ/தும்/கருவிளம் - நேர்இயற்சீர் வெண்டளை
எப்/போ/தும்/ - இல்/லை/தேமாங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை
இல்/லை/ - இடர்/தேமா - நிரைஇயற்சீர் வெண்டளை