Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

உலகத்தை சரிபண்ண என்ன வழி..?

அப்பாடா.... வெள்ளிக்கிழமை ஈவின்ங் வந்தாலே என்ன ஒரு தனி இன்பம்.. ரெண்டு நாளு வீக்-எண்டு லீவு... கொஞ்ச நேரம் நிம்மதியா(!) கணணி முன்னால உக்காந்து கொண்டு, ஃப்ரீயா 'பிலாக்க' மேயலாம்னு பாத்தா, நம்ம பையன் (ரெண்டாவது வகுப்பு மாணவன்) நம்ம கிட்ட வந்து.. 'அப்பா கம்ப்யூட்டர எனக்கு தாப்பா.. நா கேம்ஸ் வெளையாடனும்.." அப்படின்னு சொன்னான்.

கடுப்பான நான்.. "போடா.. போயி படி.. குவாட்டேர்லி எக்ஸாமு முடியட்டும்.. அப்புறம் நீ வெளையாடலாம்.." அப்படீன்னேன்.

"போப்பா.. நாட்டு நடப்பே ஒனக்கு தெரியலை.. இன்னிக்குத்தான் எக்ஸாம் முடிஞ்சி நாளையிலேருந்து லீவு..". நேத்திக்கு அவன் (இன்றைய எக்சாமுக்கு) பிரிப்பர் பண்ணச்சே கேட்ட கேள்விக்குக் கூட இவ்ளோ ஃபாஸ்டா பதில் வரலை..

'சரி, ஒனக்குத்தான் 10 நாளு லீவாச்சே.. நா ஆஃபீஸு போனத்துக்கப்புறம் வெளையாடு' சொன்னேன், நான்.

சற்று நேரம் கழித்து.. அவன், 'அப்பா.. அப்பா... ரொம்ப போர் அடிக்குது'

ஒரு பேப்பர், பென்சில் கொடுத்து, ஒனக்கு புடிச்ச பழத்த வரைஞ்சு கிட்டு வா.
நிமிடத்தில் ஒரு வட்டம் போட்டு, ஆரஞ்சு கலர் (cryons) அடிச்சிட்ட வந்து சொன்னான்.. "அப்பா எனக்கு பிடிச்சா பழம் ஆரஞ்சு, இங்க பாரு"

என்னத்தான் அவனோட வரையும் தன்மைய நான் மனதார பாராட்டினாலும், அவன் என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது கண்டு.. கடுப்பும் வந்தது.
உடனே எனக்கு ஒரு ஐடியா வந்தது....

நான் அவனிடம், இங்க பாரு.. 'வேல்டு மேப் பஜில் (worldmap puzzle)'... எல்லா துண்டுகளையும் சரியா செட் பண்ணி 'வேல்டு மேப்ப கொண்டு வா', என்று சொன்னேன்.

நான் அவனிடம் கொடுத்த படம், கீழே கொடுத்துள்ளேன்... மனதினுள் நினைத்தேன்... 'பய மாட்டினான்.. இப்போதைக்கு அவனால சால்வு பண்ண முடியாது.. நா நிம்மதியா வலைப்பதிவ நோன்டலாம்னு'
2 - 3 நிமிஷம் கூட முடியல..



அட
நம்ம பையன் அதுக்குள்ள 'வோல்டு மேப்பு' ரெடி பண்ணிட்டான். அவன் காமிசச் படம் -- கீழே..


நா அசந்து போயி கேட்டேன்.. "எப்படிடா இவ்ளோ சீக்கிரம் செஞ்சி முடிச்சே ?".

அவன் சொன்னான், "அப்பா, 'மனுஷனை' சரியாக்கினா, தன்னால 'ஒலகம்' சரியாயிடும், இங்கிலீஷுல சொல்லனும்னா, Set the Man right, The world will be alright.".

'என்னடா சொல்லுற ?', நான் கேட்டேன்.

'அப்பா இதை அப்படியே திருப்பி பாரு, புரியும்', நம்ம பையன் சொன்னான்.

"அட.. அற்புதமா இருக்குதே.. எவ்வளவு உண்மை", படத்த திருப்பி பாத்த நான் சொன்னேன்.

நா கொடுத்த பஜிலுல, அப்படி என்னதான் பின்னாடி இருந்துச்சா..
இதுதான்..


டிஸ்கி : ஆரஞ்சு பழம் வரைக்கும் 'நடந்த உண்மை சம்பவம்' அதுக்கப்புறம்.. நா ஸ்கூலுல படிச்சப்ப 'வாத்தியார்' சொன்ன சின்னக் கதை.... சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி இருந்ததால சொந்த கற்பனையா இணைச்சு எழுதினேன்.

'இன்டலி' ஒட்டு போடுவீங்கதானே ?

அளவா ஆனா முழுசா - 3 (விளம்பரமல்ல)

இந்த படங்கள் சொல்லும் விஷயங்கள் மதிப்பற்றது.. பார்த்துவிட்டு சொல்லுங்களேன், நான் சொல்வது சரியா, தவறா என்று




பெண்சிசு வதையை தடுக்க விழிப்புணர்ச்சி..





















அஹா.. இதோட மகிமைதான் என்னவென்பது.. ... பெண் குழந்தை ஒரு பாரமல்ல, பிற்காலத்தில் நம்மைக் கூட தாங்கும் ஒரு அற்புத மனிதப் பிறவியாகும்..











சரியாச் சொன்னாங்க..

இதை.. இதை.. இதைத்தான் இதே கருத்தை சொல்லுற வாசகங்களை, இன்று காலையில், அலுவலகம் வரும் வழில் சாலையில் பார்த்து அதை பற்றி இந்து சொல்லாலாம்னு இருந்தே.. எதேச்சையா இந்த படம் கிடைச்சுது..

என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுதா..?



என்னமா, ஒரு ஏக்கப் பார்வை..

ஃப்ரைடே மெசேஜ் - 3

சிகரெட் பிடிப்பதனால் வரும் கேடுகள் தெரிந்திருந்தும், அந்த கேட்ட பழக்கத்தை விடமுடியாது பலர் அவதி படுகின்றனர்.
சிகரெட் பிடிக்கும் பழக்கத்தினால் இந்த ஆபத்துகூட காத்திருக்கிறது... இந்த வீடியோவைப் பாருங்கள்..

Friday Message - 2

இனியாவது, ஒத்துமையா இருங்கப்பு....  நம்மோட முந்தைய பாரம்பரிய, கலாச்சார, வழிபாட்டுக்கு உள்ள மகிமை இப்பவாவது, புரியுதா..?

நன்றி :  மின்னஞ்சல் மூலம், இந்த செய்தியை அனுப்பிய, எனது, நண்பருக்கு..
நல்ல  செய்தி என்று நான் உணர்ந்ததால், இதனை இங்கு வெளியிட்டுள்ளேன்.

Friday message - 1

 HEART IS A BEAUTIFUL GARDEN:

Join smilingsmilers for Innovative Mails

Once a Junior School teacher asked her students to bring some potatoes in a plastic bag to school. Each potato will be given a name of the person whom that child hates. Like this, the number of potatoes will be equal to the number of persons they hate. On a decided day the children brought their potatoes well addressed. Some had two, some had three and some had even five potatoes.

The teacher said they have to carry these potatoes with them everywhere they go for a week. As the days passed the children started to complain about the spoiled smell that started coming from these potatoes. Also some students who had many potatoes complained that it was very heavy to carry them all around. The children got rid of this assignment after a week, when it got over.

The teacher asked, "How did you feel in this one week?" The children discussed their problems about the smell and weight. Then the teacher said, "This situation is very similar to what you carry in your heart when you don't like some people. This hatred makes your heart unhealthy and you carry that hatred in your heart everywhere you go. If you can’t bear the smell of spoiled potatoes for a week, imagine the impact of this hatred that you carry throughout your life, on your heart?"

MORAL:
* Our heart is a beautiful garden that needs a regular cleaning of unwanted weeds.
* Forgive those who have not behaved with you as expected and forget the bad things. this also makes room available for storing good things

மின்னஞ்சல் மூலம், இந்த செய்தியை அனுப்பிய வடஇந்திய நண்பருக்கு நன்றிகள்.
   --------- (யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்)

உஷாரையா உஷாரு !!

இரண்டு  தினங்களுக்கு முன் வந்த ஒரு குறுந்தகவல் (SMS)
"CONGRATS-U-HAVE-WON-7000,000-GBP-IN-2010-UK-DOMINION  PETROLEUM-INT'L-MOBILE-DRAWS-SINNING-#40,TO-CLAIM YOUR PRIZE SEND EMAIL TO MR.TERRY:terry11149@hotmail.com" send by Message Centre : 919259155008 dt. 16th May 2010, 11:08 Hrs.

எனக்கு வந்த SMSல மிகவும் சிறந்த காமெடி SMS இதுதான்னு நினைக்கறேன். பின்ன இல்லையா.. நீங்களே சொல்லுங்க.. நா பாட்டுக்கு, அரசாங்க உத்தியோகத்துல என்னால முடிஞ்ச அளவு உழைச்சு(?) சம்பாதிச்சுக்கிட்டு வர்றேன். .. என்னையப் போயி.. சோம்பேறியா நினைச்சுகிட்டு இப்படி முயற்சி செய்றாங்களே. எனக்கு தெரிஞ்சதெல்லாம், மூர் மார்க்கெட் மட்டுமே.. 'பங்கு' மார்கெட் பக்கம் கூட போனதில்ல.. மேலே என்ன நடக்கலாம்னு ஒரு யூகம்.
அந்த ஈமெயில் முகவரியில் தொடர்பு கொண்டால், அவர்கள், பணப் பட்டுவாடா செய்வதற்கு சிறிது முன்-பணம் தேவை என்றும்..  அவர்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு, அந்த முன் பணத்தை செலுத்துமாறும் சொல்லலாம். பின்னர் அவர்கள் நாம் செலுத்திய முன் பணத்தை முழுவதுமாக சாப்பிட்டு விட்டு, பெரிய ஏப்பத்தினை    நமக்குத் தரலாம்... நமக்கு ஏன் சார் வம்பு.. பேசாம இருக்குறதுதான் பெட்டர்.  இதே போன்று செய்தித் தாள்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.. நாம் படிப்பதில்லையா / பார்க்கவில்லையா..?
ஆரம்ப 80களில் எனது அக்காவும் அவருடைய நண்பியும், வாரப் பத்திரிகையில் வந்த புதிர் ஒன்றிற்கு பதில் அனுப்ப, முதல் பரிசாக ஒரு மிக்சி அறிவிக்கப்பட்டது.. ஆனால் அதற்கு ரூ 200 /- அனுப்புமாறும் சொன்னார்கள்.. பணமும் அனுப்பினார்கள் 'நண்பிகள்'. நல்ல வேளை,  பார்சலில் மிக்சியே வந்தது.. பின்னர் மற்ற பலருக்கு பார்சலில் 'செங்கல்' வந்ததாக சொல்லப்பட்டன. ரூ 200 க்கு அன்றைய தினத்தில் தங்கத்தினால் செய்த செங்கல் கூட கிடைத்திருக்கலாம்..  என்னவோ பாவம்  பலர் (சிலரோ?)  களிமண் சுட்ட செங்கலை ரூ.200 க்கு வாங்கினர்.
முதலில் ஒருசிலருக்கு பணமோ, பொருளோ இலவசமாக கிடைப்பது உண்மைதான்.. இல்லேன்னா யாரும் இந்தமாதிரி விஷயங்களா நம்பி ஏமாற மாட்டங்களே.. பின்னால போறவங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.
'குறைந்த  வட்டி', 'ஒரே வருடத்தில் இரட்டிப்பு', 'தங்கம் சேமிப்பு திட்டம்'.. அப்பப்பா.. எவ்வளவோ பாத்தாச்சு.. மக்களில் மோகத்தினால் விளையும் ஏமாற்றம்.. பின்னர் அழுது புரளுவதால் என்ன பயன்? மிகக் குறைந்த நேர காலத்தில், வியர்வை சிந்தாமல் பணம் சேர்க்கும் ஆசையில் வருவதே இந்த அவலங்கள்.
எனது அண்ணன் சொல்லும் ஒரு வசனம் ஞாபகம் வருகிறது..
"There is no short cut in life" (for everything)
---------------------------------- 

Comment please


மேலே உள்ள படத்தினைப் பார்த்தவுடன், உங்களுக்கு என்ன தோண்றுகிறது? பின்னூட்டமாக எழுதவும்..

எனக்கு தோணியது..:  "நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யவும்.. கடவுள் பின்னாலேயே வந்து வழிகாட்டுவார்.."

விக்னத்தை அழிக்கும் விநாயகன்

இன்று விநாயகச்சதுர்த்தில்ல  ?
இல்லையே... ஏன் ?
நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்' சொல்ல வர்ற செய்திய இன்னிக்கு 'இடுகை' இடக் கூடாதா ?
'படம்' சொல்லும் 'பாடம்'.. வாழ்க்கைக்கு ரொம்ப உதவும் பாருங்க.

எனக்குத் தெரிந்த சட்டம்!



"Man stages suicide Drama - Keeps Cops Guessing For 3 Hours From Top Of Tower"

HEIGHT OF TENSION: Thirtyfive-year-old Victor Jebaraj climbed atop a 65-foot-tall cellphone tower at Vijayanagar in Velachery threatening to commit suicide; His wife arrived on the spot and requests him to climb down;  A crowd gathered as the ordeal lastted for three hours; He finally abandoned his attempt and is arrested"
[A News item appeared in (Courtesy) Times of India (chennai edition) dt. 22nd Jan 2009.]

தற்கொலை செய்ய முயன்று வெற்றியடையவில்லை என்றால் இ.பி.கோ. சட்டத்தின் படி தண்டனை உண்டாம். இதணைக் கூட சரியாக செய்யத் தெரியவில்லை என்றா?

இதனை வேறு கோணத்திலும் பார்க்கலாம். ஒருவன் மற்றோருவனை மரணமடையச் செய்தால் ( அல்லது அவ்வாறு முயன்றாலும் ) அவருக்குத்   தண்டனை வழங்குவது ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் ஒருவர் தன்னையே மரணமடையச் செய்வதற்கு முயன்றால் அது எப்படி குற்றம்? 'என் உயிர்', 'என் வாழ்க்கை'.  வாழ்வதா, வேண்டாமா? எனது விருப்பம்', என்று ஒருவன் நினைக்கலாம். அனவது வாழ்க்கையை முடித்துக் கொள்ள(கொல்ல) அவனுக்கு உரிமை இல்லையா? அவனால் உருவாக்கப்பட்ட அவன் வாரிசை கூட  கொல்ல சட்டத்தில் இடமில்லை. ஏனென்றால் அது வேறு ஓர் உயிர்.

எப்பொழுது அவனால் உருவாக்கப்பட்ட ஒரு  உயிரைக் கொல்ல அவனுக்கு அனுமதி இல்லையோ, பிறகு எப்படி மற்றொருவரால் (அவனது தாய், தந்தையாரால்) உருவாக்கப்பட்ட உயிரை (அவனையே) கொல்ல சட்டம் இடம் தரும்?

இதுதான் எனது தீர்ப்பும் கூட.
'நாட்டாமை, தீர்ப்ப மாத்து' ன்னு யாரோ அங்க கூவுற மாதிரி இருக்கு..  எந்த கொம்பன் வந்தாலும், இந்த தீர்ப்ப நா மாத்த மாட்டேன்,  ஹி..  ஹி..  இவ்ளோதான் என்னாலே கொல்ல சாரி சொல்ல முடியுமுங்கோ..





பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!


தீயவைகள் ஒழிந்து
இன்பங்கள் மலர்ந்து
நல்வாழ்க்கை  தொடர்ந்து
பொங்கட்டும்  பொங்கல் !
பொங்கலோ  பொங்கல் !!

மனம்கனிந்த பொங்கல்
நல் வாழ்த்துக்கள்..

முழுமையான பொங்கல் எது?
மஞ்சள், இஞ்சி, கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை மாலைபோல் கோர்த்து  அணியப்பெற்ற புதுப்பானையில் புத்தம் புதிய அரிசி  (சமீபத்தில் அறுவடை செய்து நெல் நீக்கப்பட்ட அரிசி) பருப்பு, பசு நெய், நல்லதொரு முந்திரி , திராக்ஷை, பாகு வெல்லம் இவையனைத்தும் சரியான அளவில் இட்டு, நமது எதிர்காலம் நல்ல பல விஷயங்களுடன் பொங்கு பொங்கு என்று  பொங்கட்டும் என்பதற்கு அடையாளமாக பொங்கி வழியும் பொங்கல்.

Alexander the Great !


மாவீரன் அலேக்சாண்டரைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். பல ஊர்களை/நாடுகளைக் கடந்து வெற்றிகளை மலை போல் குவித்து தனக்கென ஒரு சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்டவர். போரில் வெற்றி பெற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகுமா ?

ஆனாலும்  அவரைப் பற்றிய ஒரு செய்தி கீழே தரப்பட்டுள்ளது. அது, நமது வாழ்க்கைக்குப் பயன் பெரும் என நான் நினைத்ததால், இந்த பதிவு.
படத்தின் மீது கிளிக் செய்து பெரியதாக்கி படிக்கவும். (இடநெருக்கடியால், படம் சின்னதாகிவிட்டது.)

Team Work - கூட்டு (கூடி செய்யும்) வேலை

தலைப்பை நினைத்தாலே ஒரு தெம்பு வருகிறது. எந்த ஒரு வேலையிலும் பலதரப்பட்ட நுணுக்கங்கள், சிரமங்கள் இருக்கலாம். ஒருவர் போல மற்றொருவர் சிந்திப்பதில்லை. பலதரப்பட்ட மக்களுக்கு, பலவித சிந்தனை இருப்பது இயற்கை அல்லவா? எனவே எந்த ஒரு வேலையானாலும், பலரின் ஆலோசனைகளை அறிந்து, அவற்றுள் சிறந்தவற்றை செயல் படுத்தினால் அச்செயலில் வெற்றி பெறுவது எளிதாகுமல்லவா?

பலர் சேர்ந்து ஒரு செயலில் ஈடுபடுவதே டீம் வொர்க் (team work) என்பது. அதனை நம் இனிய தமிழில் 'கூட்டு முயற்சி' எனச் சொல்லலாமென நான் நினைக்கிறேன். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பது நம்மில் பலருக்கு தெரிந்த பழமொழி. பின்வரும் படம், அதனை நன்கு வெளிப்படுத்துகிறது. இப்படம் சிரிக்க மற்றும் சிந்திக்கவும் வைக்கிறதல்லவா? மூவர் சேர்ந்து செய்தால், நன்மை மூவருக்கும் கிடைக்கிறது என்பதை நன்கு உணர்த்துகிறது. இவ்வாறு நடைமுறையில் ஒரு பள்ளத்தை தாண்டலாமா எனக் கேட்காமல், அந்த படம் உணர்த்தும் பொருளை நாம் மனதில் பதிய வைத்துக் கொள்ளலாமே !






விடை தெரியாத கேள்விகள் - II


  
 





நாள் முழுதும் அலுவலகப்பணி அதிகமிருந்ததால், மிகவும் களைத்துப்போய்,   வரவேற்பறையில் இளைப்பாரிகொண்டிருந்த வேளையில், துள்ளிக் குதித்து வீட்டினுள் வந்தான்  என் 5 வயது செல்லக் குட்டி (மகன்).