Showing posts with label சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். Show all posts
Showing posts with label சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். Show all posts

(இந்திய) ஆசிரியர் தினம் :


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளே அவரின் வேண்டுகோளுக்கிணங்க ஆசிரியர் தினமாக கொண்டாடப் படுகிறது. ஒரு முறை அவரிடம் அவரது நண்பர்களும், மாணவர்களும், அவரது பிறந்தநாளை கொண்டாட அனுமதி அளிக்குமாறு கேட்டனராம். அதற்கு அவர், தனது பிறந்தநாளை, தனக்காக மட்டும் கொண்டாடாமல், அனைத்து ஆசிரியர்களையும் கௌரவிக்கும் வகையில் அதனை,  ஆசிரியர் தினமாக கொண்டாட விழைந்தாராம்.

இந்தியக் குடியரசின் இரண்டாவது 'துணை ஜனாதிபதி' மற்றும் இரண்டாவது 'ஜனாதிபதியாகவும்' (1962–1967) பதவி வகித்து நமது தேசத்திற்கு பெருமை சேர்த்தவர்.

"Dr. Radhakrishnan studied philosophy by chance rather than by choice. Being a financially constrained student at the time, when a cousin, after graduating from the same college, passed on his textbooks in philosophy to Radhakrishnan, it automatically decided his academic course.  Later on he felt deep interest in his subject and wrote many acclaimed works on philosophy, both eastern and western." Courtesy : http ://www .wikipedia .org

வாழ்க்கையில் பலருக்கு தான் விரும்பியது கிடைக்காமல் போகலாம்.. ஆனால் கிடைத்ததை வைத்துக்  கொண்டு நாம் நம்மை எவ்வாறு மேற்கொண்டு செல்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.  அவ்வாறு இருந்து வெற்றி கொடியை நாட்டிய இவரை நமது இளைய தலைமுறை மக்கள் ஒரு உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பிறந்து பெரும்பாலும் ஆந்திரத்தில் வளர்ந்தார். அவர் ஆந்திர பல்கலைக் கழகம் மற்றும், ஹிந்து பனாரஸ் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பொறுப்பு வகித்து கல்விபணி செய்துள்ளார்.

அன்னாருக்கும், கல்வி பயில்விக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நாளில், எனது மனமார்ந்த நன்றிகள். பின்வரும் பெருந்தகைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

எனது பள்ளி நாட்களில் என்னுடைய வகுப்பாசிரியர்களாக (class teacher) இருந்தவர்கள்..
ஆரம்பப் பள்ளி நாட்களில் - ஒன்னாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.. (முறையே ) : 
திருமதி. சரோஜா, திருமதி லிலி, திருமதி. மூகாம்பிகை, திரு நடராஜன், திரு. சுந்தர ராவ் (இவர் பள்ளித் தலைமையாசிரியராகவும் இருந்தவர்) 

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வரை (முறையே)  :
திரு. டாண்டன் , திரு. தியாகராஜன், திரு. வி.ஆர். பாலசுப்பிரமணியன், திரு. பி.ஆர். கணேசன், திரு. கிருஷ்ண மூர்த்தி, திரு. இளங்கோவன் (11th   & 12th) மற்றும் தலைமை ஆசிரியர்  ஆசிரியர் திரு. எஸ். சம்பத், துணை தலைமை ஆசிரியர் திரு. சிவராமன்.  உடற்கல்வி ஆசிரியர் திரு. ராமு, திரு. ராமதாஸ் (1 &  2) மற்றும் தமிழ், ஆங்கில ஆசிரியர்கள்... மற்றும் எனக்கு இயற்பியலில் ஆர்வம் வரக் காரணமாக இருந்த எனது +2 டியூஷன் ஆசிரியர் திரு. உலக நாதன் (அப்போது அவர் கல்லூரி விரிவுரையாளராக இருந்தவர்)

கல்லூரி நாட்களில் (இயற்பியல் துறை):
திரு. ஜி. பலவந்த ராவ்.  , திரு. ஜி. சிதம்பரம், திரு(Dr ). பிலோமிநாதன், திரு.ஆர். ராஜகோபாலன், திரு. எஸ். சுவாமிநாதன்., திரு.எஸ். ரங்கராஜன்., திரு ஜே. ஜேசுதாஸ். திருவாளர்கள் கிருஷ்ண மூர்த்தி  பி மற்றும் எம், திரு(Dr ). கலிய பெருமாள் (HOD ), திரு(Dr ). ஏ தாயுமானவன், திரு(Dr .) பி. நீலமேகம், திரு. எஸ். ஜெயராமன் ..
கணிதத் துறை  : திரு. எஸ். சுவாமிநாதன், திரு. ஆர். உதய குமார்,. ஜே. ஜெயக்குமார்.   மற்றும் சில - ஆங்கிலத் துறை, தமிழ்த் துறை, வேதியல் துறை ஆசிரியர்கள்.. (பெயர்கள் நினைவில் இல்லை)

மேலும் கல்லூரி முதவராக அப்போது இருந்த Dr. மெய்பொருள் (இவர் முதல்வராக இருந்ததாலோ அல்லது தமிழ் துறையை சார்ந்தவராக இருந்ததாலோ, எனக்கு இவர் பாடம் எடுக்காமலிருந்தாலும், இவருக்கு  பாடமெடுத்தவர் எனக்கு பத்தாம் வகுப்பில் ஆங்கில, கணிதம் டியூஷன் எடுத்தவரும், எனது சிறிய-தந்தையாருமான திரு. ஆர். ரங்கராஜன் அவர்கள் ஆவார். இவர் ஒய்வு பெரும்பொது அரசாங்க பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்தவர்.) 

என்னை கவர்ந்த, என்னை ஊக்குவித்த சில ஆசிரியர்களின் பெயர்கள் கீழே கொடுத்துள்ளேன் :

இயற்பியல் துறை திரு. (Dr .) பி. பிலோமிநாதன், மூன்றாவது ஆண்டு இளமறிவியல் வகுப்பில் முதன் முதலில் நுழைந்தவுடன் எங்களிடம் கேட்ட கேள்வி 'மாதவன் யாரு?" ('அலைபாயுதே' ஷூட்டிங், பாடல் பதிவு இதெல்லாம் நடப்பதற்கு பல ஆண்டுகள் முன்னால்..) ஆமாங்க.. என்னைத்தான்.. அவர் தெரிந்து கொள்ள இப்படி கேட்டார். ஏனென்றால், முதலாவது செமஸ்டரில், நான் 95 % எடுத்திருந்தேன். (முதன்மை பாடமான இயற்பியலில் 92 % மற்றும் இனப் பாடம் கணிதத்தில் 98 % ம் சேர்த்து). இதை எனது முதாலாவது செமஸ்டரிலேயே தெரிந்து கொண்டு, ஒன்றரை ஆண்டுகள் கழிந்தாலும் ஞாபகமாக என்னைப் பற்றி முதன் முதலிலேயே கேட்டது, எனக்கும் ஊக்கமாக இருந்தது. அன்றிலிருந்து நான் முதுகலை முடிக்கும் வரை எனக்கு நல்ல துணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்.

எனது குடும்பத்தில், ஆசிரியப் பனி செய்தவர்கள் :
எனது இரண்டு, சிறிய தந்தையர்கள் (Paternal Uncle), எனது இரண்டு அண்ணன்மார்கள் (ஒருவர் முழு நேர விரிவுரையாளர், மற்றவர் அறிவியல் ஆராய்ச்சியாளராகவும் அவர்களின் அலுவலக B .Tech courseல் பல வருடங்களில் ஆசிரியப் பணியிலும் ஈடுபட்டவர்). எனது அக்காவும், மன்னியும் (அண்ணி), சில வருடங்கள் நர்சரி வகுப்பில் ஆசிரியராக பணியாற்றியவர்கள்.