Showing posts with label சிவராத்திரி. Show all posts
Showing posts with label சிவராத்திரி. Show all posts

அடித்தகொடுஞ் சிலைத்தழும்பு

"அடையாளம் படவொருவன் அடித்தகொடுஞ் சிலைத்தழும்பும்
தொடையாக ஒருதொண்டன் தொடுத்தெரிந்த கல்லும்போல
கடையானேன் வெகுண்டடித்த கைப்பிரம்பும் உலகமெலாம்
உடையானே பொறுத்ததோ உன்னருமைத் திருமேனி..    "

அடாடா.. எட்டாங்கிளாஸ் தமிழ் - செய்யுள் பகுதியில படித்தது..( ம்ம்ம்.. மனப்பாடப் பகுதி) ...  தமிழாசிரியர் வகுப்புல பாடம் நடத்தச்சே மெட்டு போட்டு பாட்டாவே படிச்சு காமிச்சதால இந்தப் பாட்டும் மெட்டோட எம்மனசில இருக்கு.

இது 'திருவிளையாட புராணத்துல' பிட்டுக்கு(இனிப்பு உணவுவகை) மண் சுமந்த கதையில பாண்டிய மன்னன் சிவனென்று தெரியாமல் பிரம்படி கொடுத்ததும்.. உலகத்து மக்கள் அனைவருக்கும் வலிச்சது கண்டு.. சிவனோட திருவிளையாடல் உணர்ந்து.. மனமுருகி பாடியது இந்தப் பாடல். ......

எனது சிவராத்திரி வழிபாட்டின் வெளிப்பாடு.. இப்பதிவு