Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

எனக்குப் பிடித்த 12 பெண்கள் -- தொடர் பதிவு.

'எங்கள் ப்ளாக்'ன் திறந்த அழைப்பிற்கு (open invitation) நன்றிகள். எனது கணக்கில் பன்னிருவர் வருகிறார்கள். 'டஜன்' கூட ஒரு செட் தானே ?

  1. பரமபத நாதன், பரந்தாமனின் துணையான 'ஸ்ரீ, மஹாலக்ஷ்மி'(திருமகள், அலைமகள்)
  2. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியான 'ஆண்டாள்'
  3. சிவனின் ஒரு பாதியான 'உமையவள்' (மலைமகள்)'
  4. சிவனைத் துதிபாடிய 63 நாயன்மார்களில் ஒருவரான 'காரைக்கால் அம்மையார்'
  5. கல்விக் கடவுளான 'ஸரஸ்வதி (கலைமகள்)'
  6. 'சீதை'  (இராமாயண நாயகி)
  7. 'தாரை' (இராமாயண வாலியின் துணைவி)
  8. 'தமயந்தி' (நள தமயந்தி)
  9. 'மண்டோதரி' (இராமாயண ராவணின் துணைவி)
  10. 'நளாயினி' (கணவனை கூடையில் வைத்து தலையில் சுமந்தவள்)
  11. உலகத்தினுள்ள அனைத்தையும் தாங்கும் 'பூமாதேவி'
  12. நான் பெருமையோடு விரும்பும் எனது தாய்நாட்டு அன்னை 'பாரத மாதா'
பின் குறிப்பு : 6 முதல் 10 வரை இடம் பெற்றவர்கள் 'பதிவ்ருதை - கற்புக்கரசி' ஆவார்கள். இன்றும் எங்கள் வீட்டில் உள்ள பெண்டிர் அவர்களின் பெயரைச் சொல்லி எண்ணையால் தரையில் பொட்டு வைத்து, அனைத்தையும் கோடு போட்டு சேர்த்த பின்னரே, தங்கள் தலையில் எண்ணையை தேய்த்துக் கொள்வார்கள். (before taking oilbath )

உபரிக் குறிப்பு : ஆண்கள் எண்ணை தேய்க்கும் முன் பின்வரும்  சிரஞ்சீவிக்களை (எப்போதும் இருப்பவர்கள் - eternal) நினைத்து மேற்சொன்னவாறு செய்வார்கள்.
  1. அஸ்வத்தாமா ( மகாபாரதத்தில் வருபவர் )
  2. பலி (பலி சக்கரவர்த்தி)
  3. வியாசர் (மஹாபாரதம் எழுதியவர்)
  4. அனுமான் (ஆஞ்சநேயர்)
  5. விபீஷணன் (ராவணனின் தம்பி)
  6. கிருபர் (கிருபாச்சாரியார், மஹாபாரதம்)
  7. பரசுராமர் (10 அவதாரங்களில் ஒருவர்)
'எங்கள் ப்ளாக்' திறந்த அழைப்பினை விடுத்ததால், நான் யாரையும் தொடர அழைக்கவில்லை. ஏனென்றால், பெரும்பாலும், எனது பதிவினை (வலைப்பூ) படிப்பவர்கள் யாவரும் 'எங்கள் ப்ளோக்கின்' விசிறியாக இருப்பதாகத் தெரிகிறது.

நன்றி.