Showing posts with label பண்டிகை. Show all posts
Showing posts with label பண்டிகை. Show all posts

தீபாவளி வாழ்த்துக்கள்


தீபாவளி திருநாள், வருடத்தில் ஒருநாள், இனிய நாள், இன்பத் திருநாள். சின்ன வயதில் எல்லோருக்குமே பிடித்த பண்டிகைத் திருநாள்.

கிருஷ்ணன் கொடிய எண்ணங்கள் கொண்ட நரகாசுரனை, அழிக்கும் வேளையில், அவன் தான் செய்த கொடுமைகளையும் தனது கெட்ட செயல்களையும் நினைத்து, வருந்தி, வேதனைப் பட்டான். தனக்கு இருந்த கொடிய எண்ணங்கள் எவருக்குமே வர வேண்டாம் என்ற நல்லெண்ணத்துடன், மக்கள் தன்னை 'கொடியவர்களுக்கான உதாரணமாக' நினைத்து தங்களது, வாழ்க்கையில் நல்ல எண்ணங்களுடனே நல்வாழ்வு வாழவேண்டும் என்றான். அவனது நினைவாகவே நாம் தீபாவளி கொண்டாடுவது வழக்கமாக வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்.

இந்த இனியநாளில், நாம் நமது கெட்ட எண்ணங்களையும், செயல்களையும் பட்டாசு கொளுத்துவது போல கொளுத்தி, நமது வாழ்க்கையில் நல்லொளி வீசச் செய்யுவோம்.

திருமணம் ஆன பின்னர் வரும் தீபாவளியை 'தலை தீபாவளி' என சிறப்பாகக் கொண்டாடுகிறோம். 'தலை தீபாவளி' பற்றி பல ஜோக்குகள் பல பத்திரிகையில் படித்திருக்கிறோம். அந்த அளவுக்கு 'தலை தீபாவளி' முக்கியத்துவம் வாய்ந்தது. அது சரி, சக்கரவர்த்தித் திருமகன் இராமபிரான், தனது திருமணம் முடிந்த பின்னர் 'தலை தீபாவளி' கொண்டாடிய இடம் எது ?
  1. அயோத்யாவில் (தன்னுடைய வீடு)
  2. மிதிலையில் (மாமானார் வீடு)
  3. வனப்பகுதி

விடை சொல்லிவிட்டீர்களா ? சரியான விடை -- இந்த கேள்வியே 'சரியானது' இல்லை. ஏனென்றால், நரகாசுரன் காலம் கிருஷ்ணரின் அவதாரத்தில் நடந்தாகும். இராமபிரான், காலம், அதற்கு முன்னரே. எனவே 'தீபாவளிப் பண்டிகை' என்பது இராமபிரான் காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அதுசரி.. வடஇந்தியாவில், தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் சம்பந்தமில்லை என நான் நினைக்கிறேன். புரியவில்லையா.. மேலும் படியும்கள்.

தீபங்களில் ஒளியாயான தீபாவளிப் பண்டிகை, வடஇந்தியாவில், நாம் கொண்டாடும் கார்த்திகை தீபத் திருநாள் போல கொண்டாடுகிறார்கள். அங்கு, 'நரகாசுரன்' கதையால் தீபாவளி கொண்டாடுவதாகத் தெரியவில்லை. 'இராமன், இலங்கையில் வெற்றி கண்டு, தனது துணைவி சீதா பிராட்டியுடன்' அரியணை ஏற, அயோத்யா திரும்பிய நாளையே தீபாவளி திருநாளாகக் கொண்டாடுகின்றனர். எனவே மேலே கேட்கப் பட்ட கேள்வி, அவர்களைப் பொறுத்த அளவிலும் 'சரியானது இல்லை'. 'தீபாவளி' இராமபிரான் காலத்தில் கடைப் பிடிக்கப்பட்டு வந்திருந்தாலும், இராமபிரானின் கல்யாணம் முடிந்து பல வருடங்கள் கடந்து, இலங்கை வெற்றிக்குப் பின்னரே, கொண்டாடப்பட்டு வருவதாக நம்பிக்கை.

என்ன நான் சொல்வது சரிதானே?

வெறுமனே 'தீபாவளி வாழ்த்து' எனச் சொல்லி, 'பத்தோட பதினொன்னு' பதிவு போடவேண்டாம்னுதான் இந்தக் குட்டி செய்தியை இப்ப சொல்லுறேன். இந்த பதிவு கணக்குல வரும்தானே ?


ஆங்.. சொல்ல மறந்துட்டேன்... அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.. அனைத்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும், ஜாக்கிரதையாக பட்டாசு கொளுத்தி / வெடித்து கொண்டாடுங்கள்.

விநாயக சதுர்த்தி

விநாயகனே வினை தீர்ப்பவனே ! வேழ முகத்தோனே, ஞான முதல்வனே..

அனைவருக்கும், விநாயக சதுர்த்தி பண்டிகை (11-09-2010), வாழ்த்துக்கள். தொடங்கும் செயலனைத்தும் விக்னமில்லாமல் (தடையில்லாமல்) வெற்றிக் கனியை தந்திட, ஆணை முகத்தோனை வழிபடுவோம்.
முடிந்தால் இதனையும் காணவும்.

நன்றி : http://engalblog.blogspot.com, http://engalcreations.blogspot.com, என்னை ஓவியம் வரைய தூண்டியமைக்கு.

ஸ்ரீ ஜெயந்தி

'ஸ்ரீ' என்று லக்ஷ்மியை  குறிப்பிடுகிறோம். எனினும் 'ஸ்ரீஜெயந்தி' என்று 'கீதை' வழங்கிய 'ஸ்ரீ கண்ணன் / கிருஷ்ணன் / மாதவன் / மதுசூதனன்' பிறந்த நன்னாளை கொண்டாடுகிறோம். கண்ணனைப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது எதுவுமில்லை.. பல பெரியோர்கள் பல விதமாக அவனின் குணாதிசயங்களை சொல்லி நமக்குத் தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.

இந்த நாளில் பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமிருந்து இரவு, அவன் வருகைக்கு காத்திருந்து.. அவனுக்கு பூஜைகள் செய்து, உணவு அருந்தி விரத்தத்தை பூர்த்தி செய்வது எங்களது வழக்கம். நமது முன்னோர்கள் அவ்வாறு வழக்கம் செய்து வைத்ததை கேள்வி கேட்காமல் தொடர்வது கூட என்னை பொறுத்த வரையில் நல்ல செயலாகும். அவ்வாறு செய்வதனால் ஏதாவது கஷ்டம் வருமாயின் (உ.தா. அல்சர், அசிடிட்டி உள்ளவர்கள்) விரதமிருபதை தவிர்ப்பது சரிதான். எந்த விதத்திலும் கஷ்டமில்லையானால், முன்னோர்கள் சொல் வழி செல்வது, மனதிற்கு மகிழ்வையும், புத்துணர்வையும் தருகிறது. இல்லத்தினை நன்கு தண்ணீரால் அலம்பி, துடைத்து, கோலமிட்டு, கண்ணன் வருவதற்கு வாசலிலிருந்து பூஜை அறை வரை அவனது பிஞ்சு பாதத்தினை பச்சை அரிசி மாவினால் மாக்கோலமிடுவார்கள் வீட்டிலுள்ள பெண்கள். படத்திலுள்ள கால்கள், நான் வரைந்தது (மூன்று வருடங்களுக்கு முன்னர்).  சிலர் எட்டு போட்டும், சிலர் மாவு-நீரில் கைகளை முடிக்கொண்டு தோய்த்து தரையில் குத்து விட்டு கால்களின் அச்சுகளை உருவாக்கியும்,  அதன் மேல் 5 புள்ளிகள் வைப்பார்கள்.
சின்ன வயதில், விரதமிருக்காமல் இருந்தாலும், மாலை பூஜை எப்போது முடியும் எனக் காத்திருந்து.. அதன் பின்னர் கிடைக்கும் பலகார, பழ வகைகளை ஒரு கை பார்க்கும் சுகம் சொல்லி மாளாது. எங்கள் இல்லத்தில், வடை, பாயாசம், முறுக்கு, சீடை (உப்பு, வெல்லம்), அதிரசம், அப்பம், சுழியம்(ஆகார வகைகள்), நீர்மோர், பானகம் (நீர்வகை), ஆப்பிள், நாவல், பேரிகை, கொய்யா (பழ வகைகள்), புளியம்-பிஞ்சு  ஆஹா.. ஆஹா.. எங்கள் அன்னையாரால் இத்தனை வகைகளை எப்படி செய்ய முடிகிறது.. இன்றைய தலைமுறை(நான் உள்பட) மக்களால் அன்றாட வேலைகள் கூட சுமையாக இருப்பதாகத் தோன்றுகிறது.  அட மறந்துட்டேனே.. 'சர்க்கரை தூவிய சூப்பர் வொயிட் வெண்ணை' கூட உண்டு. இதெல்லாம் முதல் நாள் கொண்டாட்டங்கள்.

 இரண்டாம் நாள் எங்கள் ஊரிருள்ள கோவிலில் 'உரியடி, வழுக்குமர' உத்சவங்கள் நடைபெறும். பார்க்க வேடிக்கை தான். 'உரியடி' ஒரு ஜுஜுபி வேலைதான்.. ஆனால் 'வழுக்குமரம்' சற்று ஆபத்தான சமாச்சாரம். அப்போது  தெரியவில்லை..  இப்போது நினைத்தால்.. ..  வழுக்கு மரத்தில் கவனமாக ஏறவேண்டும். எனக்கு ஒரு கஷ்டமு மில்லை.. நான் பார்வையாளன் தானே..





இவ்வாறே 'கண்ணன்' பிறந்த நாளை கொண்டாடி, இவ்வுலகில் எல்லோரும் துன்பத்திலிருந்து விடு பட்டு இன்பத்தில் திளைக்க அவனை வேண்டுவோம்.



'ஸ்ரீஜெயந்தி' - இதில் 'ஸ்ரீ' என்பது யாரைக் குறிக்கிறது ?

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.  



பின்குறிப்பு : நேற்று இரவு 8 மணிக்கு 'சிரிப்பொலி' தொலைக்காட்சியில் 'கண்ணனின் லீலைகள்' திரைப்படம் காண்பித்தார்கள்....  இன்றைய சராசரி திரைப்படத்தினை பார்க்கும் கண்களுக்கு, அந்த படம் மிக மிக நன்றாகவும், பொழுதுபோக்காகவும் இருந்தது.  (ஆனால் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு இடையில் வந்த பிரேக் கஷ்டமாகத்தான் இருந்தது).

சந்தோஷமான 18

இன்றைய ஸ்பெஷல் :
அனைவருக்கும்
(ஆடி)
(பெருக்கு )வாழ்த்துக்கள்  !

சின்ன வயசுல.. இன்றைய தின மாலை நேரத்தில், உறவினர், நண்பர்களுடன், சப்பரவண்டி கட்டிக் கொண்டு தேர் போல இழுத்து வீதி வழியாக, பட்டாசுகளை வெடித்துக் கொண்டு காவேரி ஆற்றங்கரை சென்று, காவிரித் தாயை வழிபட்டு, பலவித அன்னம், எல்லோருக்கும் பரிமாறி உண்டு, இனிய மாலைப் பொழுதை கழிக்கும் சுகம்...   ஆஹா.. என்னவென்பது.

ஆம், இன்றைய தினம் அடிப் பதினெட்டு... இதனை நாங்கள் பதினெட்டாம் பேர் (ஆடிப் பேருக்கு  -- காண்க படம் மேலே) எனச் சொல்லி மேலே சொன்னவாறு கொண்டாடுவோம்.   20-25 வருடகளுக்கு முன்னால் நடந்ததை நினைக்க மனம் புத்துணர்ச்சி பெறுகிறது, சந்தோஷத்தில்.

பின்குறிப்பு  : 'ஆடி' -> 'ஆடி' மாதத்தினையும், 'பெருக்கு' - >'நீர், நில வளங்களை மென்மேலும் உயர்த்து -- பெருக்கு' என்கிற வகையிலும் அமைத்ததாகும்.  சும்மா தமாசுக்கு அணிமஷன் படங்களை 'வார்த்தைக்காக மட்டுமே'(செயலுக்கு அல்ல) போட்டுள்ளேன்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!


தீயவைகள் ஒழிந்து
இன்பங்கள் மலர்ந்து
நல்வாழ்க்கை  தொடர்ந்து
பொங்கட்டும்  பொங்கல் !
பொங்கலோ  பொங்கல் !!

மனம்கனிந்த பொங்கல்
நல் வாழ்த்துக்கள்..

முழுமையான பொங்கல் எது?
மஞ்சள், இஞ்சி, கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை மாலைபோல் கோர்த்து  அணியப்பெற்ற புதுப்பானையில் புத்தம் புதிய அரிசி  (சமீபத்தில் அறுவடை செய்து நெல் நீக்கப்பட்ட அரிசி) பருப்பு, பசு நெய், நல்லதொரு முந்திரி , திராக்ஷை, பாகு வெல்லம் இவையனைத்தும் சரியான அளவில் இட்டு, நமது எதிர்காலம் நல்ல பல விஷயங்களுடன் பொங்கு பொங்கு என்று  பொங்கட்டும் என்பதற்கு அடையாளமாக பொங்கி வழியும் பொங்கல்.