Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

அர்த்தமுள்ள குறியீடு  (சவால் சிறுகதை-2011)  

செந்தமிழ் நாட்டின் தலைநகரின் மத்தியப் பகுதியில் இருக்கும், நூற்றாண்டு கண்ட ஆளுயர்ந்த மாளிகை பல்கலைக் கழக பேச்சரங்கம், 'எள்' போட்டா எண்ணையாயிடும்னு சொல்லுறமாதிரி அரங்கம் ஓவர் லோடாகி இருந்தது.

"காசு கொஞ்சம் கொஞ்சமாத்தான் சேக்க முடியும், சினிமா தியேட்டருல ஒவ்வொரு ஆளா சேர்றது போல, ஆனா சேந்த காச, சினிமா முடிஞ்சு கூட்டம் வேகமா கலையறதுபோல சீக்கிரம் செலவழிச்சுடலாம்", இதற்கு நேர்மாறா இருக்கும் நமது இளம் புயல் விஷ்ணு பேசற நிகழ்ச்சி இருக்கும். சும்மாவா, பத்து வயசுல பத்தாவது படிச்சவனோட அறிவும், காலேஜ் போகறப்ப பாடம் தவிர அதிவேக  சமயோசித  புத்தியும்  கொண்ட அதிசய பிறவியாச்சே !

கம்பியூட்டர் ஹார்ட்வேர் அன்ட் சாஃப்ட்வேர் ரெண்டுலயும் முனைவர் பட்டம் வாங்கி.. நாட்டோட ராணுவம் மற்றும் முக்கிய பாதுகாப்புத்  துறையில பொறுப்புள்ள பதவில இப்ப இருக்கான். பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில விஷ்ணு பேச ஆரம்பிச்சான்,
"நம்ம நாட்டோட நாளைய தூண்கள் நீங்களே. உங்களுக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. பொறுப்போடு உங்க கடமையை செய்ய வாழ்த்துக்கள். இன்றைய கால கட்டத்தில் எதற்கெடுத்தாலும் கணணி, கைபேசி இப்படி எலெக்ட்ரானிக் யுகத்தில் எத்தனையோ பயன்கள். கண்டு பிடித்த ஆராய்ச்சியாளர்களும், அதன் மூலம் தொழில்நுட்பத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் மேம்பாடு பட்டு உயர்த்துபவர்கள் ஒருபுறம். அந்த தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்தி பணம் பதவி.. இன்னும் என்னென்னவோ. முக்கியமா தீவிரவாதத்த தூண்டிவிட்டு கலவரம் பண்ணி மக்களுக்கு தீமை செய்யறவங்கள நீங்க முக்கியமான எதிரியா நெனைக்கணும். நீங்க நல்லவர்களாகவும், நல்லவர்களுக்கு மட்டுமே துணைபோகவும் வேண்டும். அலுவல் பணி காரணமாக என் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். புதிய பட்டதாரிகள் அனைவருக்கும், மறுபடியும் வாழ்த்துக்கள்."
அவனது சிற்றுரை முடியட்டும் எனபதற்கு காத்திருந்ததுபோல அவரது கைபேசி சிணுங்கியது.. எடுத்து பேச ஆரம்பித்ததும், முகம் வேகமாக சுருங்க ஆரம்பித்தது. ஆனாலும் அதை உடனே உணர்ந்த  விஷ்ணு, தனது முகபாவத்தை இயல்புநிலைக்கு கொண்டு வந்துகொண்டே பதில் சொன்னான்.. "ம்ம் பத்து நிமிஷத்துல அங்க வந்துடறேன்"
-----------------------------------
சொல்லியபடி பத்தே பத்து நிமிஷத்துல அவனோட அலுவலகத்தின் முதன்மை வாயினுள் தனது காரை நுழைத்தான். அந்த  கட்டிடத்தின் காம்பவுண்ட்  சுவரை சுற்றியுள்ள எல்லா பகுதியிலும் வழக்கமான  செக்யூரிட்டி இல்லாமல் முகம் தெரியாத புதிய ஆட்கள்  டியூட்டியில் இருப்பது முதலில் அவன் கண்ணில் பட்டது. போர்டிகோ சென்று காரை நிறுத்தவும், உயர் ரக துப்பாக்கி ஏந்திய தடித் தடியான மூன்று ஆட்கள் அவனை நெருங்கவும் சரியாக இருந்தது. அதில் இருவர் உடனே அவனுடைய இரு பக்கங்களிலும் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருக்க, மற்றவன் தனது துப்பாக்கியை மடக்கி, அவனை முழுவதுமாக சோதிக்கத் துவங்கினான்.

கடுமையான சோதனைக்குப் பின், அவனிடம் ஆயுதம் எதுவுமே இல்லை என்பதை உறுதி செய்துமுடித்து மிதனான குரலில் அவனிடன் சொன்னான், "நீ, எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், உள்ள இருக்குற உங்க ஆளுங்க எல்லாரும், நீ உள்பட பிழைக்க முடியும். தப்பித் தவறி எதிர்ப்பு காட்டினாகூட, அப்படி எங்களுக்கு சந்தேகம் வந்தாகூட தயங்க மாட்டோம், தூக்கிடுவோம்", சொல்லிக்கிட்டே விஷ்ணுவோட கண்ணையும், முகத்தையும் உற்றுப் பார்த்து விஷ்ணுவிடம் பயம் இருப்பதை உறுதி படுத்திக் கொண்டான்.

ஐந்து நிமிடத்தில், நால்வரும் மையக் கதவு வழியே உள்ளே செல்ல, லிஃப்ட் அருகே துப்பாக்கி ஏந்தியபடி இருந்த வேறு மூன்று ஆசாமிகளின் பார்வையை ஏந்திக் கொண்டே லிஃப்டினுள் சென்று, இரண்டாவது தளத்தில் முதல் அறையினுள் சென்றார்கள்.

அவர்கள் நோக்கம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு பற்றிய முக்கிய இரகசியங்கள்தான் என்பதை தெள்ளத் தெளிவாக விஷ்ணுவிடம் சுருக்கமாக சொல்லப் பட்டது.  ராணுவ பாதுகாப்பு ரகசியங்கள் அடங்கிய அவனது அலுவலக லேப்டாப், சரியான பாஸ்வேர்டை மட்டுமே விழுங்கி உங்களுக்கு வழிவிடுவேன், இல்லையேல் முகத்தில் காரி துப்புவேன் எனச் சொன்னதால், வேறு வழியின்றி அவன் அழைக்கப் பட்டதும், விஷ்ணுவிற்கு தெரியவந்தது.

விஷ்ணுவின் கண்கள் அவர்களை ஒரு நோட்டம் விட்டன. வந்தர்களில் பாதி பேருக்கு நரைத்த முடி, மற்றவர்களுக்கு கருத்த முடியாக இருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலையை மழித்து பழிவாங்கியது. தலை நரைச்ச ஆளெல்லாம், சொட்டைத் தலையைப் பார்த்து ஆறுதல் பெறுவதும், சொட்டை ஆளெல்லாம், நரைச்ச தலை ஆளை பார்த்து ஆறுதல் பெறுவதும் மனதில் தோன்றியது. மனதினுள் சிரித்தான். கண்ணுக்குக் கீழே கருப்பு முகமூடி, வந்திருந்த அனைவர் முகத்திலும்.

சக அலுவலர்கள் வாயினுள் துணி வைத்து கைகள் கட்டப்பட்டு, துப்பாக்கியை எதிர்கொண்ட வண்ணமிருந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டான், விஷ்ணு. தனக்கு மட்டுமே அந்த பாஸ்வேர்ட் தெரிந்திருப்பது ஒரு விதத்தில் நல்லது என்று நினைத்தவன், அப்போது மற்றவர்களின் உயிர் அந்தரத்தில் ஊசல் ஆடுவதை நன்கு கணித்தான்.

விஷ்ணு அவர்களின் தலைமை ஆளிடம் கேட்டான். "இந்த லேப்டாப்பில் இருக்குற தகவல்தான உங்களுக்கு முக்கியம் அந்தப் பாஸ்வேர்டு தந்தா இவங்கள விட்டுடுவீங்களா?" என்றான்.

"அதெப்படி போதும். நீ பக்கத்துலேயே இருந்து எல்லா முக்கியமான ஃபைல்களையும்  காமிக்கணும். எங்க பக்கமும் எக்ஸ்பெர்ட் இருக்காங்க. அவங்க தகவல்களோட தன்மைய உறுதி செஞ்சாத்தான் உங்க எல்லாருக்கும் விடுதலை. அதுவும் நாங்க இந்த லேப்டாப்ப  எடுத்திட்டு, இதோ இங்க இருக்காரே எஸ்.பி. கோகுல்  அவரோட நாங்க எல்லாரும் எங்க இடத்துக்கு ஸேஃபா போன பின்னாடிதான்", சொன்னான் ஹெட் முகமூடி

சொந்த பந்தமில்லாத எஸ்.பி. கோகுல், அந்த அலுவகத்திற்கு அமர்த்தப்பட்ட பிரத்யேக போஸில் ஆபீசர். செக்யூரிட்டி வியூகங்கள அமைக்கிறது அவரோட தலையாய கடமை.(!) அவரை மடக்கிப் போட்டுத்தான் இந்த கும்பல் தன்னோட அதிரடி திட்டத்தை  இப்போது நடத்துவதும் சுருக்கமாக சொல்லப் பட்டது.

எஸ்.பி.கோகுல்  தொடர்ந்தார், "ஆமா, நானும் எப்ப பெரிய பணக்காரனாகி வாழ்க்கையில செட்டில் ஆகுறது. இந்த குருப்புக்கு உதவி செஞ்சு, இந்த டீல்ல லம்ப்பா ஒரு தொகைய அடிச்சிட்டு, வசதியா வேற நாட்டுல வேற பேருல வெள்ளைக்கார தோல் பொண்ணோட செட்டில் ஆயிடப் போறேன். அதுக்கு இந்த கும்பல் ஏற்கனவே ஏற்பாடு செஞ்சிட்டாங்க. சரி, சரி வேலைய ஆரம்பிங்க". என்று தனது பங்கிற்கு வாலாட்டினார்.

வேறவழி இல்லை என்பதை உணர்ந்த விஷ்ணு, லேப்டாப்பை உயிர்பித்தான். அவன் செய்வதை கவனமாக ஒரு குள்ள முகமூடி கூர்ந்து கவனிக்கலானான்.
  • username : vishnu
  • password : *********
எஸ்.பி கோகுல், விஷ்ணு தந்த பாஸ்வேர்ட் அடங்கிய துண்டுச் சீட்டை  மேசைமீது வைத்து விட்டு, அதைப் பார்த்து யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை எழுதிக் கொண்டு, மற்ற  தகவல்களை தனது கையில் இருந்த குறிப்பேடில் எழுத ஆரம்பித்தார். விஷ்ணு அளித்த பாஸ்வேர்ட் மேட்ச் செய்தபின், தான் தேடிக்கொண்டிருந்த மணாளனைக் கண்ட மங்கைபோல கதவை திறந்தது லேப்டாப். லேப்டாப்பினுள் அதிகமாக பைல்கள் இருக்கவில்லை. தேவையான முக்கியமான தகவல்கள் மட்டும், சரியான முறையில் மற்றவர்களுக்கு புரியும்படி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பெடுத்துக் கொண்டிருந்த குள்ளனுக்கும் எளிதாகப் புரிந்தது. மேம்போக்காக பைல்களின் தன்மையை உறுதிபடுத்திக் கொண்டான்.

அனைத்தும் முடிந்ததும். குண்டன், லேப்டாப்பை ஷட்டவுன் செய்து மீண்டும் அதனை உயிர்பித்தான். எஸ்.பி தந்த குறிப்பேடில் இருந்தபடி யூசர் நேமும், பாஸ்வேர்டையும் டைப் செய்து, மீண்டும் எல்லா ஃபைல்களையும் மேம்போக்காக பார்வையிட்டன. பிறகு தலைமை முகமூடிக்கு பச்சைக் கொடி காட்டுவதுபோல தம்ஸ்-அப்பினான்.

அரை மணி நேரத்தில் அனைத்தையும் முடித்துக் கொண்டு அந்த முகமூடிகள், தங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொண்டு விஷ்ணுவின் வாயிலும் துணியை வைத்து மூடி, கைகளை பின்னால் கட்டிபோட்டு, அலுவலக எல்லா அறைகளையும் மெயின் கேட்டையும் பூட்டிவிட்டு, வந்தவழி திரும்பி சென்றார்கள். இதுவரை எஸ்.பி.யாக இருந்த கோகுலும், 'பி'யை உதறிவிட்டு அவர்களுடன் 'எஸ்' ஆனார்.

பல்கலைக் கழகத்தை விட்டு விஷ்ணு வரும் வழியில் ஓரளவிற்கு ஊகித்து, தனது கைபேசி மூலம், ஒன்றரை மணி நேரம் கழித்து தன்னிடமிருந்து தகவல் வராத நிலையில் தனது அலுவலகத்திற்கு தகுந்த பாதுகாப்போடு வருமாறு இன்ஸ்பெக்டர் கண்ணபிரானிடம் தகவல் தந்திருந்தான். அதன்படி தேவையான அளவிற்கு தகுந்த ஆயுதமேந்திய   காவலர்களுடன் வந்தவர்கள் அனைத்து அலுவலர்களின் கட்டுக்களை அவிழ்த்து விட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய விஷயம் பற்றி பேசலானார்கள்.

மற்றவர்கள் பட படக்க.. விஷ்ணு அமைதியாக, எந்த தப்பும்  நடக்காதமாதிரி இயல்பாக  இருந்தான். அலுவலகத்தில் இருந்த மற்றவர்களுக்கு ஆச்சர்யம். இந்தளவுக்கு நடந்தும் விஷ்ணுவிடம் பதட்டமோ படபடப்போ இல்லையென்று தான்.

விஷ்ணுவின் உயரதிகாரி விஷ்ணுவிடம் "விஷ்ணு, நீங்க கஷ்டப் பட்டு பாதுகாத்து வந்த முக்கியமான ராணுவ, பாதுகாப்பு ரகசியங்கள் எல்லாம் இருக்குற உங்க லேப்டாப்ப எடுத்துட்டுப் போயிட்டங்களே. என்னதான் உயிர்ச் சேதம் இப்ப இல்லேன்னா கூட, அந்த ரகசியம்லாம் தெரிஞ்சிட்டு நூத்துக்  கணக்கான உயிர்கள கொன்னுடுவாங்களே  உங்க முயற்சிலாம் வீணாப் போயிட்டுதே", என்று ஆதங்கப் பட்டார்.

அவரிடம் சென்று ஒரு துண்டுச் சீட்டை கையில் அழுத்தியபடி, "எனக்கு கொஞ்ச நேரம் டயம் கொடுங்க., குடும்பத்தோட ஊருக்கு போகவேண்டிய நிலை. வீட்டுல எல்லாரும் தயாரா இருக்காங்க. என்னோட நெலமைய  ஃபோன் மூலம் சொல்லிட்டு வந்துடறேன்", எனச் சொல்லியபடியே, பதிலுக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியேறினான், விஷ்ணு.

துண்டுச் சீட்டில் படித்துப் பார்த்த அவனது உயரதிகாரி மகிழ்ச்சியடைந்தாலும், மிஞ்சி நிற்கும் ஆச்சர்யத்தையே வெளிப்படுத்த முடிந்தது.
------------
சொன்னபடி மீண்டு(ம்) வந்த விஷ்ணு, ஆரம்பித்தான்", யாரும் கவலைப் பட வேண்டாம். யாராவது திருட்டுத்தனம் செய்வாங்கன்னு ஏற்கனவே யோசிச்சு ஒரு வழி செஞ்சிட்டேன் போன மாசமே", என்றான் 

"என்னது? விளக்கமா சொல்லுங்க" என்றார் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான்.

விஷ்ணு பேச ஆரம்பித்தான், "என்னோட லேப்டாப்ல மூணு வித லாகின் இருக்கும். ஒன்னு ஒரிஜினல் டேட்டா இருக்கும். இந்த லாகின் நேம இப்ப சொல்ல விரும்பல. ரெண்டாவது லாகின் 'vishnu',  மூணாவது 'vishnu '. ரெண்டாவது மற்றும் மூணாவது லாகின் நேம் டைப் பண்ணச்சே ஒரேமாதிரிதான் இருக்கும். ஆனா, ரெண்டாவதுக்கு இன்னும் சில லெட்டர்ஸ் இருக்கு. மொதோ ஆறு எழுத்துக்கு மேல டிஸ்ப்ளே ஆகாது. செட்டிங்க்ஸ் அப்படி. மத்த ரெண்டு லாகினுக்கும் பாஸ்வேர்ட் ஒண்ணுதான். அவங்க இருந்தப்ப, நா ரெண்டாவது லாகின்ல என்ட்டர் பண்ணேன். ரெண்டாவது மூணாவது அக்கவுண்ட்ல இருக்குற டேட்டா எல்லாம் போலி. 'சிஸ்டமேடிகலி கரப்டட்' டேட்டாதான். ப்ளான் பண்ணி டேட்டால  தேவையில்லாத அல்லது குழப்பம் தர்ற தகவல, திணிச்சிட்டேன். மேம்போக்கா படிச்சா அத கண்டுபிடிக்க முடியாது. டேட்டாவ கரப்ட் பண்றதுல பல லெவல் இருக்கு. மூணாவது லாகின்ல இருக்குறது ஹைலி கரப்டட் டேட்டா", எனச் சொல்லி சற்று மூச்சு வாங்கினான். தொண்டைக்கு இதமாக இளஞ்சூடு தண்ணீரை தாரை வார்த்தான்.

"எதுக்கு மூணு லாகின் ? ரெண்டாவது லாகின்லையே ஹை லெவல் டேட்டா கரப்ஷன் வெச்சிருக்கலாமே?" எனக் கேட்டார் கண்ணபிரான்.

அங்கதான் விஷயமே இருக்கு. என்னோட ஒரிஜினல் டேட்டா என்னோட லேப்டாப்ல மட்டுமே இருக்கு. நா ரெண்டாது லாகின்ல என்ட்டர் பண்ணி, ஸ்க்ரீன்ல  ஐகான் எதுவும் இல்லாத ஒரு பர்டிகுலர் ஸ்பாட்ல மூணு தடவ க்ளிக் பண்ணா ஒரிஜினல் டேட்டாவ இங்க இருக்கற மெயின் கம்பியூட்டருக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு முதலாவது லாகின் அக்கவுன்ட்ட டெலீட் பண்ணிடும். அப்புறம் லேப்டாப்ப இந்த கட்டிடத்த விட்டு வெளிய எடுத்திட்டு போயி, எப்ப மூணாவது அக்கவுண்ட்ல லாகின்  பண்ணாலும் ரெண்டாவது லாகினையும் அக்கவுண்டையும் டெலீட் பண்ணிட்டு, லாப்டாப் கீழ் பக்கத்துல நா வெச்சிருக்கற அல்ட்ரா-ஸ்லீக் கைபேசியை ஆக்டிவேட் பண்ணிடும். உடனே அந்த சிம் என்னோட மொபைலுக்கு கால் பண்ணும். லேப்டாப்ல இருக்குற மொபைல் சைலென்ட் மோட்ல இருக்கு, அதனால யாருக்கும் நடப்பது என்னனு தெரியாது. இப்பலாம் எல்லா இடத்துலையும் சிக்னல் டவர் இருக்குறதுனால எனக்கு தொடர்ந்து அந்த லேப்டாப் இருக்குற இடம், ஜி.ஆர்.பி.எஸ் மூலமா தெரியவரும்", என அங்கிருந்த மானிட்டரை காண்பித்தான். விஷ்ணு பேசி முடித்து விட்டு, மேடை மீதிருந்த கோகுல் விட்டுச் சென்ற துண்டுச் சீட்டைப் எடுத்து அதனை தனது அருகில் வைத்தான். அதில்,
Mr. கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு கவனம் 
- விஷ்ணு
என்றிருந்தது. 

அதனை கவனித்த அவனது அதிகாரி, விஷ்ணு தனக்குத் தந்த துண்டுச் சீட்டையும்  அதனருகே வைத்தார்.  அதனை கவனித்த இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், விஷ்ணுவின் அருகில் சென்று பார்த்தார். இந்த சீட்டில்
Sir,
எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்
கவலை வேண்டாம்.
-- விஷ்ணு
என்று இருந்தது.

படம் உதவி :  http://www.parisalkaaran.com/2011/09/2011.
ஏதோ கண்ணபிரான் சொல்ல ஆரம்பிக்க, மேசைமீதிருந்த விஷ்ணுவின் கைபேசியில் 'Vishnu  Informer Calling', என வருவதும் சரியாக இருந்தது. 'லேப்டாப்ல இருக்கற என்னோட வேற மொபைல் தான் அந்த இன்ஃபார்மர்", எனச் சொல்லிக்கொண்டே அழைப்பினை ஏற்றுக் கொள்ளாமல் சிவப்பு பட்டனை அழுத்தினான். நடந்து சென்று வேறு ஒரு எலெக்ட்ரானிக் உபகரணத்தை உயிர்பித்தான். பெரிய மானிட்டரில், லேப்டாப் தற்போது இருக்கும் இடத்தை ஜி.பி.ஆர்.எஸ் மூலம் உடனுக்குடன் தகவல் தர ஆரம்பித்தது.

--- முற்றும் 

பின்குறிப்பு : 'குறியீடு' என்பது பாஸ்வேர்டை மட்டும்  குறிக்க வேண்டுமென்பதல்ல. யூசர் நேமை குறிக்கும் சொல்லாகவும் இருக்கலாமல்லவா?
நாங்களும் மாத்தி யோசிப்போமில்ல !

நன்றி : கும்மிக் குழுவின் 'Hunt for Hint' கடைசி லெவல்.

டிஸ்கி : 
சவால் சிறுகதைப் போட்டி - 2011 க்காக எழுதப்பட்டது. படம், வர்ண வரிகள் இவற்றோடு கதையை தொடர்பு படுத்தவேண்டும் என்பது சவால். நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் 90 % மதிப்பெண்களும், மீதமுள்ள 10  %  யுடான்ஸ் வாக்குகளாலும் தேர்ந்தெடுக்கப்போகிறார்களாம். விதிமுறைகளைப் படிக்க இங்கே செல்க.

கோல்ட் மெமொரீஸ்

ஆபீசு லீவு.... வீட்டுல யாரும் இல்லை.. போர் அடிச்சுது.. அதான் பழைய புத்தக பொட்டிய எடுத்துக்கிட்டு நோண்டினேன்.. கெடைச்சது அந்த 'டீனேஜ்' ஐட்டம். 'கோல்டன்-மேமொரியோட' பாக்க ஆரம்பிச்சேன்....

தங்கமணி வர்றா மாதிரி இன்டிகேஷன். இத்தோட என்னப் பாத்தா திட்டுவாளே! பயந்துக்கிட்டே நா அத வேகமா மத்த புக்ஸுக்கு கீழ வெச்சுடலாம்னு..... ச்சே.. கையோட மாட்டிக் கிட்டோம்......

"என்னங்க.. அதக் கொஞ்சம் என்கிட்டே காமிங்க, நீங்க வேகமா செய்யுறதப் பாத்தா என்னவோ தப்பு மாதிரித் தெரியுது......", சொல்லிக் கிட்டே அத வெடுக்குனு புடிங்கிகிட்டு பாத்தாளே ஒரு பார்வை.... தீ பறந்துச்சி..

"எத்தனைத் தடவ சொல்லியிருக்கேன்.. இத மொதல்ல தூக்கி குப்பைல போடுங்கன்னு, டயத்த வேஸ்டு பண்ணிக்கிட்டு..", சொல்லிக் கொண்டே போனாள் அவள்.

"என்ன அப்படி சொல்லிட்ட, 13 மூணு வருஷத்துக்கு முன்னால இது எனக்கு எவ்ளோ வசதியா இருந்திச்சி தெரியுமா?", கேட்டது நான்தான்.

ஒடனே பதில்-கேள்வி (தங்க்சுதான்) , "அப்பவேணா அப்படி, இதுனால, இப்ப என்ன பிரயோஜனம்?"


"இது இன்னிக்கும் யூஸ் ஆகுறாமாதிரி ஒரு விஷயம் இருக்கு. ஒரு ஊருலேருந்து இன்னொரு ஊருக்கு எவ்ளோ தூரம்னு தெரியணுமா ? 13 வருஷத்துக்கு முன்னால இதுல எழுதினது, இன்னிக்கும் மாறவே இல்லை", சொன்னது நான்தான்.

கேட்டதும், கோவமா எம்மேல அவ கையில இருந்த '1997 'ம் வருஷ ரயிவே டயம் டேபிள் புஸ்தகத்த தூக்கிப் போடுறது தெரியுதா?

"என்னாது, சின்னபுள்ளத் தனமா ? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.. ஆமா......", சத்தமா நாஞ்சொன்னது ஒங்க காதுலயாவது விழுதா ?
------------------------------------------------------------

ஏன் ? எதற்கு ?

சின்ன வயசுல அம்புலிமாமா படிச்சிருப்பீங்க..  அதே ஸ்டைலுல ஒரு கதை.. என்னோட சொந்த பாணில..


தன்  முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் தனது நீண்ட வாளை எடுத்துக் கொண்டு, மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்ட வேதாளத்தை தன் தோள் மீது போட்டுக் கொண்டு கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தான். போகும் வழியில் அவனிடமிருந்து விடுபட, அவனது மௌனத்தை கலைக்க வேண்டும். இதனை மனதில் நினைத்த வேதாளம், வழக்கம்போல ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது...

சிம்மபுரி என்ற நாட்டை சுயமித்தரன் என்ற அரசன் சீரோடும் சிறப்போடும் ஆண்டு வந்தான்... அவனது  ஆட்சியில் மக்களும் நேர்மையாக உழைத்து நாட்டிக்கு பெருமை சேர்த்தனர்...  மக்கள் மீது அரசன் வைத்திருந்த அன்பும், பண்பும் அனைத்து மக்களையும் கவந்திருந்தது. அரண்மனை இரவுக் காவலாளி முத்து அந்த அரச குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான்.

அந்நாட்டின் இளவரசன் வில்வித்தையில் நன்கு கற்று தேர்ச்சி பெற்றிருந்தான். ஒருமுறை, இளவரசன் காட்டிற்கு தோளில் அம்பறாத்துணி நிரம்பிய அம்புகளை ஏந்தி வில்லுடான் (will )  -வேட்டையாட கிளம்பும் பொது, முத்து அவனிடம் சென்று.. முந்தைய இரவு தான் தூங்கும் பொது, கனவில், இளவரசனுக்கு, காட்டில் பேரபாயம் காத்திருப்பதாகவும், வேட்டைக்கு போகவேண்டாமெனவும் சொன்னான். இளவரசனோ, தனக்கு தனது வில் வித்தையில் மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும், தனக்கு காட்டில் தீங்கு நேராது எனவும் சொன்னான்.

அதற்கு முத்து, "அந்த அபாயம் விலங்கினால் அல்ல", இளவரசரே என்றான். 'விலங்கினால் அல்ல' என்பது தனக்கு 'விளங்கும்' படி விளக்கிச் சொல்லுமாறு  கேட்டான்.  அதற்கு முத்து, காட்டினுள் இளவரசன் செல்லும்போது அதி பயங்கர மின்னல் இடியுடன் மழை போயிந்ததகவும்.. இளவரசன் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒதுங்கவும், சிறிது நேரத்தில் அந்த கட்டிடம் இடிந்து இளவரசன் மேல விழுந்து அவனது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியதை, தான் கண்டதாக சொன்னான்.

இதை கேட்டதும், இளவரசன் இடி போலச் சிரித்து.. "மழை வரும் முகாந்திரம் எதுவுமே இல்லை.. நீ சொல்வது வியப்பாக இருக்கிறது, எனது நேரத்தை வீணடிக்காதே.. நான் வில் வேட்டைக்கு செல்கிறேன்", எனக் கூறி போக முற்பட்டான். அதனை கேட்டுக் கொண்டிருந்த அரசனோ, இளவரசனை தடுத்து, அன்றையதினம் வேட்டைக்கு போகவேண்டாமெனவும் கட்டளையிட்டான்... 'அரச கட்டளை' மீற முடியுமோ, இளவரசனும் தனது வேட்டை பயணத்தை நிறுத்திக் கொண்டான். 

முத்து சொன்னதுபோலவே சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் காட்டில் கனமழை பொழிந்து, ஒரு பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாக மறுநாள் தெரிய வந்தது. அதனை கேட்ட இளவரசன், தனது தந்தையான அரசரிடம், தனது உயிரைக் காத்த முத்துவிற்கு, பரிசளிக்கும்படி வேண்டினான். தந்தையும் முத்துவிற்கு பரிசளித்தது மட்டுமில்லாது, அவனை பணி நீக்கமும் செய்தான். 

'கதையை நன்கு கேட்டாயா விக்கிரமாதித்தனே ? தனது மகனின், நாட்டின் இளவரசனின் உயிரினை காத்த முத்துவை, பணி நீக்கம் செய்த அரசனின் செயல் சரிதானா ? சரியானால் என்ன காரணம்? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் நீ சொல்லவில்லையானால், உன் தலை சுக்கு நூறாகட்டும்', என்றது வேதாளம்.

வழக்கம் போல், விக்கிரமாதித்தன் சரியான பதிலை சொல்லவே, அவனது மௌனம் கலைந்த காரணத்தினால், வேதாளம் மீண்டும் முருங்கை மரமேறியது.

விக்கிரமாதித்தன் சொன்ன பதில் என்ன ? பின்னூட்டமாக சொல்லவும்.  எல்லோரும் முயற்சி செய்ய வசதியாக பின்னூட்டம் தற்போது வெளியிடமாட்டேன்....



"அம்மா அருள் 'காமி'-நீ" (சவால் சிறுகதை)


ஒரு ஊருல ஒரு கணவன், மனைவி இருந்தாங்களாம்.. நெறையா பொன், பொருள், வீடுவாசல், நெலம், இருந்தாலும் அவங்களுக்கு ஒரே ஒரு தீராத கொறை இருந்திச்சாம். அதான்.. கல்யாணமாகி ரொம்ப வருஷமாகியும் கொழந்தையே இல்லையாம். அவங்க, கோவிலுக்கு போயி அம்மன்கிட்ட, 'அம்மா, எங்களுக்கு அருள் காமி நீ' ன்னு மனம் உருகி வேண்டிகிட்டாங்க. தங்களுக்கு கொழந்தை பொறந்துச்சின்னா அந்த ஊரு கோவில் அம்மனுக்கு ஒரு வைர மூக்குத்தி, வைரத்தோடு எல்லாம் வாங்கி அணிவிக்கறதாகவும் வேண்டிகிட்டாங்கலாம் .....

அந்தநாளுலேருந்து ஒரு வருஷம் முடியறதுக்குள்ள, அவங்களுக்கு ஓரு அழகான பெண் குழந்தை பொறந்துச்சாம். அம்மனோட அருளப் பாத்து சந்தோஷமடைஞ்சு, 'காமினி' ன்னு அந்த குழந்தைக்கு பேரு வெச்சாங்க. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய்.. 'காமினி' ஒரு நல்லா புத்திசாலிப் பெண்ணாகவும், அழகு மற்றும் அறிவுடன் வளர்ந்தாள்.

(விதிகளின் படி ரிவைண்டு /ப்ளாஷ் பேக் / கொசுவத்தி இதெல்லாம் இருக்கக் கூடாதாம்.. ஆனாலும் 'பாஸ்ட் பார்வாடு' பண்ணலான்னு நெனைக்கிறேன், அதனால..)

------ பல வருடங்களுக்குப் பிறகு.......
(எத்தனை வருஷம்னு சொன்னா, நம்ம ஹீரோயின் 'காமினி'யோட வயச கண்டுபிடிச்சிடுவாங்களே..!)


"அம்மா நா டியூடிக்கு போயிட்டு வரேன்..", காமினி சொன்னாள். "பத்திரமா போயிட்டு வா", அது அம்மா. தனது 'மாருதி ஸ்விஃப்டு ' ஸ்டார்ட் செய்து, நேரே, தான் வேலை செய்யும் மருத்துவமனையை நோக்கி செலுத்தினாள்  Dr. காமினி.  என்னதான் சொத்து சுகம் இருந்தாலும், தனது மகள், மக்களுக்கு சேவை (சர்வீஸ்) செய்வதற்காகவே மருத்துவமனையில் மருத்துவப் பணி செய்யும் குணத்தினை கண்டு பெருமை கொண்டாள் அவள் அம்மா. அமாங்க.. 'காமினி' ரொம்பவே நல்ல உள்ளம் கொண்டவள்.
(வடிவேலு பாணில சொல்லனும்னா, 'அவ ரொம்பவே நல்லவ'.)

அன்றையதினம் ஒரு முக்கியமான அறுவை சிகிச்சை இருந்தது. Dr. காமினி அன்று அறுவை சிகிச்சை செய்யும் தலைமை மருத்துவருக்கு அடுத்தப் பொறுப்பில் இருந்தாள். இது 'காமினி' கலந்து கொள்ளும் இரண்டாவது அறுவை சிகிச்சையாதலால், மேலும் தான் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து அவள் கவனமாகவும், ஆர்வமாகவும் இருந்தாள்.

(கதை ரொம்ப ஸ்லோவா போகுதா.. அதான் பாஸ்டு பார்வர்டு போட்டேனே.. அது போதாதா.. சரி.. ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வருவோம்.)

அறுவை சிகிச்சை நல்லா விதமாக முடிந்தது.. எனினும், தான் இன்னும் சற்று கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பதால்.. டாக்கரிடம், "நான் இன்னும் கொஞ்ச நேரம் பேஷண்ட அப்சர்வ் செய்லாம்னு நெனைக்கிறேன்.. அதற்கு உங்க பெர்மிஷன் வேணும்." அனுமதி அளிக்கப்பட்டது. நர்சுகள் முதலில் வெளியேற.. பின்னர் சிறிது நேரம் வரை, தலைமை டாக்டர் கூட ஆபரேஷன் தியேட்டரிலேயே இருந்துவிட்டுச் சென்றார்அவர் வெளியே  செல்லும் பொது, ஆபரேஷன் அறைக் கதவு மூடப்பட்டு, 'ப்ளக்' என்ற சப்தம் வந்தவுடன், அவள் அந்த தவறை உணர்ந்தாள். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.


அந்த சூழ்நினையில், அவளிடத்தில் யாராக இருந்தாலும் அதை செய்வது தான் சரியானதாகும். டாக்டர் கதவினை கவனமின்றி வெளிப்புறமாக தாழிட்டு விட்டார்.... ஏசி சத்தத்தில், தான் கூப்பிடுவது யாருக்கும் கேட்காது.. அந்த அறையிலோ அலைபேசி / இன்டர்காம் அனுமதி இல்லை.. .. ஒருவேளை 'பேஷண்டுக்கு' ஏதாவது அவசர மருத்துவத் தேவைன்னா.. அப்போ கதவ திறக்க முயற்சி செய்வது தப்பா போயிடுமோ.. அதனாலத்தான் 'காமினி' அப்படி செய்தாள். நாலு பெருக்கு வெயிட் பண்ண வேண்டியதில்லை, ஒருத்தருக்கு கஷ்டம் வரும்போல இருந்தா கூட இந்த மாதிரி செய்வது தப்பில்ல..(என்ன சொல்லுறீங்க, சரிதானே ?).

என்னதான் சரியான செயல் செய்தாலும்.. சற்று படபடப்பு ஏற்பட்டது அவளுக்கு. கொஞ்சம் டென்ஷன் வந்ததால், களைப்பாகக் காணப் பட்டாள். இருந்தாலும் உடனே அவள் ஆபரேஷன் தியேட்டர் சென்று கதவை திறந்து.. நர்ஸ்களிடம் அந்த பேஷண்டை ஸ்பெஷல் வார்டுக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டாள்.

களைப்புடன் அங்கேயே உட்கார்ந்தவள் அடுத்த வினாடி அது நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வேகமாக ஒருவன் பின்னாலிருந்து அவளை நோக்கி வந்து, யாருக்கும் தெரியாத படி, கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னுடைய குரலை மாற்றி.
ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலைஎன்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. பயத்தில் காமினிக்கு வந்த விக்கல் சட்டென்று நின்றுவிட்டது."ஹா.. ஹா, பாத்தியா ஒரு டாக்டருக்கே  வைத்தியம் செஞ்சுட்டேனே..".. என்று சொல்லுவதை கேட்ட 'காமினி' கோபத்துடன் அவனிடம்.. அதுக்காக.. இப்படியா பயமுறுத்துறது ?" என்றாள். "மறுபடியும் சாரி.. இந்த பக்கமா வந்தேன்.. அப்படியே என்னோட தேவதைய ஒரு தடவை சைட்டடிச்சிட்டு போகலாமுன்னு வந்தா.. இங்க நீ ஜன்னல் வழியா குதிச்சு வந்த கதைய கேட்டு, நீ எப்படி இருக்கேன்னு தெரிஞ்சிக்க வந்தேன்.. நீ ரொம்ப டயர்டா.. விக்கிக் கிட்டு இருந்தே.. அதான் என்னோட அதிர்ச்சி வைத்தியம், விக்கல் நின்னுடிச்சி பாரு. இந்த துப்பாக்கி கூட 'தீபாவளி' கேப்பு வெடிக்க என்னோட அக்கா பையனுக்கு வாங்கினதுதான்.. சரி சரி.. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க.. நா அப்புறமா வரேன்..", சொல்லிவிட்டு வெளியேறினான், அவளால் நான்கு  மாதங்களாக காதலிக்கப்படும், காதலன் சிவா.

(அஹா ரெண்டு மேட்டரை கோத்தாச்சு.. இன்னும் ஒரு மேட்டரு தான் பாக்கி.. 'டயமண்டு' மேட்டரு.... சரி சரி.. அதுக்கு சரியான நேரம் கெடைக்காதா என்ன ?)



தன்னை சுதாரித்துக் கொண்டு, பழம் உண்டு, தண்ணீர் பருகி, வழக்கம்போ 'இன்- பேஷண்டுகளை' பார்க்கும் ரவுண்ட்சுக்கு சென்றாள். ரவுண்ட்சு முடிந்து 'அவுட் பேஷண்டுகளை' பரிசோதிக்க தனது அறைக்குள் சென்றாள்.

(மீண்டும் பாஸ்டு பார்வர்டு.. இல்லேன்னா ரொம்ப போரடிக்கும்.... நாம பேஷன்டா ஹாஸ்பிடல் வெளிய நின்னு நெறையா அனுபவச்சிருக்கோம்.. போதும்டி அம்மா.. - இது அம்மன் சம்பத்தப்பட்ட கதை.. அதனால 'சாமி' க்கு பதிலா 'அம்மா')

மதிய உணவுக்கு வீட்டிற்கு செல்ல, டாக்டர்'ஸ் கார் பார்கிங் வந்து தனது கார் கதவை திறந்து போது, எதிர் பக்க கதவின் கண்ணாடியை மூடாமல் சென்றது தெரிய வந்தது.. குனிந்து டிரைவர் சீட்டில் உட்காரும் போது சீட்டில் ஏதோ தட்டுப் படுவது தெரிந்தது.. எடுத்துப் பார்த்தால்.. ஜொலிக்கும் வைரத் தோடுகள் ....பார்த்த உடனேயே தெரிந்தது, அவைகள், தனது பெற்றோர்களால் கோவில் அம்மனுக்கு அணிவிக்கப் பட்டது.

நேரே கோவிலுக்கு சென்றாள்.. அங்கு போலிஸ் குழுமியிருந்தது.. இன்ஸ்பெக்டரிடம் சென்று, அந்த தோடுகளை கான்பித்தாள். தான் பேசும் முன்னரே,காமினி...  வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியேஎன்று பாராட்டினார் பரந்தாமன். "இன்ஸ்பெக்டர் ப் போலீஸ்" என்று அவருடைய சட்டையில் மெட்டல் ப்ளேட் தொங்கியது. "என்ன சொல்லுறீங்க இன்ஸ்பெக்டர், எனக்கு எதுவுமே புரியலே" என்றாள் காமினி.

"இந்த கோவில் பாதுகாப்புக்கு வெச்சிருந்த ரெண்டு கான்ஸ்டபுளும், திட்டம் போட்டு இன்னிக்கு இந்த ரெண்டு வைரத் தோடுகளையும் திருடிட்டு ஓடிட்டானுங்க.. நாங்க தேடிக்கிட்டு இருக்கோம் அவங்களை. உங்களுக்கு எப்படி இந்த வைரத் தோடுகள் கிடைத்தன ?" எனக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

"ஹாஸ்பிட்டலுல என்னோட கார் சீட்டுல இருந்துச்சி.. அடையாளம் நல்லா தெரிஞ்சதுனால, உடனே இங்க வந்துட்டேன்", சொன்னாள் காமினி.

"கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காகக் கொடுத்தார்.." என்று சிணுங்கியது, இன்ஸ்பெக்டருடைய அலைபேசி. "ஹலோ இன்ஸ்பெக்டர் பரந்தாமன் ஹியர், என்னது...., அப்படியா.... நல்லது, நான் உடனே ஸ்டேஷனுக்கு வருகிறேன்" என்று பேசிய இன்ஸ்பெக்டர் தனது அலைபேசியில் வந்த 'காலை'(call) கட் செய்துவிட்டு.. அந்த தோடுகளுடன், காமினியையும் .அழைத்துக் கொண்டு போலிஸ் ஸ்டேஷன் சென்றார்.

ஸ்டேஷனில் ...
இன்ஸ்பெக்டர் பேச ஆரம்பிச்சார் "அப்பாடா இந்த கேஸு ஆரம்பிச்ச ஒரு மணி நேரத்துலேயே சால்வாயிடுச்சு.., நான்தான் போலீஸு கான்ஸ்டபிள் ரெண்டு பேரையும் வீணா சந்தேகப் பட்டுட்டேன்.. அந்த ரெண்டு கான்ஸ்டபிளையும் அடிச்சு கட்டி போட்டுட்டு அவங்க யுனிபோர்மப்
போட்டுக்கிட்டு ரெண்டு திருட்டுப் பசங்க கொவில காவல் காப்பது மாதிரி, சமயம் பாத்து அந்த வைரத் தோடுகளை திருடிட்டு சத்தம் போடாம கொவில்லேருந்து நழுவிட்டாங்க.. வெளியே போலிஸ் உடைல போனதால சந்தேகம் யாருக்கும் வரலை.. இருந்தாலும் அவங்களுக்கு பயம் இருந்திச்சு.. உங்க ஹாஸ்பிடல் பக்கமா போனப்ப உங்க காரோட கண்ணாடி கொஞ்சம் திறந்து இருந்ததால அவுங்க தோடுகளை காருக்குள்ள போட்டு காரோட போகலாம்னு   நேனைச்சப்ப ஹாஸ்பிடல் செக்யூரிட்டி அவுங்கள சந்தேகமா பாத்து என்ன, எதுன்னு கேக்க... அவங்க புதுத் திருடங்க போல... பயத்துலேயே தாறுமாறா ஓட.. ரோட்டுல ஒருத்தன் ஒரு மோட்டார் பைக் மேல மோதி விழ.. அடுத்தவன் தப்பிச்சிட்டான்.. விழுந்தவன்  முழிசச் முழில டிராபிக்கு போலீஸு சந்தேகப் பட்டு அவனை விசாரிக்க.. அவன் எல்லா உண்மையையும் சொல்லிட்டான்.. அவனோட தகவல்படி செயல் பட்ட போலீஸு, அந்த கூட்டாளியையும் பிடிச்சுட்டாங்க, கான்ஸ்டபிள்களையும் காப்பாத்திட்டாங்க.."

"சரி சார்.. எதிர் பாக்காத சம்பவங்கள்.. நா ரொம்ப களைப்பா இருக்கேன்.. பசி கூட.. ஏதாவது பார்மாலிடீஸ் இருந்தா அப்புறமா சொல்லுங்க.. இப்போ நா வீட்டுக்குப் போறேன்", எனச் சொல்லிவிட்டு அவர் பதிலுக்குக் கூட காத்திராமல் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து தனது காரை ஸ்டார்ட் செய்தாள் . வீட்டிற்கு வரும் வரை அவள் மனதில் 'கோவில் அம்மனும்', சிவாவும்' மாறி மாறி வந்து சந்தோஷம் தந்தார்கள்.



பின்குறிப்பு : போலீஸ கெட்டவரா காமிச்சா நல்லா இருக்காது. 'வேலியே பயிர மேஞ்சிதுன்னா நல்லா இருக்குமா?' அதான்.. அவுங்களையும் நல்லவர்களா காட்டி இருக்கேன்..

டிஸ்கி :
1) மொத தடவையா கதை விடுறேன்.... நல்லா இருக்குதா பின்னூட்டத்துல சொல்லுங்க..
2) மறக்காம  இன்ட்லில ஓட்டுப் போடுங்க..
3) பரிசல்காரன் சிறுகதை போட்டிக்கு இதை அனுப்பியுள்ளேன்
4 ) சிகப்புக் கலரில் உள்ள வரிகள் -- பரிசல்காரன் விதிப்படி அமைந்தது..