Showing posts with label தமாஷ். Show all posts
Showing posts with label தமாஷ். Show all posts

பஸ்ஸில பண்ண கலாட்டா

கூகிளில் பஸ்ஸில, ஏதோ என்னால முடிஞ்சத செஞ்சிருக்கேன்.. இதோ உங்களுக்காக.. 

--------------------------------
மாதவன் : பயணம் செய்யமுடியாத பஸ் எதுன்னு சொல்லு..
பன்னிக்குட்டி ராம்சாமி : கொலம்'பஸ்' , சில'பஸ்', & இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு கூகிள்'பஸ்'
 ----------------------------
ரொம்பநாளா வயித்து வலியால செல்வா கஷ்டப் படுறதால, டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணப் போனாரு..

டாக்டர்
Ramesh சுப்புராஜ்  : இந்த பிராப்ளத்துக்கு இதுக்கு முன்னால எந்த டாக்டர்கிட்டயாவது போனீங்களா ?
பேஷன்ட் 
செல்வா : பக்கத்துத் தெரு டாக்டர் பன்னிக்குட்டி ராம்சாமி ஒரு தடவ போயிருக்கேன்..
டாக்டர்
Ramesh சுப்புராஜ்  : அவரா ? ... யாருக்குமே நல்லதா வைத்தியமோ மெடிகல் அட்வைஸோ பண்ணத் தெரியாதே.. என்ன மெடிகல் அட்வைஸ் பண்ணாரு ?
பேஷன்ட்
செல்வா : மேற்கொண்டு உங்கள கன்சல்ட் பண்ணச் சொன்னாரு..
டாக்டர்
Ramesh Subburaj : !!!!!!!!!!!

------------------------------------------------------------
 வாய் மொழி உரையாடல்

Terror Pandian : God இருக்கார்னு நம்புறியா ?
Ramesh Subburaj : அமாம்.. நிச்சயமா இருக்கார்
Terror Pandian: எப்படி சொல்லுற ?
Ramesh Subburaj : நா, நேர்லய பாத்திருக்கேனே !
Terror Pandian : எப்போ ?
Ramesh Subburaj : டிரையிணுல போறப்பலாம் கடைசி பெட்டில பாத்திருக்கேன்..
Terror Pandian : அடப்பாவி.. அவரு 'Gaurd'டா, நா கேட்டது 'ஜி. ஒ. டி' GOD 

------------------------------------------------------------- 
மாதவன்(நெசமாவே நாந்தானுங்கோ ) : ஆராவது(யாராவது) தலையில குட்டினா அதுதான் 'ஆர்குட்'டா ? (டவுட்டு)
 அனு  :  6 times good = ஆறு குட் = ஆர்குட்
-------------------------------------------
என்னோட ஆன்லையன் பேங்கிங் பாஸ்வேர்டு லாக் ஆயிட்டுது.. இன்னைக்கு பூரா ரிலீஸ் ஆகாது.. அதுனால, உங்கள்ள யாரவது உங்க பாஸ்வேர்ட் கொடுத்தா யூஸ் பண்ணிட்டு நாளைக்கு பத்திரமா பாஸ்வேர்ட திருப்பி தந்துடுறேன்..
-------------------------------------------------------

மார்னிங் வாக்கிங் போனப்ப, ஒரு வீட்டு சுவத்துல விளம்பர போஸ்டர் ஒட்டி இருந்தானுங்க.... அதுல அப்படி ஒன்னும் சுவாரஸ்யம் இல்ல. ஏற்கனவே ஏதோ எழுதி இருந்த இடத்துக்கு மேல அத மறைச்சு இந்த போஸ்ட் ஓட்டிட்டாங்க.. எனக்கு, அதுக்கு கீழ என்னதான் எழுதி இருக்குனு பாக்குறதுக்கு ஆசை.. .. போயி அஞ்சு நிமிஷம் கஷ்டப் பட்டு மேல இருந்த போஸ்டர கிழிச்சுப் பாத்தா.. அங்க என்ன எழுதி இருந்திச்சு தெரியுமா ?
.......................................
......................................
................................
................................
......................................
......................................
................................
......................................
...............................
......................................
................................
.................................
......................................
......................................
................................
................................
இங்கு போஸ்டர் / விளம்பரம் செய்யாதீர்கள்.


டிஸ்கி : இதற்கு சிரித்து கமெண்டு போடாதவர்கள் தலை விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் சொல்லுவதுபோல சுக்கு நூறாக உடைந்துவிடும்.
------------------------------------------------------

ச்சும்மா ஒரு குசும்பாட்டம் !

எடக்கு  மடக்கா யோசிச்சா அதோட பலன்.. இதோ இந்தப் பதிவு..

ஒன்னும் பெரிசா இல்லைங்க சாமி.. ஜஸ்ட்.. டாஷ்போர்டுல, நான் ஃபாலோ பண்ணும் பிலாகுல அப்டேட் ஆன லேட்டஸ்ட் பதினொன்னு போஸ்டுக்குப் போயி, போஸ்ட் படிச்சேனோ இல்லையோ.. இப்படி பின்னூட்டமிட்டு வந்தேன் (8th Oct 2011, around 4:30 PM IST)

"ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்"
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..

இதப் படிச்சிட்டு அந்தப் பதிவாசிரியர் எப்படி ரியாக்ட் பண்ணுறார்னு பாத்தேன். ஒவ்வொருத்தரும் ஒரே விஷயத்த தங்களோட அப்போதைய சூழ்நிலைக்கேற்ப புரிஞ்சிப்பாங்க ... ரியாக்ட் பண்ணுவாங்க..  இதோ அவர்களோட ரியாக்ஷன்.
---------------------------------------------------------
1) நண்பர் ஆர்.வீ.எஸ். கலக்கும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்.

RVS said.. @Madhavan Srinivasagopalan
மாதவா! கதை சம்பந்தா சம்பந்தம் இல்லாம இருக்குன்னு குறிப்பால உணர்த்துகிறாயா? :-))
---------------------------------------------------------
2) ரமணி சார் எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

Ramani said...@Madhavan Srinivasagopalan
எந்த வகையிலும் புரிந்து கொள்ள முடியாதபடி ஒரு பின்னூட்டமிட்டு கலங்க அடித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சங்கத்தின் புகழ் ஓங்குக..
---------------------------------------------------------
3) மாதவி மேடம் எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

middleclassmadhavi said...@ Madhavan Srinivasagopalan
Aamam, enakkum vijay tv-yil, 'athu ithu ethu' program pidikkum! ----- sangath thalaivi post enakku thanE?
-----------------------------------------------------
4) பெயர் சொல்ல விருப்பமில்லையோட இந்தப் பதிவுல கிடைச்ச பதில்

பெசொவி said.. @Madhavan Srinivasagopalan
கீ போர்டு கீ போர்டுன்னு சொல்றீங்களே, அப்போ "லாக்" போர்ட்ன்னு ஒன்னு இருக்குதா?

---- சம்பந்தப் பட்டவர்கிட்ட சம்பந்தமில்லாம பேசுவோர் சங்கம் ---------------------------------------------------------
5) பன்னிகுட்டி ராமசாமி எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

பன்னிக்குட்டி ராம்சாமி said... @ Madhavan Srinivasagopalan...
தண்ணியும் வீணா போயிடுமே,அத ஏன் சொல்லல? (ஆமா நீங்க எந்தத் தண்ணிய சொல்றீங்க?)
--------------------------------------------------------
6) நண்பர் வெங்கட் எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

வெங்கட் said... @ மாதவன்.,
இதென்ன உங்க பரிட்சை பேப்பர்னு
நினைச்சீங்களா..? History-ல கேள்வி
கேட்டா.. Physics-ல இருந்து பதில்
சொல்றீங்க..?!! ( அதுவும் தப்பு தப்பா).
-----------------------------------------------------
7) குழுவாக நடத்தும் 'எங்கள்' பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

எங்கள் said... @Madhavan Srinivasagopalan 
நன்றி (?) மாதவன்

 [ 'எங்களு'க்கு புரியவில்லை போலும், எனவே (?) குறி வந்ததோ ? ]
---------------------------------------------------------

பின்வரும் பதிவர்கள் பதிலேதும் சொல்லவில்லை.. நேரமின்மை காரணமோ ?

8) ஆதிமனிதன் எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

9) தம்பி (மொக்கை)செல்வா எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

10) நண்பர் பாலா எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

11) நண்பர் கோபி எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

---------------------------------------------------------

ஹி.. ஹி.. நா அப்படி ஒன்னும் வித்தியாசமா செய்யலையோ ?
=====================================

சுத்தமா ஒழுக்கத்த ஃபாலோ பண்ணு..

நண்பரோட வீட்டுக்கு போயிருந்தேன்..
நண்பர் அவரோட ஏழு வயசு பையனுக்கு ஒழுக்கம் கத்துக் கொடுத்துக் கிட்டு இருந்தாரு.  அட.. நல்லதுதான.. காது கொடுத்து கேட்டேன் அவர் சொல்லுறத..

"நல்லா கேட்டுக்கோ.. எந்த இடத்துக்குப் போனாலும், அங்க ஏதாவது எழுதி இருந்தா சரியா அத கடை பிடிக்கணும்..... உதாரணமா.. லைப்ரரில 'Silence / சத்தம் செய்யாதீர்'னு இருக்கும்.. அங்க அமைதியா இருக்கணும்..,  'வரிசையில்  வரவும் / Q ப்ளீஸ்' னு எழுதி இருந்தா' -- ஒழுங்கா வரிசையா போகணும்..."

இப்படி ரெண்டு மூணு உதாரணம் சொல்லிக்கிட்டு இருந்தாரு... அவரோட பையனும் கவனமா கேட்டுக் கிட்டு இருந்தான். அஹா.. நாமளும் நம்ம பையனுக்கு இப்படிலாம் சொல்லித் தரணும்னு தோணிச்சு எனக்கு.
--------------
அப்புறமா வேற ஒரு நாள், நாங்க ரெண்டுபேரும் குடும்ப சகிதமா, ஈவினிங் டின்னருக்கு ஒரு ஹோட்டல் போயி சாப்பிட ஆர்டர் பண்ணிட்டு காத்திருந்தோம். நண்பரோட பையன் சாப்புடுறதுக்கு முன்னாடி, 'கை'ய சுத்தம் செய்யணும்னு சொன்னான்.  ஆமாம்.. ஒழுக்கம், சுத்தம் அதலாம் சரியான அளவுல கலந்து, கரைச்சு குடிச்சவனாச்சே..

அவன் கை அலம்பப் போயி நாலஞ்சு நிமிஷம் ஆகியும் எங்களோட டேபிளுக்கு திரும்ப வரலை.. நானும், நண்பரும் கை அலம்பற இடத்துக்கு போயிப் பாத்தா.. அவரோட பையன் அங்க இருந்த Basina சுத்தமா துடைச்சிக் கிட்டு இருந்தான்.. (அடப்பாவி.. இவ்ளோ சுத்தம் தேவையா).

நண்பர் அவன்கிட்ட எதுக்குடா அத சுத்தம் செய்றனு கேட்ட உடனே.. பையன் மேல என்ன எழுதி இருக்குனு பாருங்கன்னு சொன்னான்..  அங்க என்ன எழுதி இருந்திச்சின்னா..

"WASH BASIN"
 
டி(இ)ஸ்கி :
  1. து செல்வா கதைகளுக்கு எதிர் பதிவு என யார் நினைத்தாலும், கம்பெனி பொறுப்பில்லை.. சொல்லிப் புட்டேன் ஆமா. 
  2. ருந்தாலும் WASH & BASIN க்கு நடுவில 'gap' கொடுத்தது போர்டு எழுதின ஆளோட தப்புத்தான.. பையன் என்ன செய்வான்.. 
  3. து பத்து வருஷத்துக்கு முன்னால வந்த இ-மெயில் (சர்தார்) ஜோக்க உல்டா பண்ணி எழுதினது..

25 பைசா இனி இல்லை..

இனிமேல 25 பைசா காயின பணப் பட்டுவாடாவிற்கு பயன்படுத்த முடியாது. கேள்விப் பட்டதும் ஒரு சில சிந்தனைகள்.. மனதில் தோன்றியவை..முழுக்க முழுக்க சொந்தக் கற்பனையே..  மறைமுகமாகவும் எவரையும் குறிப்பிடவில்லை இப்பதிவு.

ரெடி ஸ்டார்ட்.. 

கோவில் உண்டியலுல இப்போது இருக்குற(!) 25 பைசா காசெல்லாம் என்ன ஆகும் ?
இதுக்குத்தான் நாலு நாளு முன்னாடியே உண்டியல ஓபன் பண்ணி.. 25 பைசாவலாம் கோவில் கணக்குல பேங்குல கட்டி இருக்கணும்...
------------------------------
நண்பர் (செல்வாமாதிரி ஒரு ஆளு) சொன்னாரு..
நண்பர் : நா 25 பைசா காயின இப்பவும் 'செல்ல' வைப்பேன்..
நான்     :  எப்படி ?
நண்பர் : இப்படித்தான் பாருங்க, http://www.youtube.com/watch?v=C4ohRdGFvBM
எப்படி செமையா உருண்டு போகுது (செல்லுது) பாருங்க..
நீங்கதான்.. கையால சரியா சுழட்டி விடனும்.. அப்பத்தான் அது சரியாச் 'செல்லும்
-----------------------------
அதே நண்பர் மளிகை கடையில சிப்பந்தியா வேலை பாத்தாருன்னா..
கடை சிப்பந்தி  : உங்க பில்லு அமவுண்டு அம்பது ரூபாய் 75 பைசா..
வந்தவர்  : இந்தாப்பா அம்பது ரூபாய் நோட்டு.. ம்ம்.. ஒரு ரூபாய் காயின்.
கடை சிப்பந்தி : ம்ம்.. 25 பைசா காயின் செல்லாது......
                            ஒரு ரூபாய் காயின் வேணாம், பாக்கி தரமுடியாது......
                            ஒரு ரூபாய் நோட்டு தாங்க...........
வந்தவர் : ஒரு ரூபாய் காயின், ஒரு ரூபாய் நோட்டுல என்ன வித்தியாசம். நோட்டு கொடுத்தா பாக்கி எப்படி சில்லறை தருவ ?
கடை சிப்பந்தி : இப்படித்தான்.. 
நாலு பாகமாக  'ஒரு ரூபாய்' நோட்டை சரியாக மடித்து அதில் ஒரு பாகத்தை கிழித்துத் தொடுத்தார் பாக்கி சில்லறைக்கு பதிலாக. 
----------------------------------------
என்னது, 25 பைசா காயின் செல்லாதா ? அதை ஏன் இவ்ளோ லேட்டா சொல்லுறாங்க ?
நாங்கதான் எங்க ஊருல அம்பது பைசா கூட யூஸ் பண்ணுறதில்லையே..  
நாங்கலாம் அவ்ளோ 'அட்வான்ஸா' இருக்கோமில்ல.. 
----------------------------------------
சரியான முடிவு !!
நிக்கல் உலோகத்தால செய்யப்பட்ட, ஓரூ 25 பைசா காயினோட எடை 2 .5 கிராம் (தகவல் : விக்கிபீடியா ). நாற்பது 25 பைசா காயினோட மொத்த எடை 100 கிராம்.... ஒரு கிலோ நிக்கல் விலை கிட்டத் தட்ட ஆயிரம் ரூபாய் (தகவல் : கூகிள் தேடல்)

அப்ப, பத்து ரூபாய் மதிப்புள்ள, நாற்பது 25 பைசா காயின்கள் செய்ய குறைந்தது  நூறு ரூபாய் செலவு..  இது உலோகத்திற்கான செலவு மட்டும்.. அப்பப்பா .. கண்ணக் கட்டுதே.. 
-----------------------------------------